Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முட்கம்பிகளால் சுற்றி வளைக்கப்பட்ட முகாம்களையும் குண்டுவீச்சுக்களால் இரத்த ஆறாக ஓடிய கடற்கரையையும் பார்த்த பின்னர் இவ்வாறான ஒரு அழைப்பை ஏற்பது என்பது சாத்தியமானதல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முட்கம்பிகளால் சுற்றி வளைக்கப்பட்ட முகாம்களையும் குண்டுவீச்சுக்களால் இரத்த ஆறாக ஓடிய கடற்கரையையும் பார்த்த பின்னர் இவ்வாறான ஒரு அழைப்பை ஏற்பது என்பது சாத்தியமானதல்ல ‐ தமிழாக்கம் GTN

ஐநாவின் 38வது மாடியில் மறுப்பும் பிஸ் போல்ஸ் உம் கொண்ட ஒரு இரவாக இருந்தது அது. அந்த 38வது மாடி அலுவலகத்தை இலங்கை அரசாங்கம் வாடகைக்குப் பெற்று இப்போது ஏழு வருடங்களாகிறது. இலங்கையின் ஐநாவுக்கான புதிய தூதுவர் பாலித கோகன ஐநா பிரதிநிதிகளை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தார். தன்னுடைய சிப்ஸ்ஸையும் பிஸ் போல்ஸ்ஐயும் உண்ணுமாறு அவர் வற்புறுத்திக் கொண்டிருந்தார். ரெட் வைனையோ அல்லது வைட் வைனையோ அல்லது ஒறேஞ் ஜுஸையோ பருகுமாறும் அவர் வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

வவுனியாவிலுள்ள முட்கம்பிகளால் சுற்றி வளைக்கப்பட்ட முகாம்களையும் குண்டுவீச்சுக்களால் இரத்தஆறாக ஓடிய கடற்கரையையும் பார்த்த பின்னர் இவ்வாறான ஒரு அழைப்பை ஏற்பது என்பது சாத்தியமானதல்ல.

கோகண ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கைகளைக் குலுக்கியபடி திரும்பவும் திரும்பவும் இதே கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். இதே 32வது மாடியில் நேசநாடுகளிடையே தான் பணி புரிந்தது எவ்வளவு ஒரு இனிமையான அனுபவம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சம்பளத்திற்காக தான் அதில் பணிபுரியவில்லை என்றார். உலகில் எங்காவது ஓரிடத்தில் உள்ள சிறுவர்களுக்காகத் தான் தான் அங்கு பணி புரிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வளவு காலத்திற்கு அந்த மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று உங்களால் எங்களுக்குச் சொல்ல முடியுமா என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது. பெரும்பாலானவர்கள் இவ்வருட இறுதியிலேயே தத்தமது வீடுகளுக்குத் திரும்பி விடுவார்கள் என்று கோகண பதிலளித்தார்.

மெனிக் முகாமிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பத்தாயிரம் பேருக்கு என்ன நடந்தது? அவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் அவ்வப்பிரதேசங்களிலுள்ள வேறு முகாம்களுக்கு அல்லவா மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு கோகண நையாண்டியுடன் ஆம் அவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தான் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் ஏற்பட்ட கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் வீடு திரும்பவில்லையே என்றார்.

ஐநாவின் மனித உரிமை விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை இரண்டு தரப்பும் குறிப்பாக இலங்கை அரசாங்கமும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்த பிறகும் ஐநாவைச் சேர்ந்த எவரும் அவ்வாறு இலங்கை அரசு மீத போர்க்குற்றம் சாட்டவில்லை என்று தெரிவித்தார்.

பிரித்தானியா தனக்கு விசா தர மறுத்ததாக வந்த செய்தியை நிராகரித்த கோகன இலங்கை அரசாங்கம் யுனிசெப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர்ஐ வெளியேற்றியதை நியாயப்படுத்தினார். ஜேம்ஸ் எல்டர் ஐநாவின் சட்டதிட்டங்களை மீறி நடந்து கொண்டுள்ளதாகக் குற்றமும் சாட்டினார்.

ஐநாவின் தகவல்களின்படி ஐநா பணியாளர்கள் தடுத்த வைக்கப்பட்டுள்ளதோடு சித்திரவதைக்கும் ஆளாகியுள்ளனர். இந்த ஐநா பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியது. ஆனால் கோகன அதற்குப் பதிலேதும் அளிக்கவில்லை. அவர் தனது சக பணியாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். நீண்டநேரமாக செய்தியாளர்களுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்தார். இது இலங்கை இராணுவம் படுகொலை மேற்கொண்டதாகக் காட்டப்பட்ட வீடியோவிலிருந்து வெகுதொலைவில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக உணர்த்தியது. அந்த உரையாடல்கள் அதிலிருந்து வெகுதொலைவிலானவையாக இருந்தன. அவை கரட், சிப்ஸ் மற்றும் மீன் போல்ஸ்; பற்றியனவாக அமைந்தன. இன்னொன்றை எடுங்கள் என்றார் கோகண.

http://www.globaltamilnews.net/tamil_news1...14806&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.