Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செயலின்றி முடங்கிக் கிடக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவுகளை நீக்க சிறிலங்கா முடிவு

Featured Replies

மனிதார்ந்த பணிகளில் ஈடுபடாது முடங்கிக் கிடக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவுகளை நீக்குவதற்கு சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விபரங்களை ஊடக விளம்பரங்கள் மூலமாகப் பெறும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பிரதமர் வசம் உள்ள உள்நாட்டு நிர்வாக அமைச்சின் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகம் வெளியிட்டுள்ள ஊடக விளம்பரத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் தற்போதைய செயற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிவிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.

பல அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது முகவரிகளை மாற்றிக் கொண்டுள்ளன, ஊடக விளம்பரத்திற்கு அவை பதிலளிக்கவில்லை என்றால் அவற்றின் பதிவுகள் நீக்கப்படும் என செயலக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

‘சில அரச சார்பற்ற நிறுவனங்கள் குறிப்பிட்ட அலுவலகங்களில் தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ளன. ஆனால், எதனையும் செய்வதில்லை. பெயர்ப் பலகைகளில் மட்டுமே அவை தங்கி உள்ளன. அத்தகைய தொண்டு நிறுவனங்கள் குறித்த தகவல்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றன. மாவட்ட மற்றும் பிரதேச செயலர்களுக்கும், அவர்களது பகுதிகளில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்த விபரங்களைச் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி.

நாட்டில் 1,300 அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்நாட்டு நிர்வாக அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பல அமைப்புக்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற 20,000 அரச சார்பற்ற நிறுவனங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

புதினம்

சுனாமியோடு உள்ளே புதிது புதிதாக பல தொண்டு பெயரின் புலநாய்வு நிறுவனங்கள் உள் நுளைந்து தங்களின் புலநாய்வு வேலையை செய்யும் நிலையை அடந்தன.. அதில் சில இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் சில அரசுக்கு ஆதரவு இல்லாமலும் நடந்து வந்தன.. பல புலநாய்வு அமைப்புக்கள் ஒரே புலநாய்வு அமைப்பின் வேறு வேறு வேறு வேறு வேலைகளுக்காக வேறு வேறு பெயர்களில் உள் நுளைந்தன.

சுனாமி எங்களை பலமாகவே தாக்கி விட்டது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.