Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசியல் தலைமைகள் மீது ஈழத்தமிழர்கள் இன்னும் நம்பிக்கைகொண்டுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ்முரசம்

"வாய்மூடி மௌனியாக இருக்கும் கூட்டமல்ல நாங்கள்,வாளெடுத்து மானம் காக்கும் மானத்தமிழினம் நாங்கள்”இந்த வசன நடையை எங்கோ ஒரு நாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான திரைப்படத்தில் கேட்ட ஞாபகம்.

அந்த அளவு தமிழ் உணர்வுடனும் தமிழ் மீதும் பற்றுக்கொண்டவராக தன்னை அடையாளப்படுத்திவந்த கருணாநிதி தனது உறவுகள் வகை தொகையின்றி கொல்லப்படும்போது சரி முள்வேலிக்குள் அகப்பட்டு கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது சரி சினிமாத்தனத்துக்காவது எதுவும் செய்யவில்லை.

ஆனால் இன்று சிங்கள அரசுக்கு சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் கறையினை களையும் பணியில் இந்திய மத்திய அரசுடன் கைகோர்த்து கருணாநிதி நடவடிக்கை மேற்கொண்டுவருவது இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழர் மத்தியில் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் ஐந்து மனித்தியாலங்கள் மட்டும் பல முகாமை சுற்றிப்பார்த்துவிட்டு “முகாம் சிறப்பாக இயங்குகின்றன.மக்கள் சந்தோசமாக உள்ளனர். ஊடகங்களும்,மனித உரிமைகள் அமைப்புகளும் தான் பொய் கூறுகின்றன. தமிழக பாராளுமன்ற குழவினர்

தங்களுக்கு என்றாவது,எப்பவாவது தமிழக முதல்வர் கைகொடுப்பார் என அன்று முள்ளியவாய்கால் பகுதியில் நம்பிய ஆயிரக்கணக்கான உயிர்கள் நம்பியே மடிந்தது.நம்பிக்கெட்ட இனமாக அன்று தன்னை இனம் கண்டுகொண்டது. இத்தனைக்கும் தமிழ் மீது பற்றுக்கொண்டவராக தன்னை அடையாளம் காட்டிவரும் தமிழக முதல்வர் தமிழ் மக்களுக்கு கைகொடுப்பார் என்ற நம்பிக்கையே அது.

இதற்கு மேலாக வன்னியில் இருந்து சிங்கள படையினரால் வலுக்கட்டாயமாக முள்வேலி முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ள மக்கள் சர்வதேச சமூகத்தை விட தமது உறவான தமிழக அரசியல் தலைமைகளையும் தமிழக முதல்வரையும் நம்பும் நிலையை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என்பதே இன்று இலங்கை வந்துள்ள தமிழக பாராளுமன்ற குழுவின் செயற்பாடுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

பல நாட்களாக முகாமின் சுற்றுவட்டாரத்தில் தங்கியிருந்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி அம்மக்களின் கஸ்டங்கள்,நிலைமைகள் தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கடும் அற்க்கைகளை விடுத்துவருகின்றன.

ஆனால் சுமார் ஐந்து மனித்தியாலங்கள் மட்டும் பல முகாமை சுற்றிப்பார்த்துவிட்டு “முகாம் சிறப்பாக இயங்குகின்றன.மக்கள் சந்தோசமாக உள்ளனர். ஊடகங்களும்,மனித உரிமைகள் அமைப்புகளும் தான் பொய் கூறுகின்றன.இலங்கை அரசு அவர்களை சிறப்பாக கவனித்து வருகின்றது”என உடனடியாக இந்த தமிழக பாராளுமன்ற குழவினர் தெரிவித்துள்ள கருத்து எவரையும் ஆச்சரியப்படவைக்கவில்லை.

காரணம் இவர்களது வருகை குறித்து அதன் நோக்கங்கள் குறித்து ஏற்கனவே இந்திய எதிர்கட்சிகள் விலாவாரியாக சொல்லிவிட்டன.

தமிழக முதல்வர் தமது இறுதிக்காலத்தில் தமது இனத்துக்கு செய்யும் மாறாதவடுவாக இந்த நடவடிக்கை அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அத்துடன் இந்த நடவடிக்கைக்கு துணைபோயுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் தொல்.திருமாவளவன் இதுவரை எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை.காரணம் அவருக்கு குழக்கு தலைமை பொறுப்பு எடுத்துவந்த டி.ஆர்.பாலு விடுத்த கண்டிப்பான உத்தரவே காரணமாகும்.

என்னவாகவிருந்தாலும் இந்த குழு ஒன்றினை விளங்கிக்கொண்டிருக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.அதாவது தமிழர்களின் போராட்டத்தில் இந்தியா மேற்கொண்ட தலையீடு காரணமாகவே தமிழர்களுக்கு இன்றைய நிலை ஏற்பட்டது.அதனை யாழ்ப்பாணத்தில் அவர்கள் மேற்கொண்ட சுற்றுலாவின்போது அங்கு மக்கள் தொடுத்த கேள்விக்கணைகளும் யாழ் பல்கலை மாணவர்களும் தொடுத்த கேள்விக்கணைகளுமே புரியவைத்திருக்கும்.

இந்த நிலையில்; நாங்கள் ஒன்றை நம்புகின்றோம்.இந்த தூதுக்குழுவில் பிரசன்னமான பலர் ஈழ தமிழர் விரோத போக்கைக்கொண்டிருந்தாலும் கலைஞரின் மகளும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போன்றோர் எமது மக்களின் இன்றை நிலை தொடர்பில் இந்திய மக்களுக்கும்,தமிழக அரசியல் தலைமைகளுக்கும்,சர்வதேச சமூகத்துக்கும் தெரிவிப்பார்கள் என்ற அசையாத நம்பிக்கையை ஈழ தமிழர்களுடன் புலம்பெயர் தமிழர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஈழத்தமிழர்கள் இன்னும் தமிழக அரசியல் தலைமைகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதற்கு அத்தாட்சியே முகாமுக்குள் சென்ற குழுவினரை அந்த மக்கள் தமது உறவாக எண்ணி வரவேற்று தமது உள்ளக்குமுறலை வெளிகொட்டினர்.

எனவே ஏதாவது எதிர்பார்த்து தமது உறவுகளின் அவலங்களை வெளியில் கொண்டுவர தயங்காமல் அந்த உறவுகளின் உண்மைத்தன்மையை வெளிக்கொணர உதவவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

http://www.swissmurasam.net

நன்றி சுவிஸ்முரசம்

மேலும் சில படங்கள்

kpdwnjrbesunpr45pelyor5.jpg

kpdwnjrbesunpr45pelyor5.jpg

kpdwnjrbesunpr45pelyor5.jpg

படங்கள்: daily mirror (lk)

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சில படங்கள்

kpdwnjrbesunpr45pelyor5.jpg

படங்கள்: daily mirror (lk)

ஒரு கொலை காரனுக்கு என்ன கவுரவம் செய்யிறாங்கள்..

முள்ளி வாய்க்கால்ல‌ எங்கட இனம் அழிஞ்சு ஆறு மாதம் கூட ஆக்க வில்ல.. எங்கட‌ இனத்தை அழிச்ச ஒரு கொடியவனுக்கு இந்த கவுரவிப்பு....

தமிழ் நாட்டு அரசியல் வாதியல் கோமாளி என்று அவன் சும்மாவா சொன்னான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.