Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துரோகத்தின் முடிக்குரியவராகும் கலைஞர்

Featured Replies

இலங்கை சென்றிருந்த இந்திய எம். பிக்கள் தூதுக்குழுவை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.கருணாநிதி நேற்று மாலை வர வேற்றார். நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் தமது விஜயம் குறித்து அறிக்கையை அங்கு வைத்து முதல்வரிடம் கையளித்தனர்.அதன் பின்னர் அவர் பத்திரிகையாளரிடம் பேசும் போதுபருவ மழை ஆரம்பமாகும் முன்னர் அகதிகளை மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற இந்திய நாடாளுமன்ற தூதுக் குழுவின் கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டதாகவும் முதல்வர் மு.கருணாநிதி கூறினார்.

தமது ஆட்சியினை தக்க வைத்து கொள்வதற்காக தமிழ் நாடு மற்றும் இந்திய அரசியல் கட்சிகள், தமிழீழ மக்களின் போராட்டத்தினை எந்தவித குற்ற உணர்வோ, கூச்சமோ இல்லாமல் பாவிப்பது ஒரு தொடர்கதை. ஆனால் இந்த வருடம் தாயகமண்ணில் தமிழீழ மக்கள் ஆயிரக்கணக்காக சிங்கள இனவெறி அரசினால் இந்திய அரசுடன் சேர்ந்து கொன்று குவித்துக்கொண்டிருந்த வேளை, தமிழக அரசு தமது ஆட்சி இருப்புக்காக தமிழீழ மக்களின் இரத்தத்திலும் சதையிலும் நடந்து நாடகமாடி தனது அரசியல் வெற்றிக்காக அதனை எவ்வாறு மாற்றினார் என்பது தெரியும்.

இதில் குறிப்பாக சிங்கள அரசு, இந்திய அரசின் உதவியுடன் கனரக ஆயுதங்கள் மோட்டார்கள் பாவித்து மக்களை தினம் தினம் கொன்றது. அந்தவேளை ஒருனாள் உண்ணாவிரதம் இருந்து பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தபோது கருணா நிதி பின்வருமாறு கூறினார் அதாவது” இலங்கை அதிபர் ராஜபக்ஸே யுத்த நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளார், தவிர அவர் பொது மக்கள் மீது கனரக ஆயுதம் பாவிப்பதனையும் நிறுத்துமாறு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்” என கூறி சிங்கள அரசின் இனப்படுகொலையினை நியாப்படுத்தி மேலும் இறுதி நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்படுவதற்கும் காரணமாக இருந்தார்.

தற்போது இலங்கை அரசு தமிழ் மக்களை முகாம்களிற்குள் முட்கம்பி வேலியிட்டு அடைத்து வைத்து சித்திரவதை செய்வதனை உலகமே நேரில் கண்டு அதனை ஒப்புவித்து கொண்டிருக்கும் போது மீண்டும் தனது துரோக படலத்தினை ஆரம்பித்துள்ளார். அதாவது அனைத்துலக சமூகம் இலங்கை அரசுக்கு சில நெருக்கடிகளை ஏற்படுத்தி அந்த மக்களை விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும்போது இலங்கை அரசினை காப்பாற்றும் இந்திய அரசின் துரோகதனத்திற்கு முண்டு கொடுப்பதாகவே நேற்றைய பேட்டி இருந்தது. அதாவது மகிந்தவின் பொய்களுக்கு வலுசேர்த்து, தமிழ் மக்களின் கொடுமைகளை மறைத்து, 300,000 மக்களின் துன்பியல் வாழ்வில் தனது துரோகபடலத்தினை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் கருணா நிதி ஈழத்தமிழர்களின் துயரங்களை வைத்து நாடகம் ஆடி தனது குடும்ப அரசியலிற்காக, தன் நாட்டு தமிழரையும் ஏமாற்றி, தமிழீழ தமிழரையும் ஏமாற்றுவதன் மூலம் உலக தமிழின விரோத முடிக்குரியவராகின்றார். இவர்களை சிலவேளை வரலாறு மன்னித்தாலும் இந்த துரோக படலங்களை எங்காவது ஒரு மூலையில் அடங்கி ஒடுங்கி சித்திரவதைப்பட்டு கொண்டிருக்கும் ஈழத்தமிழன் மறக்கமாட்டான்.

http://www.eelanatham.net/news/important

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.