Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சதிப்புரட்சி நேர்ந்தால் இந்தியா எப்படி நடந்துகொள்ளும்?

Featured Replies

இலங்கையில் ஜனநாயகக் கட்டமைப்பு முறைமை திடீரெனக் குழப்பமடையுமானால் இந்தியா எப்படி நடந்துகொள்ளும் என்பது குறித்து புதுடில்லியின் கருத்தை உத்தி யோகப்பற்றற்ற முறையில் உரைத்துப் பார்த்து அறிந்து கொண்டிருக்கின்றது கொழும்பு.

நாட்டின் பாதுகாப்புத் துறைக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப் பதற்றமான சூழலில், ஜனநாயகக் கட்டமைப்பு முறைமை திடீரெனப் பாதிக்கப்படலாம் என்ற பீதி பரவியுள்ள பின்னணியிலேயே இவ்வாறு புது டில்லியின் கருத்தைக் கொழும்பு தட்டிப்பார்த்திருப்பதாகக் கொழும்பு ஆங்கிலவார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் தமது பணி முடிந்து வெளியேறும் கொழும்புக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்துக்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்களின்போதே, இலங்கையில் ஜனநாயகக் கட்டமைப்பு முறைகள் முடக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பது பற்றிய விடயம் பேசப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இவ்விடயத்தை ஒட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட சில அச்சங்களை அடுத்து, இது குறித்து புதுடில்லியில் உள்ள அரசுத் தலைவர்களுக்கு அலோக் பிரசாத் உடன் அறிவுறுத்தினார் அறியவருகின்றது.

அத்தகைய சூழ்நிலை ஒன்று ஏற்படுமானால், இலங்கையில் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட அரசுக்கு முழு ஒத்துழைப்பு, உதவி அளிக்கப்படும் என்பதே இந்திய அரசின் உறுதியான நிலைப்பாடு எனக் கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இது, முன்னர் பிரிவினைவாதக் குழுவாக இருந்த "புளொட்" அமைப்பு, மாலைதீவின் தலைநகர் மாலேயில் இருந்த அரசு மீது தாக்குதல் நடத்தியபோது மாலைதீவு ஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் இந்தியப் படைகள் அங்கு விரைந்தமையைப் போன்ற அடிப்படையிலேயே அமையும். இந்தியப் படைகள் அங்கு மாலைதீவில் இறங்கி, சட்டம் ஒழுங்கை வழமைக்குக் கொண்டு வருவதற்கு மாலைதீவு தேசிய சேவைப் படைகளுக்கு உதவியிருந்தன. இப்படி அந்தப் பத்திரிகைச் செய்தி தெரிவித்தது.

Edited by அன்புச்செல்வன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல யோசினதான் இதுக்கு முதலில ரணில பிடிச்சு கையூட்டு குடுத்து ராணுவத்த கையுக்க கொண்டுவரவேணும்

ராணுவத்தோட நேரா டீல் போட்டா இன்னும் நல்லது. மறைவா இருக்கிற கிழக்கில போராளிகள பிள்ளையானக்கொண்டு உள்ள போய் சிங்களவன அமுக்கலாம். கருணாவயும் போடலாம் ஒரு கல்லில பல மாங்கா விழுத்தலாம். எல்லாத்துக்கும் தலைவர் வரவேணும். நவம்பர் 27ம் திகதி வருவார்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசினதான் இதுக்கு முதலில ரணில பிடிச்சு கையூட்டு குடுத்து ராணுவத்த கையுக்க கொண்டுவரவேணும்

ராணுவத்தோட நேரா டீல் போட்டா இன்னும் நல்லது. மறைவா இருக்கிற கிழக்கில போராளிகள பிள்ளையானக்கொண்டு உள்ள போய் சிங்களவன அமுக்கலாம். கருணாவயும் போடலாம் ஒரு கல்லில பல மாங்கா விழுத்தலாம். எல்லாத்துக்கும் தலைவர் வரவேணும். நவம்பர் 27ம் திகதி வருவார்தானே!

அதற்கு முன் நல்லவைத்தியரைப்பார்க்கவும்

எதுக்கெடுத்தாலும் தலைவர்

வருவார்

அது இது என்று புலம்பலாக்கிடக்கு......

முதலில் உம்மைப்போன்ற ஒருவரைக்காப்பாற்றியாகவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல யோசினதான் இதுக்கு முதலில ரணில பிடிச்சு கையூட்டு குடுத்து ராணுவத்த கையுக்க கொண்டுவரவேணும்

ராணுவத்தோட நேரா டீல் போட்டா இன்னும் நல்லது. மறைவா இருக்கிற கிழக்கில போராளிகள பிள்ளையானக்கொண்டு உள்ள போய் சிங்களவன அமுக்கலாம். கருணாவயும் போடலாம் ஒரு கல்லில பல மாங்கா விழுத்தலாம். எல்லாத்துக்கும் தலைவர் வரவேணும். நவம்பர் 27ம் திகதி வருவார்தானே!

எல்லாத்துக்கும் தலைவர் வரவேணும். நவம்பர் 27ம் திகதி வருவார்தானே!

அதற்கு முன் நல்லவைத்தியரைப்பார்க்கவும்

எதுக்கெடுத்தாலும் தலைவர்

வருவார்

அது இது என்று புலம்பலாக்கிடக்கு......

முதலில் உம்மைப்போன்ற ஒருவரைக்காப்பாற்றியாகவேண்டும்

அண்ணே என்னோட சேத்து இன்னும் ரெண்பேர அனுப்பினா ஒத்துகொள்ளுவன். சீமான் சொல்லியிருக்கிறார் நெடியவன் சொல்லியிருக்கிறார் சீமான் இதுக்காக கட்சியே துடங்கியிருக்கிறார் நெடியவன் இதுக்காக பலருக்கு பட்டம் குடுத்து ஒதுக்கியிருக்கிறார். எதிர்பாத்து காத்திருக்கோம் கைவிட்டிடாதேங்கோ. நம்பிக்கை துரோகம் எல்லாத்தயும் விழுங்கிடும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது, முன்னர் பிரிவினைவாதக் குழுவாக இருந்த "புளொட்" அமைப்பு, மாலைதீவின் தலைநகர் மாலேயில் இருந்த அரசு மீது தாக்குதல் நடத்தியபோது மாலைதீவு ஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் இந்தியப் படைகள் அங்கு விரைந்தமையைப் போன்ற அடிப்படையிலேயே அமையும். இந்தியப் படைகள் அங்கு மாலைதீவில் இறங்கி, சட்டம் ஒழுங்கை வழமைக்குக் கொண்டு வருவதற்கு மாலைதீவு தேசிய சேவைப் படைகளுக்கு உதவியிருந்தன. இப்படி அந்தப் பத்திரிகைச் செய்தி தெரிவித்தது.

மாலைதீவுக்கு புளட்டை அனுப்பியதே இந்தியா தான். இலங்கையில் சதிப்புரட்சி நடந்தால் தனக்கு என்ன இலாபம் கிடைக்கும் என்று நினைத்துத்தான் இந்தியா நடந்து கொள்ளும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.