Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடிசா அரங்கில் உலகத் தமிழ் மாநாடா? கொதிப்பிலுள்ளனர் கோவை நகர் மக்கள்!

Featured Replies

கண்காட்சிகள் நடத்தப்படும் கொடிசியா அரங்கில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்த அரசு முடிவு செய்திருக்கிறது என பரவியுள்ள தகவல்,கோவை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் 9ஆவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு, கோவை மாவட்ட மக்களைப் பெரிதும் மகிழ்ச்சிப்படுத்தியது. அதேநேரத்தில், மிகக்குறுகிய கால இடைவெளியில் மாநாட்டை நடத்த திட்டமிட்டதில் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

வழக்கமாக, உலகத் தமிழ் மாநாடு நடக்கும் ஊர்களில் புதிய குடியிருப்புகள், வீதிகள், பாலங்கள் என அனைத்து விதமான கட்டமைப்பு வசதியும் செய்து தரப்படும். இதனால், அந்த நகரத்துக்கும், நகர மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.ஆனால், 4 மாத இடைவெளியில் நிரந்தர கட்டமைப்பு வசதி எதுவும் செய்ய வாய்ப்பில்லை என்று கோவை மக்கள் மத்தியில் அதிருப்தி பரவியது. திடீரென மாநாட்டை பல மாதங்களுக்குத் தள்ளி வைப்பதாக அரசு அறிவித்தது. உலகத் தமிழர் கூட்டமைப்பின் அனுமதி கிடைக்காததே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

தற்போது 9ஆவது உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பதிலாக உலகத் தமிழ் செம்மொழி மாநாடாக ஜூன் 24இலிருந்து 27 வரை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. உலகத் தமிழ் மாநாடுக்கு இணையாக இந்த செம்மொழி மாநாட்டை நடத்துவதே அரசின் முடிவாகத் தெரிகிறது.மாநாட்டுக்கு இன்னும் 8 மாத இடை வெளி இருப்பதால் கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல மாத இடை வெளி இருப்பதால், நிரந்தரக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும் என்ற நம்பிக்கை பிறந்தது. இந்த நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதத்தில், உலகத் தமிழ் மாநாட்டை கொடிசியா அரங்கிலேயே நடத்த அரசு முடிவு செய்திருகிறது எனத் தெரிகிறது. இதனால், கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கென்று புதிதாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.

கொடிசியாவில் இந்த மாநாட்டை நடத்தினால், கொடிசியா அரங்கிற்குப் பெயர் கிடைக்குமே தவிர, ஊருக்கு எந்தப் பயனும் இல்லை; இங்கு மாநாடு நடந்ததற்கான எந்தவொரு நினைவும் இந்த ஊரில் மிச்சமிருக்கவும் வாய்ப்பில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.