Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு காதோடு காதாக பேசுகிறது

Featured Replies

சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியுமா ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு?

ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவலொன்று பரவி வருவதால் குழப்பமடைந்துள்ள ஜனாதிபதி இராணுவ சேவையில் பணியாற்றிவரும் அதிகாரியான சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியுமா என ஆராய்ந்து பார்த்து உடனடியாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டமா அதிபர் மொஹான் பீரிஸிற்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது இராணுவத்தில் பணியாற்றிவரும் பிரதான அதிகாரியொருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என ஜனாதிபதிக்கு நெருங்கிய சட்டத்தரணிகள் சிலர் சுட்டிக்காட்டியதை அடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இராணுவத்தின் சிரேஷ்ட உறுப்பினரான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதி வழங்கிய பணி நீடிப்பு டிசம்பர் மாதம் 18ம் திகதி முடிவடையவுள்ளது. இவ்வாறான நிலையில், ஜனாதிபதி கடந்த ஜூலை 15ம் திகதி ஜெனரல் சரத் பொன்சேகாவை கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக இரண்டு வருடகாலத்திற்கு நியமித்தார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் பணி நீடிப்பை எதிர்பார்க்கப் போவதில்லையென சரத் பொன்சேகா ஏற்கனவே தெரிவித்திருப்பதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புச் சபைக் கூட்டம் இரண்டு வாரங்கள் கூட்டப்படவில்லை?

ஜனாதிபதியினால் வாரந்தோறும் கூட்டப்படும் பாதுகாப்புச் சபைக் கூட்டம் ஜனாதிபதிக்கும் கூட்டுப் படைத் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் இடையே நிலவும் உட்பூசல்கள் காரணமாக இரண்டு வாரங்கள் கூட்டப்படவில்லையென ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வாரந்தோறும் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 9 மணி முதல் மதியம் வரை நடைபெறும் பாதுகாப்புச் சபைக் கூட்டம் இறுதியாக கடந்த 7ம் திகதி புதன்கிழமையே நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி, முப்படைத் தளபதிகள், காவல்துறைமா அதிபர், புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்வதுடன், நிதியமைச்சின் செயலாளர் வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் கலந்துகொள்வதுண்டு.

இவர்கள் அனைவருக்கும் புதன்கிழமை முற்பகலில் பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்காக நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த இரண்டு வாரங்களாக பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடத்தப்படமாட்டாது என கடந்த செவ்வாய்க்கிழமை இரவே அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சரத் பொன்சேகாவின் தலைமையில் கூட்டு நடவடிக்கைத் தலைமையகத்தில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைக் குழுவின் கூட்டங்கள் தொடர்ந்தும் நடைபெற்றுவருவதாக மேற்கூறிய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதியோ பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோ, ஏனைய அமைச்சுக்களின் அதிகாரிகளோ கலந்துகொள்வதில்லை. இந்த நிலையில், நாளை சரத் பொன்சேகா வெளிநாடு சென்ற பின்னர் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி எண்ணியிருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடகத்தகவல் மையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சிரந்தி ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக 1 மணி நேரம் மக்கள் அவதி?

இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு ஆர். பிரேமதாஸா விளையாட்டரங்கில் நடைபெறும் இராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்ளவிருந்த ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நேற்று முன்தினம் பிற்பகல் 4.30 முதல் 5.30 வரை அலரி மாளிகையிலிருந்து பிரேமதாஸ விளையாட்டரங்கு அமைந்துள்ள அருகிலுள்ள வீதிகள் மூடப்பட்டதால் அலுவலகப் பணி முடிவடைந்து வீடு செல்லும் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சுமார் 5 நிமிடங்கள் மாத்திரமே வீதியை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் சிரந்தி ராஜபக்ஷவின் ஒப்பனை நடவடிக்கைகளுக்கு அதிக காலம் சென்றதால் இந்தத் தாமதம் ஏற்பட்டதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீதித் தடை காரணமாக தொடரூந்தில் பயணிக்கும் பலர் தமது நேரத்திற்குரிய தொடரூந்துகளை தவறவிட்டு, நடு இரவு வரை கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.

நன்றி இணைய இணைப்பு : http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16300&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியுமா ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு?

சிரந்தி ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக 1 மணி நேரம் மக்கள் அவதி?

இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு ஆர். பிரேமதாஸா விளையாட்டரங்கில் நடைபெறும் இராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்ளவிருந்த ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நேற்று முன்தினம் பிற்பகல் 4.30 முதல் 5.30 வரை அலரி மாளிகையிலிருந்து பிரேமதாஸ விளையாட்டரங்கு அமைந்துள்ள அருகிலுள்ள வீதிகள் மூடப்பட்டதால் அலுவலகப் பணி முடிவடைந்து வீடு செல்லும் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சுமார் 5 நிமிடங்கள் மாத்திரமே வீதியை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் சிரந்தி ராஜபக்ஷவின் ஒப்பனை நடவடிக்கைகளுக்கு அதிக காலம் சென்றதால் இந்தத் தாமதம் ஏற்பட்டதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீதித் தடை காரணமாக தொடரூந்தில் பயணிக்கும் பலர் தமது நேரத்திற்குரிய தொடரூந்துகளை தவறவிட்டு, நடு இரவு வரை கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.

நன்றி இணைய இணைப்பு : http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16300&cat=1

சிரந்தி ஏற்கனவே நல்ல வடிவு தானே ......... பிறகேன் ஒப்பனைக்கு அதிக நேரம் செலவிடுவான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.