Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராணுவத்தினருக்கான உபசரிப்புகள்

Featured Replies

ராணுவத்தினருக்கான உபசரிப்புகள் குறித்து தற்போது புதிய கதைகள் ஆரம்பமாகியுள்ளன. ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும், மகிந்த ராஜபக்ஷ நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் வெளிப்படையான மோதலாக மாறியுள்ள பின்னணிக்குள் இந்தக் கதைகள் ஆரம்பமாகியுள்ளன. லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் வெளியாகிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் செய்தி இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

இதற்கு முன்னர் இரணுவத்திலுள்ள இராணுவத் தளபதிகள் தமது பதவிகளில் இருக்கும்போதே ஓய்வு பெற்றிருந்தனர். எனினும், நாம் அந்த முறைமையை மாற்றியமைத்தோம். இராணுவத்தினர் ஓய்வுபெற்றுச் செல்லும் போது அவர்கள் உயர் பதவிகள் வரை செல்ல முடிந்தது. பலருக்கு தூதுவர் பதவிகளை வழங்குவது குறித்தும் நான் அரசாங்கத்துடன் கலந்துரையாடினேன். எனது காலத்தில் ஓய்வுபெற்ற அனைத்து ஜெனரல்களுக்கும் ஏதேனும் ஒரு அரச பதவியை வழங்க நான் முனைப்புக்களை மேற்கொண்டேன். இராணுவத்தினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புதிய

எண்ணக்கக்கருவின் கீழ் இராணுவத்தினரை மாகாண சபை வேட்பாளராக நியமித்து வெற்றிபெறச் செய்தேன். கடந்த மூன்று வருட காலத்தில் இதனைப்போன்று சேவையை இராணுவத்தினருக்காக மேற்கொண்ட காலம் இருக்கவில்லை. இராணுவத்தினர் வீடொன்றை அமைத்துக் கொள்வது மிகவும் கடினமான அனுபவம் என்பதை நான் அறிவேன்.

அதேவேளை, யுத்தம் நடைபெற்ற போது இராணுவத்தில் சிப்பாய்களாக படைக்கு இணைந்த எமது சமுகத்தில் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் யுத்த அச்சுறுத்தல் நிலவிய கிராமங்களின் இளைஞர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த இளைஞர்கள் தெரிவு செய்யக் கூடிய ஆசிரியர் தொழில், தாதி சேவை, போக்குவரத்துச் சேவை அல்லது வேறு தொழில்களைத் தேடக்கூடிய வாய்ப்பு இருந்திருக்குமானால் பெரும்பாலானவர்கள் அந்தத் தொழில்களையே தெரிவு செய்திருப்பர் என்பது விவாதத்திற்குரிய விடயமல்ல. இராணுவத்தில் இணைந்ததன் காரணமாக பொதுவாக இவர்கள் சமுகத்தின் உயர் நிலைக்குச் செல்வதில்லை.

இராணுவத்தின் பதவி;களுக்காக உயர் கல்வி கற்ற தகுதியுடன் கூடிய இளைஞர்கள் வைத்தியத் தொழில், பொறியியல், சட்டம் போன்றவற்றை தெரிவு செய்திருப்பார்களேயானால் இவர்களில் பெரும்பாலானோர் அந்தத் தொழில்களுக்குச் செல்ல வாய்ப்பிருக்கும் என்பது சந்தேகத்திற்குரிய விடயமல்ல.

படையினருக்கு மாத்திரமல்லாது இராணுவத்தினரின் உயர் பதவிகள், சமூகத்தின் உயர் வகுப்புக்களைச் சென்றடைய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தொழிலுக்கு மாத்திரமல்ல எந்தவொரு தொழிலையும் தெரிவுசெய்வோர் தமக்கு சிறந்த பொருளாதார, சமுக அடிப்படையைப் பெற்றுக்கொடுக்கும் தொழில்களைத் தெரிவு செய்வது உண்மையாகும். ஒரு சிலருக்கே அவ்வாறான தொழில்களைப் பெற்றுக்கொள்ள

வாய்ப்புக்கள் இருக்கின்றன.

அரச ஊழியர்களுக்கு உரிய உபசரிப்புக்களை வழங்க வேண்டியது அனைத்து அரசாங்கங்களினதும் கடமையாகும். ஜனநாயக சமுகத்தில் நாட்டுப் பிரஜைகளுக்கு சிறந்த வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் வேலைத் திட்டங்களை உருவாக்குவது அரசாங்கத்திற்கு வழங்கப்படும் பொறுப்பாகும். சிறந்த வாழ்க்கையை அனுபவிக்கும் உரிமை எந்தவொரு மக்கள் பிரிவிற்கோ எந்தவொரு தொழில்ரீதியான அணிகளுக்கோ உரிய ஒன்றல்ல.

அரச ஊழியர்கள் அனைவருக்கும் அந்த உரிமை இருக்க வேண்டும். பல்வேறு நிலைமைகளின் கீழ் சேவைகளின் முக்கியத்துவம் அதிகரிக்கக்கூடும். யுத்தத்தில் இராணுவம் தொற்றுநோய் அனர்த்தத்தின் போது சுகாதார சேவையினரின் முக்கியத்துவம் அதிகரிக்கும். யுத்தம் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் பல்வேறு கொடுப்பனவுகள் இராணுவத்தை விட்டுச் செல்வதைத் தடுப்பதற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் சமுக அங்கீகாரம், தொழிலில் ஈடுபட்டிருக்கும் போதே ஏற்படும் மரணத்திற்காக வழங்கப்படும் உச்ச அளவு இழப்பீடு போன்றவற்றை நோக்கும் போது அதனை உணர முடியும். கடினமான யுத்தமொன்றின் போது எந்தவொரு இராணுவமும் இவ்வாறான நடைமுறையைக் கடைபிடிக்க இடமுள்ளது.

எவ்வாறாயினும், நாடும் சமுகமும் யுத்தத்தின் பின்னர் சாதாரண சமுக சூழலுக்கு மாறும் போது இவ்வாறான உபசரிப்புக்களை அதிகரிக்கப்படக்கூடாது, கட்டம் கட்டமாக அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபடும் தரப்பினருக்கு தொடர்ந்தும் விசேட உபசரிப்புக்கள் கிடைக்குமானால் அந்த உபசரிப்புக்களை அரசியல் ஊடாக தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள அந்தத் தொழில்சார் குழு எத்தணிக்கும். இராணுவம் அரச நிர்வாகத்திற்கு பங்களிப்பு செய்யும் அனைத்து நாடுகளிலும் இராணுவத்தைச் சார்ந்த நிர்வாகத்தை மேற்கொண்ட சகல நாடுகளிலும் இந்த நிலைமை காணப்பட்டது.

இலங்கையின் நட்பிற்குரிய நாடான பர்மாவின் இராணுவம் மிகவும் சிறப்புரிமைகளைப் பெற்ற சமூக குழுக்களில் ஒன்றாகும். அந்த இராணுவத்தின் தளபதிகள் பர்மாவின் செல்வக் குபேரர்களாவர். அவர்கள் மக்களின் உரிமைகளை இராணுவ பாதணிகளுக்குக் கீழ் மிதித்துக்கொண்டிருப்பதற்காக இராணுவ சிப்பாய்களுக்கு சிறப்புரிமைகளை வழங்கி அவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இதேபோன்ற மற்றுமொரு நாடான ரொபட் முகாபேயின் நிர்வாகத்திற்குக் கீழிருக்கும் சிம்பாப்வே ஆகும். அந்நாட்டில் அதிக ஊதியம் பெறும் தரப்பினர் இராணுவத்தினராவார். பாகிஸ்தான் மற்றுமொரு உதாரணமாகும்.

தொழில் ரீதியான சிறப்புரிமைகளை சதாகாலமும் பெற்றுக் கொண்டுள்ளமைக்கான சிறந்த உதாரணம் தற்போது சமுகத்தில் செல்வந்த சமுகமாக மாறியிருக்கும் அரசியல் குடும்பங்களாகும். தற்போது நாட்டின் அரசியலானது குடும்ப உரிமையாக மாறியுள்ளது. இந்த அரசியல் வாதிகளின் பிள்ளைகள் சமுகத்திற்கு சேவை செய்யும் ஆசையில் அரசியலுக்கு வரவில்லை. தமது பெற்றோர்கள் அனுபவித்து வரும் சமுகப் பொருளாதார சிறப்புரிமைகளைத் தொடர்ந்தும் அனுபவிக்கும் நோக்கிலேயே அவர்கள் அரசியலுக்குள் வருகின்றனர்.

அத்துடன், செல்வத்தின் உரிமையாளராகும் வகையில் அரசியல் அதிகாரம் மூலம் பணத்தின் உரிமையாளராவதற்கு அரச நிறுவனமொன்றின் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்படுகின்றனர். தென் மாகாண சபை தேர்தல் முடிவுகளின்படி தேர்தலில் போட்டியிட்ட ஏனையவர்கள் தோல்வியடைந்த போதிலும் அரசியல் வாதிகளின் வாரிசுகள் குழுக்களாக அரசியல் வகுப்பிற்குள் புகுந்துகொண்டனர்.

அரசியல் குடும்பவாதமானது அரசியலிலிருந்து செல்வதைச் சம்பாதிக்கும் வரப்பிரசாத தொழிலாக மாறியுள்ளது. இது இலங்கையைப் பீடித்துள்ள சாபக்கேடாகும். மக்களின் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்படும் அரசியல் வாதிகளுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களை இரத்துச் செய்ய எந்த அரசியல் கட்சியும் விரும்பவுதில்லை.

தற்போது மேற்குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலாளரின் கதைக்குச் செல்வோம். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கருத்தாக அதனைக் கருத முடியாது. அது

அரசாங்கத்தின் கொள்கையாகவே கருத முடிகிறது. அது பொதுஜன முன்னணியின் கொள்கையல்ல. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையாகும். பிரஜைகள் என்ற காரணத்தினாலேயே நாம் இந்த நடைமுறை குறித்து அக்கறை செலுத்துகிறோம். இந்த நடைமுறையின் அடிப்படையில் ஓய்வுபெற்றுச் செல்லும் அனைத்து ஜெனரல்களுக்கும் வேறு உயர் பதவிகள் வழங்கப்படும்.

தமது பொருளாதார நிலைமையை சீராக வைத்துக்கொள்வதற்காக அரசியலுக்குள் புகுந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகும் சந்தர்ப்பமும் கிடைக்கின்றது. அரசியல் சமுக சேவையல்ல. செல்வந்தராகும் வழியென பகிரங்கமாக ஏற்றுக்கொண்டமை குறித்து நாம் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்போது ஓய்வுபெற்றுள்ள இராணுவ அதிகாரிகள் தற்போது உயர் பதவிகளை வகித்துவருகின்றனர். உலகம் முழுவதும் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பதவிகள் ஜனநாயக நிர்வாகத்தின் கீழ் அதற்காகப் பயிற்சிகளைப் பெற்ற வெளிநாட்டு சேவை உள்ளிட்ட அரச நிர்வாக சேவையினருக்கே வழங்கப்படவேண்டும்.

ஓய்வுபெற்ற பின்னர் இராணுவ அதிகாரிகளுக்கு சிறந்த வாழ்க்கையை அனுபவிப்பதற்குத் தேவையான ஊதியத்தை வழங்குவதற்காக அரச நிர்வாகத்துறை மற்றும் மக்கள் பிரதிநிதி பதவிகளை வழங்குவதன் மூலம் நாடு மேலும் இராணுவமயமாக்கலை நோக்கியே செல்லும். இந்த சிறப்புரிமைகள் பின்னால் செல்வதற்காக இராணுவ அதிகாரிகள் அரசியல் சார்பான முனைப்புக்களை ஆரம்பிக்கக்கூடும். (ஓய்வுபெற்றுச் செல்லும் அனைத்து இராணுவ அதிகாரிகளுக்கும் மேற்குலக நாடுகளுக்கான தூதுவர் பதவிகள் வழங்கப்படுவதில்லை.)

அரசியல் வாதிகளால் தம்மால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளை கௌரவமாகக் கூறிக்கொள்வதன் மூலம் நாடு எந்தத் திசையில் செல்வது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

யுத்தத்திற்குப் பின்னரான இலங்கை தொடர்ந்தும் அரசியல் மற்றும் நிர்வாகத்துறையை இராணுவ மயமாக்கலை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமையானது இலங்கையில் சட்டநிர்வாகத்தை ஸ்தாபிப்பதற்கும் அரசியலை ஜனநாயகமயப்படுத்துவதற்கும் எதிராகச் செல்வதுடன் இராணுவத்தை அரசியல்மயப்படுத்துகிறது. இது நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்ததல்ல.

‐ சுனந்த தேசப்பிரிய

இணைய இணைப்பு http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16462&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.