Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதோடு காதாக கொழும்பு பேசுகிறது‐

Featured Replies

அநுரகுமார திஸாநாயக்க மங்கள சமரவீரவுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோதாபய ராஜபக்ஷ உத்தரவு?

ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர ஆகியோருக்கு எதிராக இந்த வாரத்திற்குள் ஏதேனும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மேஜர் சிறிவர்தன என்ற அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருப்பதாகவும் இந்தப் பணியை வெற்றிகரமாக முடித்தால், அவருக்கு வெளிநாட்டுத் தூதரகமொன்றில் பதவியொன்றை வழங்குவதாக உறுதியளித்திருப்பதாக இராணுவத் தரப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க, மங்கள சமரவீர ஆகியோர் ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசியலுக்குள் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறான மரண உத்தரவொன்றைப் பிறப்பித்திருப்பதாகவும் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மேஜர் சிறிவர்தன கடந்த காலங்களில் கொழும்பு உள்ளிட்ட அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற சில கொலைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மேஜர் சிறிவர்தன என்பவர் கோதாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கிவரும் துணை இராணுவத்தின் பிரதானி எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறிவர்தன மாலேபiயில் இருக்கும் தனது ஏழு ஏக்கர் காணி மற்றும் ஆடம்பர வீட்டை 2 ஆயிரம் லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துவிட்டு ஐரோப்பாவிலுள்ள இலங்கைத் தூதரக அலுவலகமொன்றில் பாதுகாப்பு ஆலோசகராக செல்லத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இவை குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

ரணில் சரத் பொன்சேக்காவுக்கு இடையில் செய்மதி தொலைபேசி ஊடாக நீண்ட கலந்துரையாடல்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கும் இடையில் செய்மதி தொலைபேசி ஊடாக நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் திடீரென தாய்லாந்து சென்ற ரணில் விக்ரமசிங்க,பிரகட் விமான நிலையத்தில் இருந்தவாறு பொன்சேக்காவை தொடர்பு கொண்டுள்ளார். சரத் பொன்சேக்கா தற்போது அமெரிக்காவின் வொஷிங்டனில் தங்கியுள்ளார். ரணிலுக்கும் பொன்சேக்காவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் சில மணிநேரங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனரல் சரத் பொன்சேக்கா எதிர்க்கட்சிகளில் பொது வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சரத் பொன்சேக்காவுக்கு வழங்கவிருந்த வாகனம் வழங்கப்படுவதற்கு தடை?

மகிந்த ராஜபக்ஷவினால் அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேக்கா, அந்த பதவியில் இருந்து விலகும் போது, அவர் பயன்படுத்திய வாகனத்தை அவருக்கே வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவை ரத்துச் செய்யுமாறு மீண்டும் அறிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை போர் முடிவடைந்த பின்னர், அன்பளிப்பாக முப்படைத் தளபதிகளுக்கு கொழும்பு நகரில் தலா 20 பேர்ச்சஸ் நிலத்தை வழங்குவதாக உறுதியளித்திருந்த போதிலும், சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்படவிருந்த காணி தொடர்பில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி காணி ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் ஆட்சியின் போதே முப்படைத் தளபதிகளாக பணியாற்றும் நபர்கள் ஓய்வுப் பெற்றுச் செல்லும் போது, அவர்கள் பயன்படுத்திய வாகனத்தை அவர்களிடம் ஒப்படைப்பது என்ற அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அரச அதிகாரிகளுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டு வருகிறது. சரத்பொன்சேக்கா இராணுவத்தில் இருந்து ஒய்வுப்பெறாவிட்டாலும் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் அவர் பயன்படுத்திய குண்டு துளைக்காத வாகனத்தை அவருக்கு வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்த ஜனாதிபதி, அதனை சரத் பொன்சேக்காவுக்கு தான் செய்த பாரிய உபகாரம் என பகிரங்கமாகவே கூறியிருந்தார். இந்த நிலையில் குறித்த வாகனத்தை சரத் பொன்சேக்காவுக்கு வழங்க வேண்டாம் என ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்.பீ.திஸாநாயக்கவிற்கும் ராஜித்த சேனாரத்னவிற்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை?

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பீ.திஸாநாயக்கவிற்கும் நிர்மாணம் மற்றும் பொறியியல் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கும் இடையில் நேற்று முன்தினம் இரவு இரகசிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றதாக நம்பத்தகுந்தத் தரப்புத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு நெருக்கமான நண்பர் எனக் கூறப்படும் சுனில் குணவர்தனவின் தெஹிவளை களுபோவில பிரதேசத்திலுள்ள வீட்டிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எஸ்.பீ.திஸாநாயக்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒத்துழைப்புக்கள் சம்பந்தமாக அமைச்சர் ராஜித்த இதன்போது நீண்ட கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டுள்ளதுடன் ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் வருகைக்கு எதிராக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்கு முன்னர் உருவாக்கப்படவுள்ளதாக வலியுறுத்தியுள்ளதாக எஸ்.பீ. திஸாநாயக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உட்கட்சி மோதலை அரச ஊடகங்கள் வழியாக வெளியிடுமாறு ராஜித்தவிடம் கேட்டுள்ளார். திடீரென இவ்வாறான கூட்டமைப்பு கட்டியெழுப்பப்பட்டாலும் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு மனோ கணேசன் மற்றும் ஹக்கீமின் ஒத்துழைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலானோரின் ஆதரவும் தனக்கிருப்பதாக எஸ்.பீ.கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக எஸ்.பீ. களமிறக்கப்படும் வகையில் அரசாங்கத்திற்கு நெருக்கமான ஊடகங்களின் வழியாக விரிவான பிரசாரங்களைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் ராஜித்த இதன்போது கூறியுள்ளார்.

விமல் வீரவன்;சவின் ஹெலதிவ, பிரியந்த காரியப்பெருமவின் சியத்த, விமானநிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் கேர்ணல் பிரசன்ன விக்ரமசூரியவின் ரிவிர, நேசன் மற்றும் திலங்க சுமதிபாலவின் லக்பிம ஆகிய பத்திரிகைகள் கடந்த வார இறுதியில் எஸ்.பீ.க்கு விரிவான பிரசாரங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தன. ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ராஜித்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கோரிக்கையின் அடிப்படையில் திலித் ஜயவீரவின் தெரண தொலைக்காட்சியும் எஸ்.பீ.க்கு பிரசார பணிகளுக்கான உச்ச உதவிகளை வழங்க உதவியிருப்பதாகவும் ராஜித்த குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்ட சிலர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு?

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சென்று அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்ட சிலர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவுவது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அவர்கள் கட்சியில் சேர இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளை தோற்கடித்து பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தாம் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட போதிலும், தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளதால், நாட்டின் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு தாம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதாக இந்த அமைச்சர்கள் அறிவிக்கவுள்ளனர். மகிந்த ராஜபக்ஷவுக்கு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்த போதிலும் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான இலக்கை அடைய முடியாது எனவும் அந்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையும் பட்சத்தில் அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போது, வகித்த பொறுப்புகள், பதவிகள் மாத்திரமல்லது மாவட்ட தலைமை பதவியையும் வழங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளதாக இந்த தகவல்களை வழங்கிய சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் கூறியுள்ளார்.

யுத்த செலவீனம் அரச ஊழியர்களுக்கு ஊதிய அதிகரிப்பு இல்லை:‐

யுத்த செலவீனம் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்காக மேற்கொள்ள வேண்டிய செலவுகள் காரணமாக 2009ம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு ஊதிய அதிகரிப்பு வழங்கப்படவில்லையெனவும் 2010ம் ஆண்டில் கடந்த காலத்துடன் சேர்த்து அரச ஊழியர்களுக்கு ஊதிய அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது தெரிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை சம்பந்தமாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி அண்மையில் சட்டப்படி பணியாற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்க ஒன்றியத்திடம் தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட பேச்சுவார்த்தை ஒன்றுக்கான ஏற்பாடுகளைச் செய்வதாக அமைச்சர் பௌசி உறுதியளித்திருந்த போதிலும் அந்தத் தொழிற்சங்கங்கள் எதற்கும் ஜனாதிபதியுடனான சந்தப்பிற்கான அழைப்புக்கள் விடுக்கப்படவில்லை.

இணைய இணைப்பு http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16500&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.