Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரைசேரா படகு அகதிகளாக ஈழத் தமிழர்கள் இந்தோனேஷியக் கடலில்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அகதிகள் 78 பேரை ஏற்றிச் சென்ற அவுஸ்திரேலிய சுங்கக் கப்பலிலுள்ள அகதிகளை இந்தோனேஷியாவின் கிஜாங் துறைகத்தில் இறக்குவதற்கு அம்மாகாண ஆளுநர் அனுமதி மறுத்துள்ளார்.இந்தோனேஷியா அகதிகளை கொண்டுவந்து குவிக்கும் இடமல்ல என்று ஆளுநர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவை நோக்கி இலங்கையர்கள் சென்று கொண்டிருந்த படகு கடந்த வாரம் சுமாத்ரா தீவுக்கருகில் கோளாறுக்குள்ளானதை அடுத்து அதிலிருந்த இலங்கையர்களை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இந்தோனேஷியா அவுஸ்திரேலியாவுக்கு இணக்கம் தெரிவித்திருந்தது.

அகதிகளை நடத்துவது தொடர்பாக அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த அமுலாக்கத்தின் முதல் நடவடிக்கையாகவே தற்போது இலங்கை அகதிகள் இந்தோனேஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அகதிகளை காப்பாற்றிய அவுஸ்திரேலிய கடற்படையினர்" ஓசானிக் வைக்கிங் என்ற அவுஸ்திரேலிய சுங்கப் படகில் அவர்களை ஏற்றி அகதிகளுக்கான சோதனைகளை நடத்தவதற்கென இந்தோனேஷியாவிடம் ஒப்படைப்பதற்காக கொண்டுசென்ற போதே அவர்களை இறக்குவதற்கு இந்தோனேசிய ஆளுநர்

அனுமதி மறுத்துவிட்டார்.

கடந்த வாரம், முதலில் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவிலுள்ள மெராக் துறைமுகத்தில் இலங்கையர்களை இறக்குவதாக இருந்த போதிலும் காரணம் எதுவும் தெரிவிக்காமல் வடக்கே 900 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள றியாவ் தீவின் கிஜாங் துறைமுகத்திற்கு இவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் றியாவ் தீவு ஆளுநர் இஸ்மத் அப்துல்லா இந்த இகதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு தமக்கு பணிப்புரை விடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். கிஜாங் துறைமுக கரையை அவுஸ்திரேலிய படகு அணுகுவதற்கு தாம் தடை விதிப்பதாக அவர் தெரிவித்தார். இந்தத் தடை உத்தரவை அமுல்படுத்துமாறு தாம் கடற்படைக்கும் பொலிஸாருக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் உத்தரவு இல்லாமல் படகை துறைமுகத்தினுள் அனுமதிக்க முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஓசானிக் வைக்கிங் கிஜாங்கிற்கு வெளியே சிங்கப்பூருக்கு எதிரே உள்ள பின்டன் தீவில் நங்கூரமிடப்பட்டுள்ளது.அதற்கருகில் இந்தோனேஷிய கடற்படையின் யுத்தக் கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகளுக்கு...

Edited by forlov

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.