Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த வருடம் ஏப்ரல் நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தல்

Featured Replies

நோர்வேயில் ஈழத்தமிழர் அவைக்கான தேர்தல் இந்த மாதம் இடபெற உள்ளது.

எனவேதான் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் அறிவித்தலை இந்த அண்ணாவைக் கொண்டு நோர்வேயில் வாழும் பெரிய அண்ணாக்கள் நோர்வே வாழ் தமிழ் மக்களை குழப்புவதற்காக இந்த அறிவித்தலை வெளியிடவைத்துள்ளார்கள். இவர்கள் திருந்தப் போவது மாதிரித் தெரியவில்லை. தேசிய இன விடுதலைப்போராட்டம் குழுநிலை வாதிகளின் கைக்குப் போவதை அனுமதிக்காதீர்கள்.

மக்களே விழிப்பாக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்சுணனம், கலைவாணியும் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள். அப்போ பள்ளிக்குச் செல்லும் தாயகத்தில் வாழகின்றதமிழ் இளவயதினர்களின் கைகளில் போராயதத்தைக் கொடுத்து, முன்ணணிக்காவலரனில் அவர்கள் தலைசிதறி இறக்கும் வேளையில், புலத்தில் தங்கள் உறவுகளையும், மறந்துபோய் விட்டிட்டுவந்த அம்மிக்குளவி ஆட்டுக்கல் (ஏலுமெண்டால் வீட்டில் வளர்த்த நாயையும்) தாங்கள் வாழ்கின்ற நாடுகளுக்கு எடுத்துவரலாம் அது தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் என்ன குழப்பம் நோர்வேயில் நடப்பது நொர்வேக்கு மட்டுமானது அவர் கூறுவது உலகம் தழுவியது, அந்த அந்த நாடுகளில் அந்த அந்த நாட்டவரே செயற்பாட்டை முன்னெடுப்பர், உலகம் தழுவிய செயற்பாட்டு குழுவே இறுதியான முடிவை எடுக்கும், எல்லாம் ஜனநாயாக படி தெரிவு செய்யபட்டவர்களே முடிவினை எடுப்பர், இது ஜந்து வருடத்துக்கொருமுறை நடந்து கொண்டு இருக்கும், திறமையற்றவர் இதன்போது விலக்கப்படுவர், திறமையானவர் சேர்க்கபடுவர், இவர்களை தெரிவு செய்பவர்கள் மக்களே. :wub::wub::blink:

  • கருத்துக்கள உறவுகள்

அர்சுணன், சித்தன் கூறுவதையும் வாசித்துப்பார்க்கவும்.விருப்பம் என்றால் நீங்களும் இதனில் இணைந்து கொள்ளலாம். தவறுகள் இருப்பின் சீர்செய்து கொள்ளவும். வெளியிலிருந்து விமர்சனம் செய்வதில் பிரியோசனம் இல்லை. நாடுகடந்த தமிழீழ அரசை அமைப்பது என்பது பொது மக்களிடமிருந்து போராட்டத்திற்க்கு காசு வாங்கும் விடையமில்லை. மக்கள்மயப்படுத்தப்பட்ட ஒரு ஜனநாயக அமைப்பினை உருவாக்குவதற்கான முயற்சியே. சிலவேளை பணத்தைக் கையாளவேண்டிய தேவையேற்படின். தகுதிகாண் கணக்காளர்கள் மூலமாக அவை தணிக்கைசெய்யப்படும்( தகதிகாண் கணக்காளர்கள் எனப்படுவது பேற்குலக நாடுகளில் அரசாங்கங்களால் அங்கீகாரம் செய்யப்பட்ட கணக்காளர்கள்)

எழுஞாயிறு,இந்த முயற்சியானது தன்னுடைய போக்கினில் எழுந்திருந்தால் இதுஒருவேளை மக்கள்மயப்பட்டிருக்கக்கூடும்.ஆனால் இதற்கான முரண்கள் எங்குஆரம்பிக்கின்றன என்று பார்த்தால் முப்பதுவருடங்களுக்கு மேலாக போராட்டத்தை முன்னெடுத்த தலைவரையும் போராளிகளையும் மக்களின் ஒரே போராட்டஅமைப்பையும் திடீரென்று பிழைகாண வெளிக்கிடும் போக்கில் இருந்தும் அந்தப் போக்கையே ஊக்குவித்து பின்னிருந்து காய்நகர்த்தும் கோழைத்தனமான மாற்றுநோக்கிலிருந்துமே தொடங்குகின்றது.முந்தாநாள்வரையும் போர்ப்பரணிபாடிய வழுதி ராசதந்திரக்குறைபாடுகளையும்,அரசியல்இல்லாத வெற்றிடத்தையும் ஒரே நாளில் கண்டுபிடித்து எழுதுகிறார்.அதைஊக்கப்படுத்தும் பத்தமநாதன் இந்தியாடுடே க்கு கொடுத்த பேட்டியில் இந்தியாவே எங்களின் விடுதலையை பெற்றுத்தரும் என்று புதிய கண்டுபிடிப்பை சொல்கிறார்.அதே பத்மநாதனால் சனநாயக(?????)முறைப்படி உருத்திரகுமார் இணைப்பாளராக அறிவிக்கப்படுகிறார்.எங்களுடைய ஆதங்கம் இதுதான்...

நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான்,நாம் எல்லோரும் சேர்ந்துதான் இந்த போராட்டத்தில் கடந்தகாலங்களில் நின்றோம்.அப்போது ஒரு கணம்கூட சொல்லத்தோன்றாத விமர்சனங்களையும் அவதூறுகளையும் திடீரென மே19க்கு பிறகு அவசரஅவசரமாக சொல்லும் நேர்மை எப்படிப்பட்டது.நேற்றுவரை நின்ற போராட்டத்தையே தூற்றும் இவர்கள் நாளை திடீரென இப்போது நிற்கும் நா.க.அ(நாடுகடந்த அரசு)திட்டத்தையும் கவுக்கமாட்hர்கள் என்று எப்படி சதாரணமக்களுக்கு நம்பவைக்கமுடியும்?

மற்றது காசு,கணக்கு என்பதல்ல பிரச்சனை சின்னஞ்ஙிறுசுகள் சிதறியதால் வளர்ந்த போராட்டத்தின் நிதியை கையாடல் செய்தகுற்றச்சாட்டிலும்,மோசடிக்குற்றச்சாட்டிலும் இயக்கத்தால் வெளியேற்றப்பட்டு ஈஓட்டிக்கொண்டிருந்த பலர் திடீரென மே19க்கு பிறகு இதில்வந்து இணைந்தமாயமென்ன??

என்னைப் பொறுத்தவரையிலும் நா.க.அரசைப் பொறுத்தவரையில் இதுக்குள்ளாக ஓடிச்சிலர் உள்ளுர்அரசியலில் கனடாவிலோ,இங்கிலாந்திலோ,அவுஸ்த்திரேலியாவிலோ தங்கள் தங்கள் சுயஅரசியல் இலக்குகளை அடையவே இது பயன்படும்.வேறு ஒன்றுக்கும் இல்லை.

வணக்கம் சித்தன்.

மே 19 இற்குப் பின் நாடு கடந்த அரசு என்ற கோசம், அதை அமைப்பதற்கான முயற்சி என்பன புலம்பெயர் தேசமெங்கும் இயங்கி வந்த அமைப்புகளை ஒரு குழு தமது ஆளுகைக்குள் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் என்பதை புரியாதவரைக்கும் ஏதும் புரியப்போவது கிடையாது.

Edited by kalaivani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.