Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவன் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க வேண்டும்: சீமான்

Featured Replies

67e047cf21683a4623d345b9fa85e7b0.gifதமிழர்கள் தமிழீழத்திலும் தமிழகத்திலும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், இங்கு சிங்களவர்கள் நிம்மதியாக பட்டப்படிப்புக்களை தொடர்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஒரு தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவன் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

முள்வேலி முகாமிற்குள் இருக்கும் தமிழர்களை விரைவில் அவர்களது சொந்த இடத்திற்கு அனுப்ப வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கம் சார்பாக திருப்பூரில் கடந்த 08-11-2009 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றுகையில் நாம் தமிழர் இயக்க தலைவரும் ஈழ உணர்வாளருமான இயக்குனர் சீமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறப்புரையினையாற்றிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தொடர்ந்து பேசுகையில்,

கொட்டும் மழைக்கு மத்தியில் தவிக்கும் ஈழத் தமிழர்களை காப்பாற்றுமாறு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் நாமும் அதே மழைக்கு மத்தியில் நனைந்து கொண்டே போராடிக் கொண்டிருப்பது உலக நாடுகளை உலுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழர்கள் தமிழீழத்திலும் தமிழகத்திலும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் இங்கு சிங்களவர்கள் நிம்மதியாக பட்டப்படிப்புக்களை தொடர்ந்து கொண்டும் பல இலட்ச ரூபா சம்பளத்திற்கு வேலை செய்தும் வருகின்றனர்.

இந்த நிலை மாற வேண்டும். ஒரு தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவன் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

மாலை 6.00 மணியளவில் கலை நிகழ்சிகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழ் இளைஞர்கள் நிர்வாணப்படுத்தி கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வை அரங்கமேடையில் நிகழ்த்திக் காண்பித்தனர். இந்நிகழ்வு தத்ரூபமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு ஆரம்பித்ததில் இருந்தே கடும் மழை பெய்த வண்ணமிருந்தது. இருந்தும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த உணர்வாளர்கள் யாரும் நகர்ந்து செல்லாது இறுதிவரை இருந்து சிறப்பித்தனர்.

தமிழ்நாட்டில் பணத்திற்கும் புரியாணி பொட்டலத்திற்கும் அழைத்து வரப்படும் கூட்டத்தினர் கூட கொட்டும் மழையில் நிற்மாட்டார்கள். ஆனால் சீமானின் பின்னால் அணி திரண்டிருக்கும் உணர்வாளர்கள் இவ்வாறு கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது இருந்தது வியப்பாக இருந்ததாக, பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் கியூ பிரிவு உளவுத்துறையினரும், செய்தியாளர்களும் தமக்குள் கதைத்துக் கொண்டனர்.

இரவு 10.00 மணியுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.

திருப்பூரில் ஏகப்பட்ட சிங்களவர்கள் வேலை செய்கிறார்கள் முதலில் தமிழர்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.