Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவன்... அவள்... அது ......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐந்து ஆண்டு தண்டனை முடிந்து, சிறையில் இருந்து சுதந்திர காற்றை சுவாசித்தபடி வெளியே வந்தான் சிதம்பரம். வரவேற்க காந்திமதி வந்திருப்பாள் என எதிர்பார்த்து ஏமாந்து போனான்.

"ச்சே, ஜெயில்ல இருக்கும் போது, தனக்கு ஆதரவாக இருந்தவள், அவள் மட்டும் தான். இப்ப வெளியே வரும்போது அவளை காணலயே' என கவலையுடன் நடந்தான்.

சில மாதங்களுக்கு முன் தன்னை பார்க்க வந்தபோது, அவள் கொடுத்த அட்ரசை தேடினான். பக்கத்து வீடுகளில் விசாரித்தான். சிதம்பரத்தை ஏற இறங்க பார்த்தவர்கள் ஏளனமாக, "ஓ... நீ அந்த ஆளா? அவ, இந்த வீட்டை காலி செஞ்சு மாசக்கணக்கா ஆச்சு' என விரட்டாத குறையாக பதில் அளித்தனர்.

ஏற்கனவே, காந்திமதியைப் பற்றி தெரிந்திருந்தவன், அலட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறினான். தூரத்தில் நின்றிருந்த ஆட்டோக்காரன், சிதம்பரத்தை அழைத்து, "என்ன, அக்காவை தேடி வந்தியா, அவ எங்களை எல்லாம் விட்டுட்டு, வேறு இடம் பார்த்து போயிட்டா, இந்தா, இங்க போயி விசாரி' என விசிட்டிங் கார்டின் பின்பக்கத்தில் எழுதியிருந்த இடத்தை தெரிவித்தான்.

அங்கு சென்று விசாரித்தபோது, "அதுவா, இந்த ரோட்ல கடைசி வீடு போ ' என்றனர்.

ஒருவழியாக அவளைப் போய் சேர்ந்தான்.

"வாய்யா, என்ன திடும்னு வந்துட்டே, அதுக்குள்ள தண்டனை முடிஞ்சிடுச்சா' வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.

வீடு சிறியதாகத்தான் இருந்தது. சாப்பாடு போட்டாள். பசியாற உண்டவன், "எனக்குன்னு சொந்தம் இல்லை. ஏதாவது வேலை பார்க்கனும்' என்றான், எதிர்காலத்தை காரணம் காட்டி.

"அதவுடு, நான் வேலை பார்த்து தர்றேன்' என யோசித்தவள், "சரி சரி, எனக்கும் பாதுகாப்புக்கு யாரும் இல்லை. இங்கேயே தங்கிக்க' என்று இடம் கொடுத்தாள். அடுத்த நாள் முதல் அவன் வாட்ச்மேன் வேலைக்கு சென்றான். இவளோ ஆண்களை தேடிப் போனாள்.

* சிதம்பரம்... தெற்கத்திய நகரின் கூலிப்படையைச் சேர்ந்தவன். கொலை, அடிதடி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு, பலமுறை சிறை சென்றவன்.

கடைசியாக, அந்நகரின் முக்கிய வர்த்தக பிரமுகர் ஒருவரின் மனைவியை(அதுவும் கணவர் சொல்லி) ஓட, ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் சிக்கி, ஆயுள் தண்டனை பெற்று, பின் மேல் கோர்ட்டில் ஐந்தாண்டாக குறைக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான்.

ஏற்கனவே உறவு என சொல்லிக் கொள்ள யாரும் இல்லாமல் தான் கூலிப்படையில் சேர்ந்தான். அதுவே அவனுக்கு தொழிலாகி விட்டது.

வயது 50ஐ தாண்டிய நிலையில், சிறையில் இருந்தபோது தான், வாழ்க்கையைப் பற்றி யோசித்தான். வயதான காலத்தில் தன்னை நேசிக்க, தன்னைப் பற்றி கவலைப்பட யாருமில்லையே என ஏங்கத் துவங்கினான்.

இந்த சமயத்தில் தான், காந்திமதி அறிமுகமானாள்.

இதற்கு முன் அவளை பார்த்ததே இல்லை. தான் யார், அவள் யார், எங்களுக்குள் என்ன உறவு என தெரியாத நிலையில், இவர்கள் சிறையில் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.

இந்த சந்திப்புகளின் போது தான், அவளைப் பற்றி சிதம்பரம் தெரிந்து கொண்டான். தண்டனை முடிந்து வெளியே செல்லும் போது, தன்னையும் ஒரு மனிதனாக மதித்து, அவள் ஏற்றுக் கொள்வாள் என எதிர்பார்த்தான்.

* ஜெயிலில் இருந்து வந்து, சில மாதங்கள் ஓடி விட்டன.

அவன் முயற்சித்தும் அவளை தொட முடியவில்லை; விலகியே இருந்தாள்.

அன்று நள்ளிரவுக்குப் பின் காந்திமதி வீட்டுக்கு திரும்பினாள். இவனுக்கு அது பிடிக்கவில்லை.

அவர்களுக்குள் லேசான மோதல் துவங்கியது. "நான் தான் வேலைக்குப் பேறேனே, நீ ஏன் மத்தவங்களைத் தேடிப் போறே, எனக்கு இது பிடிக்கல' என்றான் லேசான கோபத்துடன்.

அவள் பேசவில்லை; படுத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் காலை, சிதம்பரம் வேலைக்குச் சென்று விட்டான். காந்திமதியைத் தேடி பார்ட்டி வீட்டுக்கே வந்தது.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், சிதம்பரம் வேலையில் இருந்து திரும்பியதும் முகத்தை சுளித்தனர்.

வயதான பெண், "ஏம்பா, இங்க புள்ளகுட்டிகளோட குடித்தனம் நடத்துறதா வேண்டாமா, முதல்ல நீ அவளுக்கு என்ன வேனும், புருஷனா அல்லது...' என இழுத்தாள்.

அவமானமாகப் போய்விட்டது அவனுக்கு. கொலை, கொள்ளையில் ஈடுபட்டு போலீசில் சிக்கி அடிபடும் போதெல்லாம் அவமானம் தெரியவில்லை. திருந்தி வாழலாம் என்றபோது, இவளால் தினம் தினம் அவமானப்படுகிறேனே என நொந்து கொண்டான்.

வழக்கம் போல அன்றும் நள்ளிரவுக்கு பின் தான் காந்திமதி வீட்டுக்கு வந்தாள். வீட்டுக்குள் நுழையும்போதே, சிதம்பரத்துக்கு கோபம் சுர்ரென ஏறியது. "நில்லு, இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகனும்... இப்படி நேரங்கெட்ட நேரத்தில வீட்டுக்கு வர்றதும், வீட்டுக்கே ஆட்கள் வந்துட்டு போறதும் நிக்கணும்... பக்கத்து வீட்டுக்காரங்க கேவலமா பேசறாங்க... எனக்கும் அசிங்கமாப்படுது, இனிமே விட்டுடு' என்றான்.

கேட்டதும், அவனை எரித்து விடுவது போல முறைத்தாள். "எனக்கு பாதுகாப்பாத்தான் உன்னை இங்க வெச்சிருக்கேன். நீ எதற்கு வெளியில போற, வீட்டுக்குள்ளேயே கிட, செலவுக்கு பணம் தர்றேன். அதைவிட்டுட்டு, ஆம்பள மாதிரி உபதேசம் செய்யாதே' என கடிந்து கொண்டாள்.அவனுக்குள் இருந்த ஆண்மை தலைக்கேற,"என்னடி சொன்னே' என அருகில் கிடந்த கம்பியை எடுத்து, அவளை நோக்கி வீசினான். பறந்து சென்ற கம்பி நேராக, அவளது நெத்திப்பொட்டில் பட்டு தெறித்தது. அலறிபடியே சரிந்து, சிறிது நேரத்தில் சடலமானாள்.

வெகு நேரத்துக்குப்பின் கோபம் அடங்கி, அருகே சென்று பார்த்தான். பணத்துக்காக கொலை செய்யும் போதெல்லாம் பயப்படாதவன், அடைக்கலம் கொடுத்த காந்திமதி இறந்து விட்டாள் என உறுதிப்படுத்தியபோது, பயம் கிறுகிறுக்க வைத்தது.

என்ன செய்வது என தெரியாமல் சில நிமிடம் தடுமாறியவனுள், அந்தக்கால ஐடியாக்கள் கண் முன் வந்து நின்றன. அறை முழுதும் கண்களை மேயவிட்டான். அந்த மூன்றடி நீள அட்டைப் பெட்டி கண்ணுக்கு பட்டது. அதில் இருந்தவைகளை அப்புறப்படுத்தினான். பெட்டியில் பழைய சேலைகளை அடுக்கினான்.இதுநாள் வரை தொட்டுக்கூட பார்க்காத காந்திமதியை அப்படியே தூக்கி பெட்டிக்குள் மடக்கி வைத்தான். மேலும் சில சேலைகளை போட்டு பிணத்தை மறைத்தான்.

கும்மிருட்டில் பெட்டியை, சைக்கிளில் கட்டி, சில கிலோ மீட்டர் ஓட்டினான்.

தூரத்தில் நாய் ஓலமிடும் சத்தம் கேட்டது.

எதற்கும் பயப்படாதவன் லேசாக நடுங்கினான்.அருகில் இருந்த புதருக்குள் பெட்டியைக் கொண்டு சென்றான். கொண்டு வந்திருந்த கெரசினை பெட்டிக்குள்ளும், பெட்டிக்கு மேலும் ஊற்றி பற்ற வைத்து விட்டு "எஸ்கேப்' ஆனான். நேராக வீட்டுக்கு வந்தான். கலைந்திருந்தவைகளை அடுக்கி வைத்து விட்டு படுத்துக் கொண்டான்.வழக்கம்போல அடுத்த நாள் வேலைக்குச் சென்றான்.

இரண்டு, மூன்று நாட்கள் சென்ற நிலையில், காந்திமதியை காணவில்லை என அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தான். "தொலையட்டும் , நிம்மதியா நீ வேலைக்கு போ' என்றனர்.இதற்குள்ளாக போலீஸ் எரிந்தும் எரியாத நிலையில் இருந்த காந்திமதியின் பிணத்தை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தியது.

ஆட்டோக்காரர்களால் அவள் விபச்சாரி என அடையாளம் காட்டப்பட்டாள். ஆனாலும், பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். இறுதியில் சிதம்பரம் கைது செய்யப்பட்டான்.

கோர்ட்டில் வழக்கு நடந்தது. பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் சாட்சி அளித்தனர். சிதம்பரம் கூலிப்படையைச் சேர்ந்தவன் என்பதால், அதிக தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதில் போலீஸ் குறியாய் இருந்தது. எதிர்பார்த்தது நடக்கவில்லை. சாட்சிகள் அவளுக்கு எதிராகத் தான் இருந்தது. சிதம்பரம் விடுதலையானான். ஆனால், ஆதரிக்க யாருமில்லாமல் அனாதையானான்!

நன்றி theipaar.com

படங்களைப் பார்வையிட‌ .... http://www.thedipaar.com/news/news.php?id=10426&cat=articles

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.