Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மைச் சினிமாவும், உடைபடும் உண்மைகளும்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்மார்கள் விரும்பும் குடும்பப் படம், ஆறு பாட்டு, நாலு சண்டைகள் நிறைந்த அதிரடி திரைப்படம்... என்றெல்லாம் விளம்பரங்கள் செய்வது அவுட் ஆஃப் பேஷன். கிராமத்துப் பின்னணியில் யதார்த்த படைப்பு என்றால்தான் தமிழ் சினிமாவில் மதிக்கவே செய்கிறார்கள்.

கலைந்த சிகையும், நாலு நாள் தாடியுமாக தேனி பக்கம் யதார்த்த ஜுரம் ஏறி அலையும் இயக்குனர்களைப் பார்த்தால் டர்ராகிறது. படம் பார்க்கிறவர்களை விடுங்கள். நடிக்கிறார்களே... எம கண்டம். ஐடி இளைஞர்கள் நாலு பேரை வாய்ப்பு தருகிறேன் என்று நாலு மாதம் கட்டாந்தரையில் உருள வைத்திருக்கிறார் ஒரு யதார்த்த இயக்குனர். பட்டினியும், கட்டாந்தரை ட்‌‌ரீட்மெண்டுமாக எஃப் சேனல் மாடல் மாதி‌ரி ஆகியிருக்கிறார்கள் நால்வரும்.

துருத்திய நாக்கும், தூக்கிகட்டிய லுங்கியுமாக மதுரை பாஷையில் இவர்கள்விடும் சவுண்‌ட், பொல்யூசன் க‌ண்ட்ரோல் வரைக்கும் போயிருப்பதாக கேள்வி. கோடம்பாக்கத்தை பாடாய்படுத்தும் இந்த யதார்த்த மேனியாவுக்கு துவக்க‌ப்புள்ளி, பருத்திவீரன். அடுத்து சுப்பிரமணியபுரம். தொடர்ச்சியாக வெண்ணிலா கபடிக்குழு, பசங்க, நாடோடிகள்.

தொடக்கவிழாவில், ரொம்ப வித்தியாசமாக கதை பண்ணியிருக்கோம் என்று ஜல்லியடிப்பதை நிறுத்தி, யதார்த்தமா எடுக்கப் போறோம் என்று சொல்லும் அளவுக்கு இந்தப் படங்களின் வெற்றி தமிழ் சினிமாவை பாதித்திருக்கிறது.

இதெல்லாம் பக்க விளைவுகள். நல்ல விளைவுகளும் உண்டு. முக்கியமாக கமர்ஷியல் சினிமா உலகம் வ‌ரித்துக் கொண்ட சில ‘சினிமா உண்மை’களை இந்தப் படங்கள் உடைத்தெறிந்திருக்கின்றன.

படம் எடுக்க பத்து கோடி வேண்டும், மாஸ் நடிக‌ரின் கால்ஷீட் முக்கியம் என்பதையெல்லாம் யதார்த்த சினிமாக்களின் வெற்றி துடைத்தெறிந்திருக்கிறது. இரண்டு கோடியில் கதை சொல்லி இருபது கோடி வரை சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையை தந்திருக்கின்றன சுப்பிரமணியபுரமும், வெண்ணிலா கபடிக்குழுவும்.

ஹீரோ என்றால் நல்லவன், வில்லன் என்றால் கெட்டவன் என்று மனிதர்களை பிளாக் அண்ட் ஒயிட்டாக பி‌ரிக்கும் தமிழ் சினிமாவின் நீண்ட நாள் வியாதியும் இந்தப் படங்களின் வரவால் தீர்ந்திருக்கிறது.

பருத்தி வீரன் ஹீரோவைப் பாருங்கள். தண்ணியடிப்பவன், பெண் சகவாசம் உள்ளவன், ரவுடி இத்யாதி... சுப்பிரமணியபுரம் நண்பர்களும் அப்படியே. வில்லன் என்றால் மொட்டை தலையுடன் பெண்கள் புடைசூழ விஸ்கி குடிப்பவன் என்ற பிம்பத்தை சுப்பிரமணியபுரம் கலைத்துப் போட்டது. சமூகத்தில் மதிக்கப்படுகிற சராச‌ரி குடும்பம்தான் அனைத்து வன்முறைக்கும் காரணமாக இருக்கிறது. அவர்கள் ரவுடிகளை உருவாக்குகிறார்கள், போஷிக்கிறார்கள், கொலை செய்கிறார்க‌ள். பசங்க படத்தில் ஹீரோ என்று தனியாக யாரும் இல்லை. இது எப்பிடி இருக்கு என்று முஷ்டி மடக்கும் அந்த‌ப் பொடியனும் ஹீரோதான். ஐஸ்லேண்டில் காஸ்ட்லி காஸ்ட்யூமில் ஹீரோயினை ஓடவிட்டால்தான் பாடல்களை ரசிப்பார்கள் என்ற விதியையும் யதர்த்த சினிமா முறித்து‌ப் போட்டது. ஊரோரம் புளிய மரம் நாட்டுப்புறத்தில் தொடங்கி, கண்களிரண்டால் மெலடி வரை தமிழக மக்களை பெ‌ரிதும் கவர்ந்தவை புழுதி மண்ணில் விளைந்த பொக்கிஷங்களே.

யதார்த்த படங்களின் மற்றொரு முக்கியமான பங்களிப்பு அவை காட்சிப்படுத்தும் களங்கள். சுப்பிரமணியபுரம் எண்பதுகளில் மதுரையிலுள்ள சுப்பிரமணியபுரம் எப்படி இருந்தது என்பதை கண்முன் கொண்டு வந்தது. யோசித்து‌ப் பாருங்கள், எண்பதுகளில் வெளிவந்த எந்த‌த் திரைப்படத்திலாவது (விதிவிலக்குகள் பொது விதியாகாது) இத்தகைய யதார்த்தம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறதா? அட்டை அரங்க வரவேற்பறையில் அப்பா நடிகர் பேப்பர் படிக்க, பட்டுச் சேலையும் கழுத்து நிறைய நகையுமாக அம்மா நடிகை அமர்ந்திருக்க, டாடி என்று அழைத்தபடி வீட்டிற்குள் நுழையும் ஹீரோவைத்தானே திரும்பத் திரும்ப பார்த்து வந்திருக்கிறோம்.

ஆயிரம் நாவல்களுக்கு மேல் எழுதியவர் ராஜேஷ்குமார். அவரது எல்லா கதைகளும் கோவையில் நடப்பதாகவே இருக்கும். ஆனால், இதுவரை எந்த கதையிலும், எந்த கேரக்டரும் கோவை தமிழில் பேசுவதை பார்க்க முடியாது. உரையாடல் எல்லாம் பொதுத் தமிழில் இருக்கும். இதேபோல்தான் நமது திரைப்படங்களும். பொதுவான அப்பா, பொதுவான ஹீரோ, பொதுவான வில்லன், பொதுவான ஹீரோயின், பொதுவான தமிழ் என்று, ஊர், மனிதர்கள், கலாச்சாரம, வட்டார வழக்கு என எந்த அடையாளங்களும் இல்லாமலே பெரும்பாலான திரைப்படங்கள் வந்து‌க் கொண்டிருந்தன. இந்த அடையாளமில்லா சினிமா ஒழுக்குக்கு அணை போட்டவை யதார்த்த திரைப்படங்கள்.

கதை நடக்கும் இடத்தின் அழுக்கும், அழகும் அப்படியே திரையில் பிரதிபலிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தற்போது உருவாகியிருக்கிறது. அதே நேரம், யதார்த்தம் தவிர்த்த வழக்கமான சினிமாத்தனங்களுடன் வரும் திரைப்படங்கள் ஒழிந்துவிட்டதாகவும் கூற இயலாது. மேலும், யதார்த்த சினிமாக்களை விட இந்தப் படங்கள் வசூலில் கல்லா கட்டுவதையும் மறுப்பதற்கில்லை.

பசங்க, வெண்ணிலா கபடிக்குழு படங்கள் சென்னையில் மொத்தமாக வசூலித்த பணத்தை பத்தே தினங்களில் ஆதவன் வசூலித்திருக்கிறது. அதேபோல் சுப்பிரமணியபுரத்தை விட கந்தசாமியின் வசூல் அதிகம். மாஸ் ஹீரோக்களின் கமர்ஷியல் படங்களுக்கான ஓபனிங் நம்ப முடியாத அளவுக்கு இன்னும் உச்சத்தில்தான் இருந்து வருகிறது. யதார்த்த சினிமாவுக்கான முனைப்பை இந்த விகிதாச்சாரம் முடக்கிவிடக் கூடும்.

இந்த‌த் தடையை நேர்மையான யதார்த்த சினிமாக்களுக்கு நாம் வழங்கும் மேலான ஆதரவின் மூலமாகவே கடக்க முடியும். யதார்த்த முகமூடியுடன் ‘சவுண்ட்விடும்’ படங்களை ஒதுக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த இரண்டும் சாத்தியப்பட்டால் தமிழ் திரையுலகை நேர்மையான யதார்த்த படங்களை நோக்கி நம்மால் முடுக்கிவிட முடியும். சினிமாவின் ஆரோக்கியமான எதிர்காலம் அதன் கன்ஸ்யூமர்களான ரசிகர்கள் கைகளில்தான் இருக்கிறது.

நன்றி thedipaar.com

படங்களைப் பார்வையிட‌ http://www.thedipaar.com/cinema/cinema.php?id=2718&cat=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.