Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாளில் புதுவையில் மில்லர் நினைவரங்கம் திறப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் நாளில் புதுவையில் மில்லர் நினைவரங்கம் திறப்பு

[படங்கள்] தமிழீழ தாயக விடுதலைக்காக தமதின்னுயர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பத்தில் கடந்த 27-11-2009 அன்று மாலை 4.00 மணியளவில் “மாவீரர் மில்லர் நினைவரங்கம்” திறப்பு நிகழ்ச்சியும் “மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வும்” நடைபெற்றது.

nov27_tn_001.jpg

nov27_tn_004.jpg

மாவீரர் மில்லர் நினைவரங்கத்தினை பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்து ஈகச் சுடரினை ஏற்றி வைத்தார். பெரியார். தி.க. பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன், பெரியார் தி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன், புதுச்சேரி பெரியார் தி.க. தலைவர் லோகு. அய்யப்பன் ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர்.

nov27_tn_006.jpg

பெரியார் தி.க. புதுச்சேரி மாநில தலைவர் லோகு.அய்யப்பன் அவர்கள் தமது தொடக்கவுரையில், தமிழீழத்திற்கு எதிராக சிங்கள இனவெறி அரசு அண்மையில் நடத்திய மனிதகுலம் அறிந்திராத மிகக்கொடூரமான ஆக்கிரமிப்புப் போரில் ‘‘மாவீரர் துயில் இல்லங்கள்’’ இடித்து தரைமட்டமாக்கப்பட்டதை வேதனையோடு குறிப்பிட்டார். மாவீரர்கள் நினைவாக ஒரு அரங்கம் கட்டவேண்டும் என்ற எண்ணம் இதனாலேயே ஏற்பட்டது என குறிப்பிட்டர்.

பெரியார் தி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் தனது உரையில் 1989-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆற்றிய மாவீரர் தின உரையினை தொகுத்து உரையாற்றினார்.

பெரியார். தி.க. பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் அவர்கள் தன்னுடைய எழுச்சியுரையில் தமிழகத்தில் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாமல் பிளவு பட்டு நிற்பதால்தான் இந்திய மத்திய அரசு இலங்கைக்கு அனைத்து இராணுவ உதவிகளையும் செய்து வருவதாகவும் தமிழகத்தில் நடைபெறும் ஈழத் தமிழர் ஆதரவு போராட்டங்களை ஒடுக்கி வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த மாவீரர் தினத்தில் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட உறுதி ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் அவர்கள் தன்னுடைய எழுச்சி உரையில் ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலையை உலகில் எந்த நாடும் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்ததை வேதனையுடன் குறிப்பிட்டார். சிங்கள இராணுவம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்ததையும் போரின் போது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் நேர்மையான வழி நடத்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்கு நெருக்கடி ஏற்பட்ட போதும் கூட நேர்மையுடன் போரிட்டதை குறிப்பிட்டார். முள்வேலிக் கம்பிகளுக்குள் சிறைபட்டிருக்கும் உறவுகளை விடுவிக்க தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். தமிழர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையை துரோகிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை தடுத்து நிறுத்த தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என குறிப்பிட்டார்.

இறுதியாக பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தனது உரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடக்க காலத்தில் மற்ற போராளி அமைப்புகளைவிட மிக குறைந்த எண்ணிக்கையில் போராளிகளை கொண்டிருந்ததை குறிப்பிட்டு மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் நேர்மையான வழிகாட்டுதலில் எண்ணற்றோர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து தமிழீழ விடுதலைக்காக போராடியதை குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவுக்கு விடுதலைப்புலிகளின் சகோதர யுத்தம்தான் காரணம் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியதை தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் கடுமையாக கண்டித்தார். எந்த ஒரு விடுதலை இயக்கமும் தமது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தடையாக இருக்கும் துரோகிகளை களத்தில் இருந்து அப்புறப்படுத்துவது இயல்பு. இதை எப்படி கருணாநிதி சகோதர யுத்தம் என்று கூறலாம் என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

மேலும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கவும் தமிழீழ வீடுதலையை வென்றெடுக்கவும் தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தமிழனும் தமது கடமையை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என குறிப்பிட்டார். பெருந்திரளான தமிழீழ உணர்வாளர்கள் மாவீரர் நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆடியோ: மாவீரர் நாள்: காப்டன் மில்லர் நினைவரங்க திறப்பு – கொளத்தூர் மணி உரை

http://www.meenagam.org/?p=17726

கப்படன் மில்லரை கௌரவித்தமைக்கு நறிகளும் பாராட்டுகளும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.