Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவிலாறில் இருந்து முள்ளிவாய்கால் வரை.........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவிலாறில் இருந்து முள்ளிவாய்கால் வரை.........

திருகோணமலையை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்ட சிறீலங்கா, தனது அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மண்ணை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் இறங்கியது.

2006ம் ஆண்டின் பிற்பகுதியில் கிழக்கின் உதயம் என்ற பெயரில் மட்டக்களப்பு மண்ணை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை சிறீலங்கா தொடங்கியிருந்தது. தமிழர் தாயகத்தில் மட்டக்களப்பு மண் இயற்கையின் எழில்கொஞ்சும் ஒரு மாவட்டமாகக் காணப்படுகிறது. அங்கு எழுவான்கரை, படுவான்கரை என இரண்டு பிரிவுகள் உள்ளன. இவற்றை பிரித்து நிற்கும் நீரேரியை வாவி என்று சொல்வார்கள். இதனை நீண்ட அகலமுடைய ஆற்றுப் பகுதி என்றும் குறிப்பிடலாம்.

எழுவான்கரை மட்டக்களப்பின் நகர்ப் பகுதியாகவும் சிறீலங்கா அரசின் அரச நிர்வாகங்கள் இயங்கும் பகுதியாகவும் அதாவது சிறீலங்காப் படையின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட பகுதியாக காணப்படுகிறது. படுவான்கரை விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியாகவும் கிராமத்து வாழ்க்கை வாழும் நடுத்தர நிலையுடைய மக்களையும் கொண்ட பிரதேசமாகக் காணப்படுகிறது. படுவான்கரையில் வயலும் வயல் சார்ந்த இடமாகக்கொண்டதால் மக்கள் விவசாயத் தொழிலையும், கால்நடை வளர்ப்பு தொழிலையும் பிரதான தொழிலாகக்கொண்டு வாழ்கின்றார்கள்.

அத்துடன் நன்னீர் மீன்பிடி தொழிலையும் அங்கு செய்கிறார்கள். படுவான்கரை பகுதியின் மேற்குப் பக்கமாக பொலனறுவை மற்றும் சிங்கள கிராமங்களின் காட்டு பகுதியை எல்லை பகுதியாகவும் தெற்கே அம்பாறை மாவட்டத்தின் ஒருசில பகுதிகளை எல்லை பகுதியாகவும் கிழக்கே வாவியையும் கொண்டு சூழ்ந்திருந்தது. இப் பிரதேசத்தில்தான் அன்று விடுதலைப் புலிகளின் நிர்வாகம் தலைதூக்கி நின்றது. சமாதான காலத்துக்குப் பின்னான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் படை அணிகளின் வளர்ச்சியும் மக்கள் மீதான நிர்வாக கட்டமைப்பு வளர்ச்சியும் இங்கு அதிகரித்துக் காணப்பட்டது.

அங்கு படையணிகள் சிறப்பு மிக்க வலுவான படையணிகளாக மாற்றப்பட்டிருந்தன. அத்துடன் விடுதலைப் புலிகள் ஓர் இராணுவ கட்டமைப்பிற்குள் அங்கு வளர்க்கப்பட்டிருந்தார்கள். அதேபோல் மக்கள் மீதும் விடுதலைப் புலிகளின் அரசியல் நிர்வாக அலகுகள் சிறப்புற செயற்பட்டன. ஆனால், 2003ம் ஆண்டு மார்ச் மாதம் கருணா துரோகத்தனத்தால் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் மீள் கட்டுமான பணிகள், படையணிகள் எல்லாம் மீண்டும் தொடக்கத்தில் இருந்தே புதுப்பிக்க வேண்டிய தேவை வன்னித் தலைமைக்கு எழுந்திருந்தது.

இதன்படி வன்னியில் இருந்து தளபதிகள், போராளிகள் மட்டக்களப்பிற்கு மாற்றப்படுகிறார்கள். அங்கு கருணாவின் பிரச்சினை காரணமாக அமைப்பில் இருந்து விலகிய, வீடுசென்ற போராளிகள் மீள இணைக்கப் படுகிறார்கள். இப் போராளிகளுக்கு இரண்டு பக்க அச்சுறுத்தல் காரணமாக (கருணாவினதும், சிறீலங்கா இராணுவத்தினரினதும்) விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொள்கின்றார்கள். கருணாவின் பிரச்சினை வரும்போது வன்னி தலைமைக்கு எதிராக நின்று செயற்பட்ட போராளிகளே இவர்கள்.

இவ்வாறு இணைக்கப்பட்ட போராளிகளில் பொறுப்பானவர்களும் அடங்குவார்கள். இதில் கருணாவுடன் சேர்ந்து தமிழீழ தேசியத் தலைமைக்கு எதிராக தீவிரமாக செயற்பட்ட பொறுப்பாளர்கள், போராளிகள் இனம்காணப்படுகிறார்கள். அவர்களிடம் அறிக்கை, பின்பு விசாரணை என்று தொடர்ந்தது. விசாரணைகளின் முடிவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைக்கு எதிராக செயற்பட்டவர்கள் என உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிறைத் தண்டனையும், பொறுப்பாக நின்று நடத்திய சிலருக்கு மரண தண்டனையும் வழங்கப்படுகின்றது.

அத்துடன், கருணாவுடன் விலகிச்சென்றவர்கள் சிலர் இராணுவத்துடன் இணைந்துகொண்டு விடுதலைப் புலிப் போராளிகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதன் பின்னர், அவர்கள் மீதான களையயடுப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் மட்டக்களப்பில் மேற்கொள்ளத் தொடங்குகின்றார்கள். இதன் காரணமாக கருணாவுடன் நின்று செயற்பட்ட பலர் மட்டக்களப்பினை விட்டு வேறு மாவட்டங்களுக்கும், எதுவித பிரச்சினையும் கொடுக்காமல் வீட்டிற்குச் சென்றும், வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள். மட்டக்களப்பில் புலிகளின் ஆதிக்கம் மேல் ஓங்குகின்றது. இவ்வாறு மட்டக்களப்பில் போராளிகள் இணைக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கான அடிப்படை பயிற்சி முடிந்ததும் வன்னிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு தலைமையுடனான சந்திப்புக்கள் நடைபெறுகின்றன. மட்டக்களப்பில் நிலைகொண்டிருந்த ஜெயந்தன் படையணியின் கட்டுமானம் வன்னியில் கொண்டு வரப்படுகின்றது. இவ்வாறு மட்டக்களப்பில் அரசியல் பணிகளும் விஸ்தரிக்கப்படுகின்றன. நகர்புறங்களில் அரசியல் அலுவலகங்கள் இயங்குகின்றன. மக்களின் பல பிரச்சினைகள் விடுதலைப் புலிகளால் தீர்க்கப்படுகின்றது. இவ்வாறு பலவேலைகளைச் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மாவீரன் லெப்.கேணல் கெளசல்யன்.

இவரின் அரசியல் பணி விசித்திரமானது. அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இவரது செயற்பாடுகள் மூலம் மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் இடையேயான உறவுகள் தீர்க்கப்பட்டும் இணக்கமான நிலை காணப்படுகிறது. தமிழ், முஸ்லீம் மக்களிடையேயான நல்லுறவு வளர்க்கப்படுகிறது. இதன்போதுதான் மட்டக்களப்பு போராளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற தலைமையின் எண்ணத்திற்கமைவாக அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக செயற்பட்ட இளந்திரையன் வன்னிக்கு வரவளைக்கப்பட்டு, பின்பு விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளராக நியமிக்கப்படுகின்றார்.

கெளசல்யனின் செயற்பாடுகள் மூலமும் வன்னி, மட்டக்களப்பு என்ற வேறுபாடின்றி போராளிகள் செயற்படுகின்றார்கள். படுவான்கரையில் கரடியனாறு, குடும்பிமலை போன்ற பிரதேசங்கள் விடுதலைப் புலிகளின் இராணுவ வலையமாக காணப்படுகின்றது. படுவான்கரையில் மக்களுக்கான விடுதலைப் புலிகளின் ஊடகமாக ஈழநாதம் பத்திரிகை காணப்படுகிறது. கொக்கட்டிச்சோலை பகுதியில் ஈழநாதம் தனது கிளையினை செயற்படுத்தி மக்களுக்குப் போராட்ட கருத்துக்கமைய நாளாந்த செய்திகளையும் சொல்கின்றது. இவ்வாறு விடுதலைப் புலிகளின் அரசியல் நிர்வாக அலகுகள் சிறப்புற செயற்படுகின்றன.

இதனிடையே தமிழீழ இசைக்குழு உருவாக்கப்படுகிறது. மேஜர் கருவேந்தன் தலைமையில் இந்த இசைக்குழு செயற்படுகிறது. அங்குள்ள போராளிக் கலைஞர்களையும், விடுதலை ஆதரவு கலைஞர்களையும் இணைத்து தமிழீழ இசைக்குழு செயற்படுகின்றது. பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றது. வன்னி கலைஞர்களால் செயற்படுத்திக்கொண்டிருந்த தெருவழி நாடகங்கள் மட்டக்களப்பிற்குக் கொண்டு செல்லப்பட்டு மக்களிடையே அரங்கேற்றப்படுகின்றன. சிறப்பு மிக்க கோயிலாகக் காணப்படும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழா உள்ளிட்ட ஆலயங்களின் நிகழ்வுகளில் தமிழீழ இசைக்குழு மற்றும் கலைஞர்களின் நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகின்றன.

தமிழீழ காவல்துறை நிர்வாகம் அங்கு பலப்படுகின்றது. மக்களிடையே காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. பெற்றோரை இழந்த சிறுவர்களுக்காகவும் மிகவும் வறிய சிறுவர்களுக்காகவும் அறிவுச்சோலைகள் உள்ளிட்ட சிறுவர் இல்லங்கள் உருவாக்கப்பட்டு சிறுவர்கள் பராமரிக்கப்படுகின்றார்கள். படுவான்கரையில் பொருண்மிய கட்டமைப்பு சிறப்புற செயற்படுகிறது. படுவான்கரையில் பெருமளவான கால்நடைகள் (ஆடு, மாடு) உள்ளன. இவற்றின் உரிமையாளர்களுக்கு பொருண்மிய கட்டமைப்பு ஊடாக மானிய அடிப்படையில் நிதி உதவிகள் வழங்கப்படுகிறது. பால் உற்பத்தி பெருகிறது. இதுபோன்றுதான் விவசாய உற்பத்திக்கும் செயற்பாடுகள் நடைபெறுகின்றது.

நெல் உற்பத்தி பெருகுகின்றது. இதுபோன்றே நன்னீர் மீன்பிடிக்கும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படுகிறன. மீன்பிடி தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கிறது. விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகளால் படுவான்கரைப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் சற்று உயர்வடைகின்றது. இங்கு குறிப்பிடக்கூடிய விடயம் ஒன்று உள்ளது. சிறீலங்கா அரசின் பேருந்துக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று வரக்கூடிய நிலை இங்கு காணப்படுகிறது. அதேபோன்றே சிறீலங்கா அரசின் மின்சாரத்தை படுவான்கரைப்பகுதி மக்கள் பெறக்கூடிய வகையில் இருந்தது.

வேலை இல்லாமல் இருந்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன்மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படுகிறது. அத்துடன், படுவான்கரையில் மாவீரர் துயிலும் இல்லம் சிறப்புறக் கட்டப்படுகிறது. அங்குள்ள வீதிகளில் மாவீரர் நினைவுச் சின்னங்கள் பொறிக்கப்படுகிறன. இவ்வாறு அங்குள்ள மக்கள் தமது இயல்பான வாழ்க்கைக்குள் செல்வதற்கு சமாதான காலத்தை விடுதலைப் புலிகள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோதுதான், சிறீலங்காவின் போர் மட்டக்களப்பு மண்ணை சூழத் தொடங்கியது.

(தொடரும்…)

நன்றி:ஈழுமுரசு

http://www.lovetamils.com/cin/category/eelam-articles/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3/

Edited by yarlpriya
செய்தி முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவிலாறில் இருந்து முள்ளிவாய்கால் வரை.........

லிங்கயும் கானேல்ல.....

மாவிலாறில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடத்திது முறியடிப்புச்சமரும் தந்திரோபாய பின்வாங்கலும்தான். 2004 ம் ஆண்டு துடங்க நினைக்க சுநாமி அடிச்சுக்கொண்டு போட்டுது, மகிந்தாவை கொண்டுவந்து 2006 மாவிலாற்றில துடங்கி மூதூரில பலத்தை காட்டி முகமாலய பிடிக்கப்போக பிடிச்ச சனியன் முள்ளிவாய்க்கால்மட்டும் தொடருமெண்டு யார் கண்டது?

டிபக்ரோ ஸ்ரேற் றன்பண்ணின ஆக்கள் நாங்கள். அதுதான் மாவிலாறு பூட்டி பலம்காட்டின நாங்கள். இப்ப பாத்தால் மெழுகுதிரி கொழுத்த ஆக்களில்ல. :lol:

லிங்கயும் கானேல்ல.....

மாவிலாறில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடத்திது முறியடிப்புச்சமரும் தந்திரோபாய பின்வாங்கலும்தான். 2004 ம் ஆண்டு துடங்க நினைக்க சுநாமி அடிச்சுக்கொண்டு போட்டுது, மகிந்தாவை கொண்டுவந்து 2006 மாவிலாற்றில துடங்கி மூதூரில பலத்தை காட்டி முகமாலய பிடிக்கப்போக பிடிச்ச சனியன் முள்ளிவாய்க்கால்மட்டும் தொடருமெண்டு யார் கண்டது?

டிபக்ரோ ஸ்ரேற் றன்பண்ணின ஆக்கள் நாங்கள். அதுதான் மாவிலாறு பூட்டி பலம்காட்டின நாங்கள். இப்ப பாத்தால் மெழுகுதிரி கொழுத்த ஆக்களில்ல. :lol:

உமது அமைப்பின் திறைசேரி உமது கையிலை தான் இருக்குதோ...?? நல்லா கணக்கு காட்டுறீர்... நல்லா கதையும் விடுகிறீர்...

2005 மாவீர நாளில் பாலா அண்ணா தாங்கள் தான் மகிந்தவை கொண்டு வந்தனாங்கள் எண்டு சொன்னவர் எண்டு பிளந்து கட்டின ஆள் இல்லியா நீங்க... :lol::):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.