Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய பதவிகள்; சதிக் குற்றச்சாட்டுகள்: சூடு பிடிக்கின்றது சிறிலங்கா அதிபர் தேர்தல் களம்

Featured Replies

சரத் பொன்சேகா நியமனப் பத்திரம் தாக்கல் செய்வதைத் தடுக்க சதி

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தனது அதிபர் வேட்பாளர் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்யாமல் தடுப்பதற்கான திட்டம் ஒன்று அரசாங்க உயர் மட்டத்தில் தீட்டப்பட்டிருப்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார்.

அதிபர் பதவிக்கான நியமனப்பத்திரங்கள் நானை வியாழக்கிழமை சிறிலங்காவின் தேர்தல் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவிருக்கும் நிலையில் மங்கள சமரவீர இந்த அறிவித்தலை வெளியிட்டிருக்கின்றார்.

பௌத்த பிக்குகளைப் பெருமளவுக்கு தேர்தல் திணைக்களத்தின் முன்பாகக் கொண்டுவந்து சரத் பொன்சேகா தனது நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்வதற்கு அனுமதிக்காமல் தடுப்பதற்கான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருப்பதாகவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.

சிறிலங்காவின் அதிபர் பதவிக்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் அதில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனப்பத்திரங்கள் நாளை 17 ஆம் திகதி கொழும்பு இராஜகிரியாவிலுள்ள சிறிலங்காவின் தேர்தல் திணைக்களத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

நாளை காலை 9.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் நியமனப்பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதை முன்னிட்டு கொழும்பில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தமக்குரிய கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கான இறுதிநாள் இன்றாகும். இன்று வரையில் பிரதான இரு வேட்பாளர்களான மகிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா உட்பட 23 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கமும் சுயேட்சையாகப் போட்டியிடுவதற்காக தனது கட்டுப்பணத்தை நேற்று செலுத்தியுள்ளார்.

ரணிலை எதிர்த்தோருக்கு அமைச்சர் பதவி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முன்வந்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கும் அமைச்சர் பதவிகளை அரசாங்கம் வழங்கியுள்ளது.

எதிர்வரும் அரச அதிபர் தேர்தலில் ஐதேகவின் சார்பில் வேட்பாளர் எவரும் நிறுத்தப்படாததற்கு ஐதேகவின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவும், இந்திக பண்டாரநாயக்கவும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

சிறிலங்கா அரச அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று இவர்கள் இருவரும் ஆளும்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து இன்று மாலை நடந்த நிகழ்வில் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ காணி அபிவிருத்தி படைவீரர்கள் புனர்வாழ்வு அமைச்சராகவும், இந்திக பண்டாரநாயக்க இயற்கை வளங்கள் பிரதியமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதே காரணத்துக்காக ஐ.தே.க.விலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட ஐ.தே.க.வின் முன்னாள் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசநாயக்கவுக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்பு ஒன்று அதிபர் தேர்தலின் பின்னர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதுவரையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் எஸ்.பி.திசநாயக்க முக்கிய பங்கை வகிப்பார் எனவும் ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்கா அதிபரின் கொள்கை விளக்க அறிக்கை நாளை வெளியிடப்படும்

சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச தன்னுடைய கொள்கை விளக்க அறிக்கையை நாளை வியாழக்கிழமை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதிபர் பதவிக்காக நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான தன்னுடைய நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்த பின்னர் நாளை மாலை அவரது அறிக்கை வெளியிடப்படும்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள், கல்வியை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்பவற்றுடன் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்கள் தொடர்பாகவும் இந்த கொள்கை விளக்க அறிக்கையில் விபரிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.

க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதியைப் பெறத் தவறிய மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவது போன்ற திட்டங்கள் பற்றியும் அதிபரின் கொள்கை அறிக்கையில் வெளிப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாட்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் பாரிய கட்டுமானத் திட்டங்கள் தொடர்பாகவும் இந்த அறிக்கையில் விளக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் பிரேமஜயந்த, ஐந்து துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலையம் ஒன்று என்பவற்றை அமைப்பது தொடர்பாகவும் இந்த அறிக்கையில் அதிபர் குறிப்பிடுவார் எனச் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காகவும், வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதற்காகவும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பாகவுமே இதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதா அமைச்சர் தெரிவித்த போதிலும், இன நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் திட்டங்கள் பற்றி இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்குமா என்பதையிட்டு எதுவும் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.