Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளக்கமறியலில் உள்ளோரை தடுப்பு காவலுக்கு மாற்றமுடியாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதிகள் தொடர்பில் வழக்குத் தொடர முடியுமே தவிர, அவர்களை புதிய உத்தரவின்பேரில் சிறையிலிருந்து தடுப்புக்காவலுக்கு மாற்ற முடியாது. இவ்வாறு அரசுத் தரப்புக்குக் கண் டிப்பான உத்தரவு ஒன்றை உயர்நீதிமன் றம் விடுத்தது.

வெள்ளவத்தையை வசிப்பிடமாகக்கொண்ட தியாகராஜா மோகனரூபன் (வயது 33) என்ற இளைஞர் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் மீதே பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான உயர்நீதிமன்றம் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்தது.

இது தொடர்பாகக் கூறப்படுபவை வருமாறு:

மேற்படி மோகனரூபன் 2007 செப்டெம்பர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டார். அவரது கைதும், தடுத்து வைத்தலும் சட்டவிரோதமானவை எனத் தெரிவித்து, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருப்புமுனையான சட்ட உத்தரவு ஒன்றை வழங்கியது. அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கைதுசெய்யப்பட்ட சகல கைதிகளும் 90 நாட்களுக்குள் விளக்கமறியலுக்கு நீதிமன்றக் காவலுக்கு மாற்றப்படவேண்டும் என்ற இடைக்கால உத்தரவை நீதியரசர்கள் ஷிராணி பண்டாரநாயக்கா, ராஜா பெர்னாண்டோ, சலீம் மர்சூக் ஆகியோரைக்கொண்ட ஆயம் 2008 செப்டெம்பர் 27 ஆம் திகதி வழங்கியது. இதனை அடுத்து, தடுப்புக்காவல் உத்தரவின்கீழ் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவிலிருந்து தியாகராஜா மோகனரூபன், நீதிமன்றப் பணிப்பின்பேரில் சிறைச்சாலைக்கு விளக்கமறியலுக்கு மாற்றப்பட்டார்.

ஜனாதிபதியின் ஒப்பம் பெற்று புதிய தடுப்புக் காவல் பத்திரம்

இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் 9(1) பிரிவின் கீழ், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் ஒப்பம் பெற்று புதிய தடுப்புக்காவல் பத்திரம் ஒன்றைக் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பித்து கடந்த ஒக்டோபர் 8 ஆம் திகதி மோகனரூபனை மீண்டும் தமது காவலுக்கு மாற்றும் உத்தரவைப் பெற்றுக்கொண்டனர். இத்தகைய நடவடிக்கை சட்ட விரோதமானது எனத் தெரிவித்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா அடிப்படை உரிமை மீறல் தொடர்பாகப் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆஜராகி வாதிட்டார். பிரதம நீதியரசர் அசோக டி சில்வா, நீதியரசர் நிமால் காமினி அமரதுங்க, சலீம் மர்சூக் ஆகியோர் முன்னிலையில் கடந்த புதனன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தமிழ்க் கைதிகள் விவகாரத்தில் திருப்புமுனை

ஒருதடவை நீதிமன்ற உத்தரவில் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவரை மீண்டும் தடுப்புக்காவல் உத்தரவுப் பத்திரம் பிறப்பித்து கைது செய்து, தடுப்புக் காவலுக்கு மாற்றுவது சட்ட விரோதமானது என வாதிட்டார் பாயிஸ் முஸ்தபா. அரச தரப்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ரியாஸ் ஹம்ஸா புதிய தடுப்புக்காவல் உத்தரவுப்பத்திரம் வேறு புதிய விசாரணை தொடர்பானது என்றார். மோகனரூபனுக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவந்த ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, உயர்நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவு நடைமுறையில் இருக்கும்போது திரும்பவும் அவரைப் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவுக்கு மாற்றியமை நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்றார். நீதிமன்றக் காவலில் உள்ள ஒருவரை தடுப்புக் காவல் உத்தரவுப் பத்திரத்தின் பேரில் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசெல்வது கண்டிக்கப்படவேண்டிய நடவடிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் உடனடியாக மோனரூபனை நீதிவான் முன் பாரப்படுத்தித் திரும்பவும் சிறைச்சாலைக்கு மாற்றும்படி உத்தரவிட்டது. அவர் தொடர்பாக விசாரணை ஏதும் இருப்பின் நீதிவானின் அனுமதி பெற்று அவரை சிறைச்சாலைக்குச் சென்று விசாரிக்கலாம் என்றனர் நீதியரசர்கள். இந்த உத்தரவும் தமிழ்க் கைதிகள் விவகாரத்தில் மற்றொரு திருப்புமுனை எனக் கூறப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.