Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றாலேதமிழர்களுக்கு தீர்வு- அரசாங்கம்

Featured Replies

வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். எனவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னரே அதுகுறித்து ஆராய முடியும்.

ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு கிழக்கு பிரச்சினை தீர்வுக்கான வெளிமாதிரியை மட்டுமே முன்வைக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்று தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு, அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை. பதிலளிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு சட்டப்பின்னணியைக்கொண்ட விசேட குழுவொன்றை நியமித்துள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது.

அதில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை மிக்க தலைவராக திகழ்கின்றார். ஆனால் எதிரணி வேட்பாளரோ ஆரம்பம் முதல் பரஸ்பரம் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்தவண்ணம் நம்பகத்தன்மையை இழந்து வருகின்றார். நாட்டின் தலைமைப் பதவியை பொறுப்பேற்க முயற்சிக்கும் ஒருவருக்கு நம்பகத்தன்மை என்பது மிகவும் முக்கியமானதாகும்.

கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுவிட்டதா?

பதில்: ( சுசில்) இதுவரை பதிலளிக்கப்படவில்லை. பதிலளிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு சட்டப்பின்னணியைக்கொண்ட விசேட குழுவொன்றை நியமித்துள்ளோம். பதில்: ( சரத் அமுனுகம) ஐக்கிய நாடுகள் சபையின் கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிப்போம். அதன் சட்டத்தன்மைகள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்றை நியமித்துள்ளோம். இவற்றை நாம் நினைத்தமாத்திரத்தில் செய்துவிட முடியாது. அதற்கென்று ஒரு நடைமுறை உள்ளது. ( ஆனால் மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ விஜயசிங்க அவசரப்பட்டு பதில் கடிதம் அனுப்பியமையும் பின்னர் அதனை திருப்பி தருமாறு கேட்டதும் பற்றி குறிப்பிடவில்லை)

கேள்வி: வடக்கு கிழக்குப் பிரச்சினை தீர்வு தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படுமா?

பதில் :lol: சுசில்) நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் அமைதிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குமான வேலைத்திட்டங்கள் மஹிந்த சிந்தனை தொடர்ச்சியில் முன்வைக்கப்படும். கேள்வி: வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலேயே எனது கேள்வி அமைந்தது.

பதில்: ( சுசில்) வடக்கு கிழக்கு பிர“ச்சினைக்கான தீர்வை முன்வைக்க பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். எனவே பாராளுமன்ற தேர்தலின் பின்னரே அதுகுறித்து ஆராய முடியும். ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்குப் பிரச்சினை தீர்வுக்கான வெளிமாதிரியை மட்டுமே முன்வைக்க முடியும்.

இதுவரை காலமும் அனைத்து கட்சி குழுவினை சாட்டாக வைத்து காலம் கடத்தி வந்த மஹிந்த அரசு இப்போ மூன்றில் இரண்டு பெரும்பான்மை என கூறிவருகின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை என எதிர்காலத்தில் ஒரு கட்சி வாக்குகளை பெறுவது என்பது சாத்தியப்படாது என்ற தீர்க்க தரிசனத்திலேயே ஜே.ஆர் ஜெயவர்த்தன யாப்புகளை மாற்றி அமைத்தார்.

எனவே மஹிந்த தமிழர்களுக்கு அரசியல் தீர்வே இருக்காது என கூறுகின்றாரா? http://www.eelanatham.net/news/important

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.