Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் 600 வங்கிக்கணக்குகளை முடக்க அய்யண்ணா என்ற ஆனந்தராஜாவை கைது செய்ய வேண்டும் ரொஹான்

Featured Replies

புலிகளின் 600 வங்கிக்கணக்குகளை முடக்க அய்யண்ணா என்ற ஆனந்தராஜாவை கைது செய்ய வேண்டும் ரொஹான்

உலகெங்கிலும் உள்ள புலிகளின் 600 வங்கிக் கணக்குகளையும், பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான கப்பல்கள் உள்ளிட்ட சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டுமானால், பொன்னையா ஆனந்தராஜா என்பரை கைது செய்ய வேண்டும் என கலாநிதி ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அமெரிக்கக் கணக்காளரான இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது ஐரோப்பாவை வதிவிடமாகக் கொண்டுள்ளார்.

2003ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் சர்வதேச நிதிப்பொறுப்பையும் ஆயுதங்கள் கொள்வனவுக்கான பொறுப்பையும் கே.பி. ஏனப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து பொன்னையா ஆனந்தராஜாவிடம் ஒப்படைத்தார். பின்னர் ஜனவரி 2009 இல் தான் அது மீளவும் கே.பியிடம் கையளிக்கப்பட்டது. எனினும் தற்போது கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கே. பத்மநாதன் புலிகளின் நிதி மூலங்களின் சிறுபகுதியையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருந்ததாகவும் றொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

புலிகளின் சர்வதேசக் கணக்காளரான பொன்னையா ஆனந்தராஜா ஐரோப்பாவிலும், சர்வதேச ஆயுதக் கொள்வனவாளர் ஆசியாவிலும், சர்வதேசரீதியாகக் கப்பல்களுக்குப் பொறுப்பானவர் வட அமெரிக்காவிலும் வசித்து வந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொன்னையா ஆனந்தராஜா, ஐயா, ராஜா, அய்யண்ணா ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுவார். இவர் சங்கிலி என அழைக்கப்படும் கனகராஜா ரவிசங்கர் என்பவருடன் இணைந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளதாகவும், முன்னாள் கடற் புலியான கனகராஜா ரவிசங்கர் பின்னர் புலிகளின் ஆயுதக் கடத்தல்காரராகவும் ஐரோப்பா மற்றும் இடங்களுக்கு ஆட்களைக் கடத்துபவராகவும் செயற்பட்டு வந்ததாகவும் றொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ரவிசங்கர் கனடாவில் கடற் போக்குவரத்து குறித்து கற்றிருக்கிறார். இவரது கட்டுப்பாட்டிலிருந்த கப்பல் வடகொரியாவிலிருந்து ஆயுதங்களை எடுத்து வந்து சிறிய படகுகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வந்துள்ளார்.

போர் முடிவடைந்ததற்குப் பின்னர் இக்கப்பல்களை கடத்தல்களுக்கும் ஆட்கடத்தல்களுக்கும் புலிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். ரவிசங்கரின் கட்டப்பாட்டில் இருந்த கப்பல்களும் அதற்கே பயன்படுத்தப்பட்டன.

விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான எம்.வி. ஓசியன் லேடி என்ற கப்பலின் ஊடாக 76 விடுதலைப் புலி உறுப்பினர்களை கடந்த ஒக்ரோபரில் கனடாவுக்கு கடத்தியவரும் அவரே என்றும் றொஹான் குணரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையரான கலாநிதி றொகான் குணரத்ன பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் துறைசார் செயற்பாடுகளில் நிபுணத்துவம் பெற்றவராகவும் இலங்கை அரசாங்கத்திற்கு அது குறித்து ஆலோசனைகள் வழங்குபவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=19104&cat=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தானா பிளேன் ஏறிப்போனதெண்டுறது உண்மையாயிருக்குமோ? :)

புலிகளின் பணம் அல்லது சொத்துக்கள் கையகப்படுத்தப்ப்படுமாக இருந்தால் அது தமிழ் மக்களின் நலத்திட்டத்துக்கே பாவிக்கப்பட வேண்டும். அதுவே நீதியானதுகூட.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ரோகான் குணதிலகவுக்கு உது தேவையில்லாத வேலை.. நம்மாக்களே, பதுக்கியிருக்கிற பணத்தை வெளியில விடு எண்டு கதறிக்கொண்டு இருக்கினம். அப்ப ஐயண்ணா மாதிரி ஆக்களின்ர நிலை இப்ப படு மோசம்தானே..! :lol:

காசு சிங்களவனிட்ட போனாலும் பரவாயில்லை.. ஆனால் தமிழனிட்ட இருக்கிறதுக்கு விட்டுவைக்கலாமோ?? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.