Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவின் ஆங்கிலப் புத்தாண்டு பரிசாக கிளிநொச்சியில் தமிழ்ப்பெண் படுகொலை

Featured Replies

சிறீலங்காவின் ஆங்கிலப் புத்தாண்டு பரிசாக கிளிநொச்சியில் தமிழ்ப்பெண் படுகொலை

சிறீலங்கா அரசின் ஆங்கிலப் புத்தாண்டு பரிசாக கிளிநொச்சியில் தமிழ்ப்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வதை முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கிளிநொச்சிக்கு கொண்டுசென்று விடப்பட்டுள்ளவர்களில் முறிகண்டியின் மேற்குப் பகுதியில் உள்ள மக்களில் 35 அகவையுடைய நாகராஜா ஆரியமலர் என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இவரது உடலம் கிளிநொச்சியில் உள்ள காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஏ.9 முதன்மை வீதிகளிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மற்றும் முல்லைத்தீவின் மேற்குப் பகுதிகளிலும் சிங்களப் படைகள் முகாம்கள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளர்கள். இவ்வாறு சிங்களக் காடையர்களின் மத்தியில்தான் தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கொண்டுசென்று விடப்பட்டுள்ளார்கள்.

நேற்று ஆரியமலர் எனும் குடும்பப்பெண் தனது இருப்பிடத்தை விட்டு வெளியில் சென்றுள்ளதாகவும், வெளியில் சென்று நீண்டநேரமாகியும் இருப்பிடம் திரும்பாததால் இவரின் தாயார் காவல்துறையில் முறையிட்டுள்ளதை அடுத்து முறிகண்டியின் சித்தாண்டி பிரதேசத்தில் காவல்துறையினர் நடத்திய தேடுதலை அடுத்து இப்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இப்பிரதேசம் எங்கும் சிறீலங்காப் படைப்பிரிவின் 58ஆவது டிவிசன் படையணியினர் முகாம்கள் அமைத்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வாறான சூழலில்தான் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படுகொலைக்கு பின்பு இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் மத்தியில் அச்சநிலை தேன்றியுள்ளது.

http://uyarvu.com/

வடமராட்சி மற்றும் மாதகலில் மூன்று சடலங்கள் மீட்பு

வடமராட்சி கரணவாய்ப்பகுதியில் இரு சடலங்கள் மீட்கப்பட்டு நேற்று மந்திகை ஆதார வைத்தியாசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கரணவாய்ப்பகுதியில் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மேற்படி இரு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த முருகேசு செல்வராசா (வயது 65), அப்பகுதியைச் சேர்ந்த தி.விக்கினேஸ்வரன் ஆகியோரினது சடலங்களே மேற்படி கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் ஆகும்.

மேற்படி இருவரும் ஏவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்து இன்னமும் தெரியவரவில்லை. இது குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை மாதகல் அந்தோனியார் கோவிலை அண்டிய பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலத்திலிருந்த அடையாள அட்டை, புகையிரதப் பயணச்சீட்டு என்பவற்றைக் கொண்டு முதியவர் மாதகல் பகுதியைச் சேர்ந்த திருச்செல்வம் தேவசகாயம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் சிலவாரங்களுக்கு முன்பு கொழும்பிலுள்ள உறவினர்களைப் பார்வையிடச் சென்றவர் என்றும் அவர் இங்கு வந்தமை தெரியாது எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இதுதான் இனி அங்குள்ள நிலை

இது மேலும் தொடரவே செய்யும்

நாங்கள் என்ன சொன்னாலும்

மாற்றுக் கருத்து எழுதும் மாணிக்கங்கள்

இருக்கும்வரை அரச படைகளுக்கு

எந்தவித பாதிப்பும் இல்லை கெட்டபெயரும் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவைகள் கறிவேப்பிலைகள் எண்இடல்லோ எங்கட மதிகழண்டங் சொன்னதங்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்திரிகையில வந்தாத்தான் செய்தி. மல்லாவியில ரெண்டுபேர் செய்தி பத்திரிகையில வரேல்ல, யாழ் ரயில்வே ரேசனில காணாமல்போன செய்தியும் வரேல்ல, இதுவும் வருமோ? :rolleyes:

இவைகள் கறிவேப்பிலைகள் எண்இடல்லோ எங்கட மதிகழண்டங் சொன்னதங்

முள்ளிவாய்க்கால்மட்டும் கறிவேப்பிலயாக இருந்ததுகள் வவுனியாவில துரோகியானதுகள் பாவப்பட்ட யென்மங்கள். :(

பத்திரிகையில வந்தாத்தான் செய்தி. மல்லாவியில ரெண்டுபேர் செய்தி பத்திரிகையில வரேல்ல, யாழ் ரயில்வே ரேசனில காணாமல்போன செய்தியும் வரேல்ல, இதுவும் வருமோ?

சர்வ அதிகாரங்களும் ஜனாதிபதியிடம் இருக்கிறது

அவர் நினைத்தால் இச்செய்தி பத்திரிகைகளில்

வரவிடாமல் தடுக்கவும் முடியும்

உமது கணணிக்கே அனுப்பிவிடவும் செய்வார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வ அதிகாரங்களும் ஜனாதிபதியிடம் இருக்கிறது

அவர் நினைத்தால் இச்செய்தி பத்திரிகைகளில்

வரவிடாமல் தடுக்கவும் முடியும்

உமது கணணிக்கே அனுப்பிவிடவும் செய்வார்

அப்பிடியெண்டா நம்ம பத்திரிகையளும் துரோகியே? :rolleyes::(

Edited by Mathivathanang

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.