Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் புதிய 25 கோடிரூபாய் பிளான்...

Featured Replies

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்பதற்கு தற்போதைய அமெரிக்கப் பிரஜையான

இலங்கை இராணுவத்தின் முன்னாள் கப்டன் உபுல் இலங்ககேயை அரசாங்க செலவில் அழைத்துவந்திருப்பதாகவும் தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அவருக்கு 25 கோடி ரூபாவை வழங்க உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

இராணுவத்திலிருந்து தப்பியோடி நீண்ட காலமாக அமெரிக்காவில் வாழும் இலங்ககே நாட்டின் சட்டப்படி கைது செய்யப்பட வேண்டியவர். ஆனால் அரசு அவருக்கு உயர்பாதுகாப்பு வழங்கி இரகசியமான இடத்தில் தங்க வைத்திருப்பதாகவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.ராஜகிரியவிலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மங்கள சமரவீர விசேட செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி இத்தகவலை வெளியிட்டார்.

ராஜபக்ஷ குடும்பத்தின் மீதும், அரசு மீதும் ஊழல் மோசடிக்குற்றச்சாட்டுக்கள் மேலோங்கிக் காணப்படும் நிலையில் அவற்றுக்குப் பதிலளிக்க முடியாமல் தடுமாறும் அவர்கள் ஜெனரல் பொன்சேகா மீது போலிக்குற்றச்சாட்டுக்களை சுமத்த முற்பட்டுள்ளனர். இந்த உபுல் இலங்ககே யார் எப்படிப்பட்டவர்

என்ற இரகசியங்கள் அடுத்த ஓரிரு தினங்களில் பகிரங்கப்படுத்தப்படும். என ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த மங்கள சமரவீர இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;அரசாங்கத்தினதும், ராஜபக்ஷ குடும்பத்தினதும் ஊழல், மோசடிகள் தொடர்பான சகல விடயங்களையும் நாம் சேகரித்துள்ளோம். இவை தொடர்பான தகவல்களை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் எண்ணம் ஜெனரல் பொன்சேகாவுக்கோ, எமக்கோ இருக்கவில்லை. ஆனால், ஊழல் மோசடிகளை ஒழிப்பதே ஜெனரலின் பிரதான இலட்சியமாக இருப்பதை அவர் நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார். இதனால் கலக்கமும், ஆத்திரமும் அடைந்துள்ள அரசும், ராஜபக்ஷ குடும்பமும் இல்லாத குற்றச்சாட்டுக்களை போலி ஆவணங்களைத் தயாரித்து ஜெனரல் மீது சுமத்த முற்பட்டுள்னர் இந்த நிலையில் ஆதார பூர்வமான விடயங்களை நாட்டு மக்கள். முன்வைக்க தீர்மானித்துள்ளோம்.

நாட்டையே கொள்ளையடித்த ஒரு கூட்டத்தை மக்களுக்கு காட்டவிருக்கின்றோம். மிகக் குறுகிய காலத்தில் இடம் பெற்ற மிகப்பாரிய ஊழல் மோசடி 210 பில்லியன் ரூபாவை கொள்ளையடித்ததுதான். சமுர்த்தி நிதி, பாதுகாப்பு அமைச்சு போன்றவற்றில் இடம்பெற்ற நிதி ஊழல் பற்றிய அத்தாட்சிகளை விரைவில் ஊடகங்களில் வெளியிடவுள்ளோம். நாம் வெளியிடப்போவது போலி ஆவணங்கள் அல்ல அரசு வெளியிட்ட அறிக்கைகள், கணக்கு விபரங்களில் எந்தளவு முரண்பாடு காணப்படுகின்றன என்பதை மக்கள் கண்டுகொள்வதற்கு சமர்ப்பிப்போம். அரசுகொள்வனவு செய்த பெரிமளவிலான பொருட்கள் சந்தை விலையை விடவும் இரண்டு மூன்று மடங்கு கூடுதலானவையாகவே கணக்குகளில் காட்டப்பட்டுள்ளன எனவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.

http://thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=161:-------25------&catid=34:ceylonnews&Itemid=71

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.