Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வங்கி விபரங்களைத் திருடி இணையம் ஊடாக விற்பனை வெளிச்சத்துக்கு வந்திருக்கும் சுப்பிரமணியம் வழக்கு

Featured Replies

திருடப்பட்ட நிதி தொடர்பான விபரங்கள் இணையம் ஊடாக வாங்கி விற்கப்படுவது எவ்வாறு என்பதை பிரிட்டிஷ் நீதிமன்ற வழக்கொன்று வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

லண்டனில் வெம்பிளி மாவட்டத்திலுள்ள இன்ரர்நெற் கபே ஒன்றிலிருந்து குற்றத்திற்கிடமான இணையத்தளமொன்றை உருவாக்கிய குற்றச்சாட்டில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். இவர் மீதான வழக்கே திருடப்பட்ட நிதி விபரங்கள் இணையம் ஊடாக வாங்கி விற்பது எவ்வாறு என்பதை அம்பலமாக்கியுள்ளது.

ரேணுகாந்த் சுப்பிரமணியம் (33 வயது) என்பவர் "ஜில்சி (ஒடிடூண்டி) என்ற புனைபெயரை இணையத்தில் பயன்படுத்தியுள்ளார். "டார்க் மார்க்கெட் தளத்தின் நிர்வாகியாக இருந்த அவர் மீது லண்டன் நீதிமன்றத்தில் மோசடி நிதிக் குற்றச்சாட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை சுமத்தப்பட்டுள்ளதாகக் கொன்சியஸ் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்தது.2005 இன் பிற்பகுதியில் சுப்பிரமணியத்தாலும் ஏனையவர்களாலும் "டார்க் மார்க்கெட் உருவாக்கப்பட்டது. தனியார் இணையத்தளச் சேவையாக இது உருவாக்கப்பட்டிருந்தது. எபே போன்ற இணையத்தளங்களில் சட்டரீதியான பொருட்கள் ஏலம் மூலம் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. இதே வழி முறையில் டார்க் மார்க்கெட்டின் நம்பிக்கையான உறுப்பினர்கள் கடனட்டை மற்றும் வங்கித் தகவல்களை விற்பனை செய்ய முடியும். இந்த அமைப்பின் 2000 குற்றவாளி உறுப்பினர்களால் "விபரங்கள்விற்பனை செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க சமஷ்டி விசாரணைப்பிரிவு மற்றும் பிரிட்டனின் பாரதூரமான ஏற்பாடு செய்யப்பட்ட குற்றவியல் முகவர் அமைப்பு (குணிஞிச்) ஆகியவற்றைச்

சேர்ந்த விசாரணையாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். விபரங்களை விற்பனை செய்திருப்பதானது வங்கிகளுக்கும் தனியாட்களுக்கும் பல மில்லியன் பவுண்கள் பெறுமதியான இழப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க சமஷ்டி விசாரணைப் பிரிவும் அமெரிக்க இரகசிய சேவை முகவர்களும் ஊடுருவுவதற்கு முன்னர் "டார்க் மார்க்கெட் ஆனது இந்த மாதிரியான தன்மை வாய்ந்த பாரியதொரு ஆங்கிலமொழி அமைப்பில் இருந்தது என்று பிரிட்டனின் சோள அமைப்பைச் சேர்ந்த சிரேஷ்ட துப்புத்துலக்கும் அதிகாரியொருவர் கூறியுள்ளார். 2008 இன் இறுதிப் பகுதியில் டார்க் மார்க்கெட் மூடப்பட்டது.

"டார்க் மார்க்கெட்%27 தொடர்பாக உலகளாவியரீதியில் 60 பேர் கைதுசெய்யப்பட்டனர். பிரிட்டன், அமெரிக்கா,கனடா,ஜேர்மனி,பிரான்ஸ்,துருக்கி,ரஷ்யாவைச் சேர்ந்த "டார்க் மார்க்கெட்அங்கத்தவர்களே கைது செய்யப்பட்டிருந்தனர்.2005 இல் சமஷ்டி விசாரணைப் பிரிவால் மூடப்பட்ட குற்ற நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்த "சடோ கிரூ%27 வுக்குப் பதிலாக இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டிருந்தது.

சுப்பிரமணியம் 1993 இல் இலங்கையிலிருந்து பிரிட்டனுக்குச் சென்றுள்ளார். இவருக்கு நிலையான விலாசம் இல்லை எனவும் அமைதியான மனிதர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.அவருடைய "உண்மையான உலக வேலைகளில் "பிசாகட்டில் பணியாற்றுவதும் விநியோக வேலைகளும் உள்ளடங்கியிருந்ததாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.ஆனால், அவருக்கு 3 வீடுகள் சொந்தமாக இருந்தன. டார்க் மார்க்கெட்டின் வெற்றியில் இவர் முக்கியமானவர் என்று துப்புத்துலக்குவோர் கூறியுள்ளனர். 1 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான விபரங்களைக் கையாளும் குறிப்பொன்று அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆக உயர்மட்டத்தில் இல்லாவிடிலும் அவர் உயர்மட்டத்தில் உள்ளவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். ஏனென்றால் ஐரோப்பா,அமெரிக்காவை உள்ளடக்கிய 2 ஆயிரம் அங்கத்தவர்கள் கொண்ட உலகளாவிய அமைப்பொன்றை உருவாக்குவதில் சமாளித்து வெற்றி கண்டுள்ளதுடன், மோசடியிலும் ஈடுபட்டுள்ளார் என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். "டார்க் மார்க்கெட்%27 மிகவும் நவீனமான இணையத்தளமாக இருந்ததாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

அதிகளவு நம்பிக்கையான விற்பனையாளர்களைக் கொண்ட தரம் வாய்ந்த முறைமையைக் கொண்டதாக இது இயங்கியுள்ளது. பணப் பரிமாற்றம் தொடர்பாக உறுப்பினர்களிடையே தகராறு ஏற்பட்டால் தீர்த்து வைக்கும் நல்லிணக்கப் பணியிலும் ஈடுபட்டுள்ளது. "கொடுக்கும் குற்றவாளி நண்பன் என்று நேற்று முன்தினம் நீதிபதி இதனை வர்ணித்துள்ளார்.

இணையத்தளமூடாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பாகத் தீர்மானம் எடுப்பது கடினமானதாகும். ஏனெனில் அடையாளம் கண்டுகொள்ள முடியாத தன்மை காணப்படுகிறது. அத்துடன், தவறுகளை நிரூபிப்பதற்கான "நிஜ உலக அத்தாட்சியும் தேவைப்படுகிறது.

சுப்பிரமணியத்தின் செயற்பாட்டிற்கான ஆதாரமாக டார்க் மார்க்கெட்டின் தளத்தை சோகா ஆய்வு செய்தது. வெம்பிளியிலுள்ள காவா பீன் கபேயில் "ஜில்சி பெயரில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

http://thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=170:2010-01-16-03-16-42&catid=46:2009-12-23-02-37-38&Itemid=73

புகைப்படம்....

http://thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=170:2010-01-16-03-16-42&catid=46:2009-12-23-02-37-38&Itemid=73

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.