Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கும் டப்ளின் போர்க்குற்ற விசாரணைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கும் டப்ளின் போர்க்குற்ற விசாரணைகள்

டப்ளினில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையை சிறிலங்கா நிராகரித்துள்ள போதும், இது சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

சிறிலங்கா அரசு அனைத்துலக அளவில் போர்க்குற்றங்கள் தொடர்பாக எதிர்நோக்கும் முதலாவது சிக்கல் இதுவாகும்.

அதேவேளை சிறிலங்கா அரசு போர்க்குற்றங்களை இழைத்திருப்பதாக அனைத்துலக அளவில் நன்கு அறியப்பட்ட நீதியாளர்கள் கூறியிருப்பதால், இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் சிறிலங்கா அரசின் அழுத்தங்கள், மிரட்டல்கள், எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் [Permanent People's Tribunal] சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை கடந்த 14ம், 15ம் திகதிகளில் மேற்கொண்டது.

முதல் நாள் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் சிறிலங்கா இராணுவத்தினர் இறுதிக்கட்டப் போரின் போது பாதுகாப்பு வலயப் பகுதியில் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தொடர்பாக செய்மதிப் படங்களின் உதவியுடன் நிரூபிக்கப்பட்டது.

அத்துடன் இதுவரை காலமும் சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு இழைத்த துரோகச் செயல்களும், இனப்படுகொலைகளும் ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கப்பட்டன.

சிறிலங்காவில் போருக்கு முன்னரும், பின்னரும் இடம் பெற்ற மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளும் ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்டன.

இறுதிக்கட்ட போரின் போது வன்னியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களையும், அதன்போது பொதுமக்களின் உடைமைகள் அழிக்கப்பட்ட முறைகள் குறித்தும், அங்கு உணவையும், மருந்தையும் சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு ஆயுதமாக பயன்படுத்தியது குறித்தும், அந்தப் பகுதிக்குள் இருந்து துன்பங்களை அனுபவித்த மக்கள் சாட்சியமளித்தனர்.

சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த மக்களை அவர்கள் எவ்வாறு துன்புறுத்தினர் என்பது குறித்தும், இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது குறித்தும், அதன்பின் அவர்களுக்கு ஏற்பட்ட கதி தொடர்பாகவும், அங்கு நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்தும் விரிவான முறையில் நீதிபதிகளிடம் சாட்சியங்கள் முன்வைக்கப்படடன.

இரண்டாம் நாள் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையில் சிறிலங்கா அரசு எவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டது, அதற்கு இந்தியாவும் மற்றைய உலக நாடுகளும் எவ்வாறு பங்களித்தன என்பது பற்றி எடுத்துக் கூறப்பட்டதுடன், 2002ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கை, அது முறிவடைவதற்கான காரணங்கள் பற்றியும் நீதிபதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டன.

சமாதான உடன்படிக்கை நடைமுறையில் இருந்த காலப் பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்வதற்கு எடுத்த முடிவு, அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் நீதிமன்றத்தில் சாட்சியங்களுடன் எடுத்துரைக்கப்பட்டன.

போர்நிறுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும், அதற்கு உலகநாடுகள் வழங்கிய பங்களிப்புகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டன.

இறுதிக்கட்டப் போரில் உலகின் வல்லாதிக்க நாடுகள் நடந்து கொண்ட முறைகள், அவர்கள் வகித்த பங்கு பற்றியும் ஆதாரபூர்வமான சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன.

சமாதான உடன்படிக்கைக்கு அயர்லாந்து வழங்கிய நேர்மையான பங்களிப்பையும், சமாதான உடன்படிக்கை முறிவடைவதற்கான சர்வதேச காரணிகள் குறித்தும், அவை போரில் கொண்டிருந்த அக்கறை பற்றியும் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

நிரந்தர மக்கள் நீதிமன்றம் நடத்திய விசாரணைகளின் முடிவில் கடந்த 16ம் திகதி மாலை இடைக்கால அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

நிரந்தர மக்கள் நீதிமன்றம் மேற்கொண்ட விசாரணைகளில் சிறிலங்கா படையினர் போர்க்குற்றங்களை இழைத்திருப்பதாக நீதிபதிகள் தமது இடைக்கால அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

1. சிறிலங்கா அரசு போர்க்குற்றங்களைப் புரிந்திருப்பது உறுதியாகியுள்ளது.

2. சிறிலங்கா அரசு மனிதஉரிமை மீறல்களை மேற்கொண்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

3. சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இனப்படுகொலைகளை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

4. அமைதி முயற்சிகள் முறிவடைந்தமைக்கு சர்வதேச சமூகம், குறிப்பாக, அமெரிக்காவும் பிரித்தானியாவும் பொறுப்பேற்க வேண்டும்.

என நான்கு முதற்கட்டத் தீர்ப்புகளை நிரந்தர மக்கள் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை சிறிலங்காவின் அமைதிக்கான ஐரிஷ் அமைப்பு வரவேற்றுள்ளது. அத்துடன் சிறிலங்கா அரசிடம் ஐந்து கோரிக்கைகளையும் அது முன்வைத்துள்ளது.

* இறுதிக்கட்டப் போரின்போது அரசபடைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த ஐநாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.

* அடையாளம் தெரியாத முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 11,000 பேரையும் சிறிலங்கா அரசு விடுவிக்க வேண்டும்.

* சட்டத்துக்கு முரணான படுகொலைகள், பாலியல் குற்றங்களையும், பொதுமக்களுக்கு எதிராக உணவையும் குடிநீரையும் ஆயதமாகப் பயன்படுத்துவதையும் சிறிலங்கா அரசு நிறுத்த வேண்டும்.

* எல்லாவிதமான அரசியல் அடக்குமுறைகளையும் சிறிலங்கா அரசு நிறுத்த வேண்டும்.

* அனைத்து குடிமக்களினதும் மனிதஉரிமைகளைப் பேணுவதுடன், தமிழ் மக்களின் பங்கேற்புடன் அரசியல்தீர்வு ஒன்றை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

என சிறிலங்காவின் அமைதிக்கான ஐரிஷ் அமைப்பு கோரியுள்ளது.

இதற்கிடையே டப்ளினில் நடைபெற்ற விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கமும் படைத்தரப்பும் தனித்தனியாக நிராகரித்துள்ளன.

டப்ளின் நீதிமன்றத்தில் சிறிலங்காவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று கூறியுள்ளார் சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார.

இந்த விசாரணைகள் நியாயமான அடிப்படையில் முன்னெடுக்கப்படவில்லை என்றும், சிறிலங்காவின் எந்தப் பகுதியிலாவது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் அந்த விசாரணைக்குழுவிடம் இல்லை என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

http://www.puthinappalakai.com/view.php?20100119100342

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.