Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமாதானத்தில் தோல்வியடைந்த இலங்கையின் போர்க் குதிரைகள்

Featured Replies

இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் "கதாநாயகர்கள் வெற்றிபெற்றாலும் யுத்தத்தினால் சின்னாபின்ன மடை ந்திருக்கும் நாட்டில் நீடித்த சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு தேசிய நல்லிணக்கம் மற்றும் ஆற்றுப்படுத்தலுக்கான இதய சுத்தியுடனான நடவடிக்கைகளே தேவைப்படுகின்றது. நாட்டின் எதிர்காலம் இவற்றிலேயே தங்கியுள்ளது என்று இந்திய தேசிய பாதுகாப்புச் சபையின்

முன்னாள் உறுப்பினரும் புதுடில்லியிலுள்ள கொள்கை ஆய்வு நிலையத்தின் கேந்திரோபாயக் கற்கைகளுக்கான பேராசிரியருமான பிரம்மா செல்லானி தெரிவித்துள்ளார்.கார்டியன் பத்திரிகையில் "சமாதானத்தில் தோல்வியடைந்த இலங்கையின் போர்க் குதிரைகள்%27 என்ற தலைப்பில் பிரமா ரெல்லானியின் கட்டுரை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதன் சாராம்சம் வருமாறு:

தமிழ்ப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற இலங்கையின் நீண்டதும் கொடூரமானதுமான உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மற்றும் இராணுவத்தளபதி என்ற ரீதியில் உதவியவர்களும் கொண்டாடப்படும் கதாநாயகர்களுமான இருவரும் இப்போது அரசியல் வாள்களை ஏந்தியுள்ளனர்.

தேர்தலில் எவர் வெற்றிபெற்றாலும் நாட்டை அடிப்படைத் தன்மையிலிருந்தும் வேறுபட்ட பாதையில் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இன ரீதியான மீள் நல்லிணக்கம், அதிகாரப்பகிர்வு ஊடாக சமாதானத்தை உருவாக்கும் பாதையில் வெற்றிபெறுபவர்கள் செல்ல வேண்டியுள்ளது.கிட்டத்தட்ட இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கும் தற்போதைய சனத்தொகையான 2 கோடி 13 இலட்சத்தில் 12 சதவீதமாக இருக்கும் தமிழர்களுக்கும் இடையில் கடும்பகை நீடித்து வருகிறது. இப்போது இரு சிங்கள கதாநாயகர்களுக்கிடையிலான அரசியல் பகைமையினால் நாடு பிளவுபட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்ப் புலிகளை ஒழித்த உண்மையான தலைவர் எவரென நினைவுகூரப்பட வேண்டுமென இவர்கள் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.

சிங்களத் தேசியவாத துருப்புச்சீட்டை வைத்துக்கொண்டு இப்போது இருவரும் விளையாடுகின்றனர். அதேசமயம், சிறுபான்மைத் தமிழ் மக்களையும் வசப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால், இலங்கை எதிர்நோக்கியிருக்கும் பாரதூரமான பொருளாதார,அரசியல் ரீதியான சவால்கள் நிழல் கவிந்ததாகியுள்ளது.

நலிவடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் வெளிநாட்டுக் கடனிலேயே தங்கியிருக்கின்றது.வெளிநாட்டுக் கடன் உதவி தொடர்பாக அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. அதாவது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள்,போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை விசாரணை நடத்தப்பட வேண்டுமென அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

ஏற்கனவே பெரியதாக இருக்கும் இராணுவத்தை மேலும் விஸ்தரிப்பதற்காக அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானமானது சமாதான அனுகூலம் எவ்வாறு நழுவிச் செல்கின்றது என்பதைப் பார்க்கக் கூடியதாகக் காணப்படுகின்றது. இலங்கையின் இராணுவப் பலமானது பிரிட்டன், இஸ்ரேலின் இராணுவத்திலும் பார்க்கப் பெரியதாகும். 1980 களின் பின்னர் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இன்று 2 இலட்சத்துக்கும் அதிகமான துருப்புகள் உள்ளன. "உள்மட்டக் கண்காணிப்பு என்ற பெயரில் வெற்றியின் பின் அந்தப் பலம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிராம மட்ட இராணுவத்தின் ஆதரவுடன் பாரியளவு இராணுவ இயந்திரம் செயற்படுவதால் சிவில் சமூகமே பிரதானமாகப் பாதிக்கப்படுவார்கள்.அவசரகால விதிகள் நடைமுறையில் தொடர்ந்தும் இருக்கையில், தேடுதல், கைது,உடைமைகளை முடக்குதல் போன்ற அதிகளவு அதிகாரங்களும் படையினருக்கு உள்ளன.

யுத்தத்தின் போது பெற்றுக்கொண்ட விசேட அதிகாரங்களைக் கையளிக்குமாறு இப்போது அரசுக்குக் கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களை இல்லாமல் செய்யப் போவதாக பொன்சேகா உறுதியளித்திருக்கிறார். ராஜபக்ஷவும் தனது பங்கிற்கு வடபகுதிக்கான பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதுடன், முகாம்களையும் திறந்து விட்டுள்ளார். இப்போது ஒரு இலட்சம் பேர் வரையிலேயே அகதி முகாம்களில் உள்ளனர்.

நாட்டின் முக்கியமான சவாலைக் கையாளப்போவதாக இரு பிரதான வேட்பாளர்களும் உறுதியளித்துள்ளனர். ஆயினும் மாகாணம் தொடர்பானதும் உள்மட்ட சுயாட்சியை வழங்குவதுமான சமஷ்டி முறைக்கு நாட்டின் ஒற்றையாட்சியைக் கொண்டு செல்வதாக இரு பிரதான வேட்பாளர்களும் உறுதியளிக்கவில்லை.

தனியொரு இன தேசிய அடையாளத்திற்கான நகர்வுகள் சுதந்திரத்திற்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விவகாரங்களே உள்நாட்டு யுத்தத்தைத் தீவிரப்படுத்தியிருந்தது. 1956 இல் மேற்கொள்ளப்பட்ட “சிங்களம் மட்டும் மொழிக் கொள்கையும் 1972 அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சத்தைத் தடுப்பது இல்லாமல் செய்யப்பட்டதும் தனியொரு இன தேசிய அடையாளத்துவத்திற்கான நகர்வைச் சிறப்பாக எடுத்துக்காட்டியிருந்தது.

அரச இயந்திரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையிலும் ஊடக ஆதரவுடனும் பதவியிலிருக்கும் ராஜபக்ஷ தேர்தலில் அனுகூலம் பெற்ற நிலையில் உள்ளார். ஆனால், எதிரணியும் மிதவாத தமிழ்க் கட்சியும் பொன்சேகாவுக்கு ஆதரவாக இருப்பதால் தேர்தல் ஆச்சரியமான பெறுபேறை ஏற்படுத்தக்கூடும்.

எந்தக் கதாநாயகன் வெற்றி பெற்றாலும் யுத்தத்தினால் சின்னாபின்னப்பட்டிருக்கும் இலங்கையில் நீடித்த சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்ப இதய சுத்தியுடனான தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளே நாட்டுக்குத் தேவைப்படுகிறது. நாட்டின் எதிர்காலமும் இதிலேயே தங்கி நிற்கிறது.

மேலதிக செய்திகளுக்கு.....

http://thinamurasam.com/

Edited by தராக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.