Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியில் இப்ப என்ன நடக்குது...?

Featured Replies

கிளிநொச்சி: கிளிநொச்சியின் நெல்வயல்கள் புதர் மண்டி க்கிடக்கின்றன.

மாடுகள், ஆடுகளைக் காணவில்லை. உழவு இயந்திரங்கள், மோட்டார் சைக்கிள்களும் மாயமாகிவிட்டன. கட்டிடங்கள், வீடுகள் இடிந்து கற்குவியல்களே காணப்படுகின்றன.முன்னாள் தமிழ்ப் புலிகளின் பலம் வாய்ந்த கோட்டையாக இருந்த கிளிநொச்சிக்கு புலிகளைப் படையினர் அழித்த 8 மாதங்களுக்குப் பின்னர் திரும்பிச் சென்றுள்ள யுத்த அகதிகளுக்கு அவர்கள் விட்டுச் சென்ற பழைய வாழ்க்கை இல்லாத நிலைமையை கண்டுகொள்ள முடிந்தது.

திரும்பி வந்தது சந்தோசம். ஆனால் அடுத்து என்ன செய்வது என்பதே குழப்பமாகவுள்ளது என்று சுப்பிரமணியம் முத்துராசு (66 வயது) என்பவர் ஏ.பி. செய்திச்சேவைக்குக் கூறியுள்ளார். விவசாயத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. ஆனால் எம்மிடம் எந்த வளமும் இல்லை. வெறுங்கையுடன் நிற்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

கரைச்சி கிராமத்தில் முத்துராசு நெற்செய்கையில் முன்னர் ஈடுபட்டவர். அத்துடன் கால்நடைகளையும் பராமரித்திருந்தவர். இப்போது எப்படிப் பணம் சம்பாதிப்பது என்று தெரியாத விரக்தியான நிலையில் அவர் உள்ளார். அத்துடன் யுத்தத்தால் விதவையான அவரின் மகளையும் மகளின் 5 பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டிய மேலதிகப் பொறுப்பும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

திரும்பிச் செல்வோருக்கு பங்கீட்டு உணவுப் பொருட்களும் பணமும் உதவியாக வழங்கப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.இது வறிய நாடென்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். போகின்றவர்களுக்கு சகலவற்றையும் வழங்க முடியாது என்று இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன கூறினார்.

இராணுவ முகாம்களுடன் படையினரின் அரண் சூழ்ந்த பட்டினமாக கிளிநொச்சி இன்று காட்சியளிக்கிறது. ஒவ்வொரு 50 யார் தூரத்திற்கு ஒன்றாக பெரிய, சிறிய முகாம்கள் உள்ளன. வீதிகளில் படையினர் ரோந்து செல்கின்றனர். புலிகளின் நினைவுத் தூபிகள் அகற்றப்பட்டு இராணுவத்தின் யுத்த நினைவுத் தூபிகள் காணப்படுகின்றன.

எந்தவொரு கட்டிடமும் சேதமில்லாமல் இல்லை. கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்துக்கு முன்னர் இருந்த ஒரு இலட்சத்து 20 ஆயிரம் குடியிருப்பாளர்களில் 8 ஆயிரம் பேர் மட்டுமே திரும்பி வந்துள்ளனர்.

முகாம்களிலிருந்த 70 சதவீதமானோர் வெளியேறிவிட்டதாகவும் வீடுகள் அல்லது உறவினர்கள், நண்பர்களுடன் வசிப்பதற்கு சென்றுவிட்டதாகவும் சிலர் இடைத்தங்கல் முகாமில் இருப்பதாகவும் தமது நிலத்தைத் துப்புரவு படுத்துவதற்காக இருப்பதாகவும் கமால் குணரட்ன கூறினார்.

அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் 250 டொலர் பெறுமதியான உதவிகளைத் திரும்பிச் செல்வோருக்கு வழங்குகிறது. ஆறு மாதங்களுக்கான பங்கீட்டு உணவுப் பொருட்கள்,12 கூரைத்தகடுகள்,கூடாரம் என்பன வழங்கப்படுகின்றன.

ஆனால், தாங்கள் விவசாயத்தையோ,

தொழிலையோ ஆரம்பிப்பதற்கு இந்த உதவி போதாது என்று திரும்பியுள்ள மக்கள் கூறுகின்றனர். வாழ்க்கையை ஆரம்பிக்க இது எமக்குப் போதுமா? என்று புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இராமையா இராஜாமணி என்பவர் கேள்வியெழுப்பினார். உதவியாகக் கொடுக்கப்பட்ட 250 டொலரில் 150 டொலரை (15 ஆயிரம்) பேரைச் சேமித்து வைத்திருப்பதாகவும் ஆனால், தனது 2 ஏக்கர் காணியில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள இதன் இரண்டு மடங்கு பணம் தேவையென்றும் அவர் கூறினார்.

மீள்குடியேற்றத்தை பொறுத்தவரை அரசிடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். இராணுவ முகாம்களுக்காக தனியார் சொத்துகளை அரசு எடுத்துள்ளதுடன் மக்களுக்கு சர்வதேச உதவிக் குழுக்கள் உதவி வழங்க முடியாமல் அரசு தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அதேசமயம் பாதுகாப்பு தொடர்பாக விட்டுக்கொடுப்பை மேற்கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை என்று குணரட்ன தெரிவித்தார்.

மிதமாக உள்ள புலிகளை நாம் தடுக்க வேண்டியுள்ளது அல்லது பயங்கரவாதத்தின் கிருமிகள் கிராமங்களுக்கு திரும்பி வராமல் தடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறிய அவர் மக்களுக்கு உதவ அரசு முயற்சித்து வருவதாக கூறினார்.அரசு தனது உழவு இயந்திரங்களை கொடுத்து வயல்களை உழ முயற்சிப்பதாகவும் நெல் விதைகளை வழங்க திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்தார்."நாம் சகலவற்றையும் இழந்து விட்டோம், ஆனால் எனக்கு எப்படி தொழில் செய்வதென தெரியும். உதவியுடன் நான் முன்னேறுவேன் என்று ராமசாமி கந்தசாமி என்பவர் (50 வயது) தெரிவித்தார்.அவர் முன்னர் சொந்த உணவு விடுதியை வைத்திருந்தவர். அத்துடன் 600 க்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகளும் அவரிடம் முன்னர் இருந்தன. 40 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட சொத்தை அவர் இழந்திருந்தார்.

தற்போதைய கிளிநொச்சியின் படங்கள்........

http://thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=203:2010-01-20-02-46-52&catid=34:ceylonnews&Itemid=71

தற்போதைய கிளிநொச்சியின் படங்கள்........

Edited by Aasaan

வயிறு பத்துது. வேறென்னத்தச் சொல்ல முடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.