Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்றி மறந்தவராக ஜெனரல் பொன்சேகா செயற்பட்டு வருகிறார் : ஜனாதிபதி

Featured Replies

நன்றி மறந்தவராக ஜெனரல் பொன்சேகா செயற்பட்டு வருகிறார் : ஜனாதிபதி

"எனக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவை நானே முன்னேற்றினேன் ஆனால் அவர் தற்பொழுது நன்றி மறந்தவராக செயல்பட்டு வருகின்றார்.

மலையக மக்களின் மறுமலர்ச்சிக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன். மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். அரச ஊழியர்களைப் போன்று தனியார் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ராகலையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சி.வி. ரட்ணாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க உட்பட பலரும் கலந்து கொண்டனர். இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

"இன்று என் வெற்றியை உறுதிபடுத்தியவாறு பெருந்திரளாக தோட்டத் தொழிலாளர்கள் கூடியிருக்கின்றீர்கள். எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. மலையக மக்களின் மறுமலர்ச்சிக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்.

மலையக மக்கள் மறுமலர்ச்சிக்காக தோட்டத் தொழிலாளர்களின் லயன் முறை மாற்றியமைக்கப்பட்டு தனி இளைஞர்கள் யுவதிகளுக்காகவேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும். இதில் அரச நிறுவனங்களிலும் ஏனைய நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு பெற்றும் கொடுக்கப்படும்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மலையக இளைஞர்கள், பொலிஸ் இராணுவத்தில் இணையலாம். அரச ஊழியர்களுக்குப் போல் தனியாருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும்.

நாட்டில் அரிசியை பதுக்கி வைத்திருக்கின்றனர். அவைகள் கண்டு பிடிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படும். எதிரணியில் போட்டியிடும் சரத் பொன்சேகாவை நானே முன்னேற்றினேன் ஆனால் அவர் தற்பொழுது நன்றி மறந்தவராகச் செயல்பட்டு வருகின்றார்.

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தொடர்ந்து அவ்வாறே இல்லாமல் கணனி மற்றும் தொழில் பயிற்சிகளை பெறவேண்டும். தோட்ட மக்களை பெருந்திரளாக ஆறுமுகம் தொண்டமான் திரட்டி வந்திருக்கின்றார்.

இம்மக்களின் நல்வாழ்வுக்காக பல நன்மைகள் செய்யவுள்ளோம். சிறுபான்மை என்றொரு இனம் இங்கு இனி இல்லை. முப்பது வருட யுதத்தம் முடிவுற்று நாடு சமாதானம் நோக்கி செல்கின்றது. உங்கள் ஆதரவை வழங்குங்கள். வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்." இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்

"நாங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியை ஆதரித்தோம். ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். தோல்வி கண்ட அணியில் நாங்கள் இருந்த பொழுதும் எவ்வித பழிவாங்கலுமின்றி எமக்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் சமுகத்திற்கு கிட்ட செய்துள்ளார்"என்று இங்கு உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அவர்கள் எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகவும், புதிய வீடமைப்பு தோட்ட பகுதி பாதைகளை செப்பனிடல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தள்ளார்.

தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்குளை வழங்கி அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்

http://beta.virakesari.lk/article.aspx?id=18237&channel=Important

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.