Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் மக்களை காணவில்லை; இராணுவத்தினரே அதிகமாக உள்ளனர்!- த அசோசியட் பிரஸ் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி நகரம் தற்போது இராணுவ முகாம்களினால் நிரம்பிய நகரமாகவே காட்சி தருகிறது அங்கு மக்களை காணமுடியவில்லை. சில நூறுமீற்றர் தூரங்களுக்கு ஒரு முகாம் என கிளிநொச்சி இராணுவத்தினரால் நிரம்பியுள்ளது. படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளும் அங்கு அதிகம் என த அசோசியட் பிரஸ் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.

அதன் முழு வடிவம் வருமாறு, கிளிநொச்சியில் பெருமளவான நெல்வயல்கள் களைகள் மூடி கிடக்கின்றன. ஆடுகளும் மாடுகளும் காணாமல் போயுள்ளன. உழவு இயந்திரங்களையும் மோட்டார் சைக்கிள்களையும் அங்கு காணமுடியவில்லை. கட்டிடங்களும் வீடுகளும் குண்டுவீச்சுக்களால் நிர்மூலமாகி கற்குவியல்களாக கிடக்கின்றன.

போர் நிறைவுபெற்று 8 மாதங்கள் கடந்த நிலையில் முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் தமது இடங்களுக்குச் சென்றபோது அங்கு அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான எவற்றையும் காணமுடியவில்லை.நாம் மீண்டும் எமது கிராமத்துக்கு வந்தது மகிழ்ச்சி தருகின்றது. ஆனால் அடுத்து நாம் என்னசெய்வது என்பதில் தான் குழப்பம் நிலவுகின்றது என சுப்பிரமணியம் முத்துராசு (66) தெரிவித்துள்ளார்.

நாம் விவசாயத்தை ஆரம்பிக்க வேண்டும் ஆனால் அதற்கான பொருட்கள் இல்லை. நாம் வெறுங்கையுடன் நிற்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்களும் பணமும் வழங்கப்பட்டதாக அரசு கூறுகிறது. ஆனால் அரசினால் வழங்கப்படும் உதவிகள் மக்களுக்கு போதுமானவையல்ல என தெரிவிக்கப்படுகிறது.

எமது நாடு வறுமையானது. எனவே எம்மால் மக்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் ஒரே தடவையில் வழங்க முடியாது என இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.எமது ஊடக நிறுவனத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அங்கு செல்வதற்கான அனுமதிகள் மிகவும் குறைவாகவே வழங்கப்படுவதுண்டு.

இலங்கையில் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.தற்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்வும் அவரை எதிர்த்து முன்னாள் இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர். இருவரையும் தென்னிலங்கை மக்கள் போர் வீரர்களாகவே பார்க்கின்றனர். ஆனால் இருவரும் தற்போது தமிழ் மக்களின் வாக்குகளைக் குறிவைத்துள்ளனர். அதற்காக அவர்கள் போரினால் சிதைவடைந்த சிறுபான்மை தமிழ் இனத்திற்கு பல சலுகைகளை வழங்க முற்பட்டுள்ளனர்.

கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள இலங்கைத் தீவில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். தமிழ் மக்கள் தமக்கு தனித் தமிழீழம் கேட்டு போராடி வந்தனர். விடுதலைப்புலிகள் வசம் பெருமளவான பிரதேசம் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு அவர்களின் அரசு இருந்தது. காவல்துறை, நீதிமன்றம், வங்கி என ஒரு நாட்டுக்குரிய கட்டமைப்பை அவர்கள் கொண்டிருந்தனர். அவர்களின் நிர்வாக தலைநகராக கிளிநொச்சி விளங்கியது.விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் பொருளாதார நிலைமை பலவீனமாகவே இருந்தது.

அதற்கு போரும், அரசின் தடைகளுமே காரணம். எரிபொருளில் இருந்து சீமெந்து வரையிலான எல்லாப் பொருள்களும் தடை செய்யப்பட்டவையாகவே இருந்தன. எனினும் விவசாயமூலம் தமது பொருளாதார வளங்களை கட்டியமைத்த விடுதலைப்புலிகள் தமது பகுதிகளில் சிறிய கடைகள், தொழிற்சாலைகள் என நிறுவியிருந்தனர். அங்கு சவர்க்காரம், கொலோன் போன்ற பொருள்களும் உற்பத்தி செய்யப்பட்டன.

ஆனால் கடந்த வருடம் ஜனவரி மாதம் இராணுவம் அந்தப் பகுதி மீது தாக்குதல் களை ஆரம்பித்த போது எல்லாம் காணாமல் போய்விட்டன. விடுதலைப்புலிகளும் மக்களும் மேலும் ஆழமான பகுதிக்கு தள்ளப்பட்டனர். சிலர் தமது விலையுயர்ந்த பொருள்களை மோட்டார் சைக்கிள்களில் எடுத்துச் சென்றனர். ஆனால் இறுதிக்கட்டத்தில் அவர்கள் எல்லா வற்றையும் கைவிட்டுவிட வேண்டிய நிலையே ஏற்பட்டது. விடுதலைப்புலிகளின் வங்கியில் பணம் வைப்பு செய்தவர்களின் பணமும் காணாமல் போய்விட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களின் படி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறுதிக்கட்ட சமரில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 இலட்சம் தமிழ் மக்கள் அரசினால் பலவந்தமாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். கிளிநொச்சி தற்போது இராணுவ முகாம்களினால் நிரம்பிய நகரமாகவே காட்சி தருகின்றது. சில நூறு மீற்றர் தூரங்களுக்கு ஒரு முகாம் என கிளிநொச்சி இராணுவத்தினரால் நிரம்பியுள்ளது.படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளும் அங்கு அதிகம். விடுதலைப்புலிகளின் நினைவு சின்னங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு படையினருக்கான நினைவு மண்டபங்கள் அங்கே எழுப்பப்பட்டுள்ளன.

சேதமற்ற எந்தக் கட்டடத்தையும் அங்கு காணமுடியாது. வீதிகள் வெறிச்சோடிக்கிடக்கின்றன ஏனெனில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் வாழ்ந்த பிரதேசத்தில் தற்போது 8 ஆயிரம் மக்களே குடியமர்த்தப்பட் டுள்ளனர். முகாம்களில் தங்கியிருந்த மக்களில் 70 விகிதமானவர்கள் மீள்குடியேற்றம் மற்றும் உறவினர்களின் இடங்களுக்கு என சென்று விட்டதாக குணரட்ன தெரிவித்துள்ளார்.

ஏனையவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர்களின் பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டதும் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் குணரட்ன கூறினார்.மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பணத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு வழங்கியுள்ளது. மேலும் 6 மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களும், 12 கூரை தகடுகளும், மறைப்பு விரிப்புகளும் வழங்கப் பட்டுள்ளன.

கரைச்சி பகுதியில் உள்ள கிராமங்களில் படையினர் சிறு மண் குடிசைகளை அமைத்து கொடுத்துள்ளனர். ஆனால் தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அவை போதுமானவையல்ல. எமது பழைய வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இது போதுமா? என இராமையா இராஜாமணி கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சிக்கு தெற்கே உள்ள புளியங்குளம் கிராமத்தில் உள்ள தனது குடிசையின் மறைப்புக்கு அவர் அரசினால் வழங்கப்பட்ட தகரங்களை பயன்படுத்தியுள்ளார்.

தமிழ்மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பாக அரசிடம் எந்த திட்டமும் இல்லை என தமிழ் நாடாளுமன்ற உறுப் பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அரசு தனியார்களின் காணிகளை படைத்தளங்களை அமைப்பதற்கு பயன் படுத்திவருவதுடன் அனைத்துலக உதவி நிறுவனங்களையும் மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ளவிடாது தடுத்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால் அரசு தனது பாதுகாப்பு நடவடிக் கைகளை குறைக்கப்போவதில்லை என குணரட்ன தெரிவித்துள்ளார். இந்த கிராமங்களில் மீண்டும் விடுதலைப்புலிகள் தலை தூக்குவதற்கு நாம் அனுமதிக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்ட கிராமங்களுக்கு உணவுப் பொருள்களையும், சுகாதார பொருள்களையும் வழங்கியுள்ளதாக யுனிசெப் அமைப்பின் பேச்சாளர் சுளசினி பெரேரா தெரிவித்துள்ளார். எனினும் மக்கள் தமது பழைய வாழ்வை எட்டுவதில் மிகவும் கடினமானதாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.sankamam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.