Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே கல்லடி பட்டாலும் காலை தூக்கிக் கொண்டு ஓடும் நாயைப்போன்றது மகிந்த அரசு

Featured Replies

உடம்பில் எந்த இடத்தில் கல்லடி பட்டாலும் வழமைபோல ஒரு காலை தூக்கிக் கொண்டு ஓடும் நாயைப்போல, தமக்கு தோல்வி என்று தெரிந்தவுடன் எதற்கெடுத்தாலும் இனவாதத்தைத் தூக்கிப்பிடிக்கும் அரசாங்கம், அதன் மூலம் சிங்கள மக்களை உணர்ச்சி வசப்படுத்தி அவர்களது வாக்குகளை தம்வசப்படுத்திக் கொள்ளலாம் என்ற வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து திங்கட்கிழமை இரவு நிந்தவூரிலும் பாலமுனையிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இக்கூட்டங்களில் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்ட பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டங்களில் ரவூப் ஹக்கீம் மேலும் பேசுகையில் கூறியதாவதுதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் மத்திய முகாம் கிராமத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதற் தடவையாக கலந்து கொண்டபோது, அக்கூட்டத்துக்கு வருகை தந்திருந்த பெருந்திரளான சிங்கள மக்கள் ஆர்.சம்பந்தன் ஐயாவை சிங்களத்தில் பேசுமாறு வேண்டிக் கொண்டிருந்தனர்.

கூட்டம் ஆரம்பித்தவுடன் பெய்த மழைக்காக ஆங்காங்கேயிருந்த கட்டிடப் பகுதிகளில் மக்கள் ஒதுங்கியிருந்த போதிலும் ஆர்.சம்பந்தன் பேச சிங்களத்தில் ஆரம்பித்ததும் அந்தப் பெருமளவிலான சிங்கள மக்கள் ஆரவாரத்துடன் மழையில் நனைந்த படி கூட்ட மேடைக்கு முன்வந்து அவரது பேச்சைக் கேட்டனர்.

சிங்களத்தில் அழுத்தம் திருத்தமாகவும் தெளிவாகவும் ஜனாதிபதியுடனும் ஜெனரல் சரத் பொன்சேகாவுடனும் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி விளக்கங்களை சொன்ன சம்பந்தன் எந்த உடன்படிக்கையிலும் கைசாத்திடாமல் நம்பிக்கையின் அடிப்படையில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாகவும் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அவரை நம்பிய பிறகு தாங்களும் நம்பிக்கை வைக்கும் நிலைக்கு வந்திருப்பதாகவும், அரசாங்கம் தங்களுக்கே எதிராக மிகப் பெரிய அண்டப்புளுகை அவிழ்த்து விட்டிருப்பதாகவும் சொன்னார். அப்போது அதை அந்த மக்கள் பெரும் ஆரவாரத்தோடு கைதட்டியும் நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நான் இரண்டு காரணங்களினால் இந்த அரசாங்கம் தோற்கப் போவதை அறிந்து கொண்டேன். அரசாங்கம் இனவாதத்தை அவிழ்த்துக்கக்கத் தொடங்கியவுடனேயே அரசாங்கமே தான் தோற்க்கப் போகிறது என்பதை உணர்ந்து இனவாதத்தை கக்குவதாக உணர்ந்தேன் என்பது முதலாவது காரணம். இரண்டாவது காரணம் அரசாங்கம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது. வன்முறையை கட்டவிழ்த்து விட்டவுடன் அரசாங்கம் தனக்கு எற்படப் போகும் தோல்விக்கு முகம் கொடுக்க முடியாமல் தான் இதனைச் செய்வதாக தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது. எந்தக் காரணம் கொண்டும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ வெற்றிகளுக்குப் பிறகு அவருக்கிருக்கும் மக்கள் அபிமானத்தின் காரணமாக அவரைச் சிங்கள மக்கள் மத்தியில் 35 சதவீத ஆதரவு கொண்டவராக இறக்குவதென்பது சாமான்யமான விடயம் அல்ல. ஏற்கனவே, ஜெனரல் சரத் பொன்சேகா 50 சதவீதத்தைத் தாண்டிவிட்டார் என்றுதான் நம்பகத் தன்மையுள்ள அனைத்து அபிப்பிராயங்களும் எமக்குக் காட்டுகின்றன.

தற்போதைய ஜனாதிபதியை ஆதரிக்கக் கூடாதென்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்குக் காரணங்கள் கூற வேண்டியதில்லை என்ற அணுகுமுறையோடும் குறிப்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எடுத்திருக்கும் முடிவின் பின்னணியில் தாங்களும் இந்த அடக்குமுறை ஆட்சியையும் குடும்ப ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டியும் வேறு மாற்றுவழிகள்,உபாயங்களையே கையாள்வது எந்தவிதத்திலும் சாணக்கியமானதாக இருக்கமாட்டாது என்ற நிலைப்பாட்டிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்திருக்கிறது.

நாம் எடுத்த தீர்மானத்திற்குப் பின்னால் இன்று சாதி சாதியாக நாடு முழுவதும் உள்ள மக்கள் எமது அணியின் பின்னால் அலையாகத் திரண்டு கொண்டிருக்கிறார்கள்.இன்னும் 2 வருடங்கள் பாக்கியிருக்கத்தக்கதாக அவசரப்பட்டு ஜனாதிபதித் தேர்தலை வரவழைத்ததன் மூலம் இந்த அரசு தனக்குத்தானே தூக்குப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தங்களுடைய அவசரத்தின் காரணமாக இன்னும் இன்னும் சிக்கலுக்குள்ளே மாட்டிக் கொள்கிறது.

யுத்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர் அமெரிக்காவுக்குள் போக முடியாது என்ற பிரச்சினை இருக்கிறது. ஒரு அமெரிக்கப் பிரஜை இப்படியான ஒரு குற்றத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் பிரச்சினையே.எனவே, ஜனாதிபதியின் தம்பிமார்கள் அமெரிக்கப் பிரஜைகளாக இருக்கின்ற காரணத்தால் தங்களுடைய எதிர்காலத்தில் அமெரிக்காவுக்குள் போகின்ற விடயம் தடைப்படும் என்ற பீதியில்தான் இன்று இந்த அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுத்ததாகவும் படைவீரர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டதாகவும் பல கதைகளைப் பேச ஆரம்பித்திருக்கிறது.

இராஜதந்திர ரீதியாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலிக்காத நிலையில், மிக விரைவில் இந்த விடயங்களுக்குப் பதில் கூற வேண்டிய ஒரு நிலைமைக்கு இந்த அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், எதற்கெடுத்தாலும் தேசப்பற்று தேசப்பற்று என்று தூக்கிப்பிடித்து நிற்கிறது. தேசப்பற்று என்பது அயோக்கியனின் கடைசி அடைக்கலம் என்று ஆங்கிலக் கவிஞன் ஒருவன் கூறியிருப்பதற்கிணங்கவே அரசாங்கத்தின் தேசப்பற்று வியாக்கியானம் அமைந்திருக்கிறது.தங்களுடைய அயோக்கியத்தனத்தை மறைப்பதற்காக எதற்கெடுத்தாலும் அரசாங்கம் இப்போது தேசப்பற்று என்ற விடயத்தையே தூக்கிப் பிடிக்கிறது.

அரசாங்கத்தின் பொய்யும் புரட்டும் இனி நீடிக்காது என்பதற்கு சிங்கள மக்களிடம் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் காட்டுகின்றன. நாம் இதுவரை காலமும் அடைந்துவந்த அத்தனை இன்னல்களுக்கும் எமக்கு எதிராக முடுக்கிவிடப்பட்ட அத்தனை அநியாயங்களுக்கும் ஒரு முடிவைக் காணவும் கட்சியைவிட்டுப் போய்க் கொண்டிருக்கின்ற கும்பலை முழுமையாக வீட்டுக்கு அனுப்பவும் வேண்டுமாக இருந்தால் எமது அன்னம் எனும் சின்னத்திற்கு வாக்குகளைத் தவறாமல் வழங்கி எங்கள் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://thinamurasam.com/ http://thinamurasam.com/ http://thinamurasam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.