Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் அனைவரும் தமது தெளிவான தீர்ப்பை அளிக்கவேண்டும்: இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களுடைய வாக்குகளே சனாதிபதி யார் என்பதினை தீர்மாணிக்கப்போகின்றது. வேறு எந்த பேச்சுக்கும் இடமளிக்காது, எங்களுடைய சிந்தனையின் அடிப்படையில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வடக்கு கிழக்கு தமிழ்பேசும்மக்கள் தமது தெளிவான தீர்ப்பை அளிக்கவேண்டும்.

அதன் மூலமாக சனாதிபதி மகிந்தராஜபக்ஷவை வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்கள் முழுமையாக நிச்சயமாக நிராகரித்துள்ளார்கள் என்ற முடிவு வெளியாகவேண்டும். அந்த அடிப்படையில் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு வாக்களிக்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வவுனியாவில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில், வடக்கு கிழக்கு மக்களுக்கு ஒரு நிலையான கௌரவமான அரசியல் தீர்வு ஏற்படும் பட்சத்தில், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் பெருமளவில் முதலீடுகளை செய்ய காத்திருக்கின்றார்கள். பல நாடுகளும் உதவிகளை வழங்க காத்திருக்கின்றார்கள். இன்னுமொரு ஆயுத போராட்டத்தை நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை. வன்முறையை முற்றாக நிராகரிக்கின்றோம்.

ஆயுதபோராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களுடைய தியாகத்தை நாங்கள் மதிக்கின்றோம். கடந்த கால யுத்தம் காரணமாக எமது மக்கள் மோசமாக பாதிப்புக்களை சந்தித்தவர்கள். அவர்கள் தொடர்ந்தும் பாதிப்பு அடையக்கூடாது. எனவே நல்லதொரு அரசியல்தீர்வை பெறுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு பாடுபட்டுவருகின்றது. அதற்கு மக்களுடைய ஒற்றுமை, ஆதரவு தேவையாகும். இதனை தேர்தல் மூலமாக நீங்கள் நிருபிக்கலாம்.

வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்களுடைய ஒற்றுமை அவசியம். சர்வதேச சமூகமும் இதனையே வேண்டிநிற்கின்றது. அதற்கான சூழல்தற்போது உருவாகிவருகின்றது. வருகின்ற பொது தேர்தலில் தமிழ் முஸ்லீம் கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளது.

வன்னி எம்பி சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர். வன்னியின் பல இடங்களில் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுவருகின்றது, இதற்குரிய கட்டுமான பணிகளில் சீன தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மகிந்தராஜபக்ஷவுடனும் சரத்பொன்சேகாவுடனும் தாம் நடத்திய பேச்சுக்களின் விபரங்களையும் திரு சம்பந்தன் வெளியிட்டார்.

வவுனியா நகர சபையின் உப தலைவர் எம்.எம்.ரதன், நகர சபையின் சிறி முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஜனாப் முனாபர் இணைந்து திரு சம்பந்தனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கே துரைரட்ணசிங்கம், பி அரியநேந்திரன், எம்.எம்.இமாம், ஆகியோரும் உரையாற்றினார்கள்.

[படங்கள் இணைப்பு]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.