Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி மகிந்தவின் 4 வருட ஆட்சியில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர் -நல்லூரில் இரா.சம்பந்தன்

Featured Replies

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ­ கடந்த நான்கு வருடங்களில் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உரிமைகளையும் தரவில்லை. மாறாக அவருடைய காலத்திலேயே தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உ றுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று மாலை நல்லூர் சங்கிலியன் தோப்பில் நடத்திய மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்குக் கிழக்கு மாகாணம் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டதாகவும் அதில் தமக்கு உடன்பாடு இல்லை எனவும் ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதி பதி மகிந்த ராஜபக்ஷ­ தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தமையால் வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அவரிடம் நாம் வேண்டுகோள் விடுத்தோம். வடக்குக் கிழக்கு இணைப்பிற்கு ரணில் விக்கிரமசிங்க ஆதரவு தருவார் எனவும் கூறியிருந்தோம். இருந்தும் வடக்குக் கிழக்கு இணைப்பை செய்ய முடியாதென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மறுத்து விட்டார்.

ஒரு நாடு, ஒரு இனம் என்ற குறுகிய கொள்கைக்குள் சிறுபான்மை இனங்களை ஓரங்கட்டிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று ஒழிக்கப்பட்டனர். பலர் கடத்தப்பட்டு காணாமல் போயினர். நான் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் அம்பாறைக்கு விஜயம் செய்திருந்தேன். அங்கு சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மூதூர் மற்றும் சம்பூர் போன்ற இடங்களில் மக்கள் மீளக்குடியமர முடியாமல் உள்ளனர். இங்கும் வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி மக்களின் மீள்குடிய மர்வு தடுக்கப்படுகிறது. வன்னிப் பெருநிலப்பரப்பு எங்கும் இராணுவ மயமாக காட்சி தருகின்றது.

வன்னி மக்களின் மீள்குடியமர்வு தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ­வுடன் நாம் பேச்சு நடத்தினோம். இருந்தும் அது தொடர் பில் எந்த நடவடிக்கையும் இதுவரை மேற் கொள்ளப்படவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் நிகழ்ச்சி நிரல் நிறைவேற்றுப்படும் வரை இனப்பிரச்சி னைக்கான எந்த தீர்வையும் அவர் முன்வைக் கப்போவதில்லை.

உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு என அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தா கூறுகிறார். ஆனால் அதற்கு மாறாக ஜனாதிபதி மகிந்த பேசுகிறார்.வெளிநாட்டில் இருக்கும் இடம்பெயர் மக்களில் ஒரு பகுதியினர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவை ஆதரிக்க வேண்டும் என கூறுகின்றனர். அவர்கள் இங்குள்ள கள நிலைமை தெரியாமல் இந்த முடிபை கூறுகின்றனர்.

கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவை ஆதரிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. எனவே தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து அவரை ஜனாதிபதியாக்க வேண்டும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்கு களே ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக் கப் போகின்றது. ஆட்சி மாற்றத்தின் மூலமே எங்களு டைய பிரச்சினைக்கான தீர்வு பற்றி நாம் சிந்திக்க முடியும். இவ்வாறு இரா. சம்பந்தன் தனது உரையில் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவை ஆதரித்து நல்லூரில் நேற்று நடந்த இத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், துரைரட்ணசிங்கம், சொலமன் சு.சிறில், ஜனாப் இமாம், பத்மினி சிதம்பரநாதன் ஆகி யோரும் அங்கு உரையாற்றினர்.

ஜனாதிபதித் தேர்தலில் இறுதிநாள் தேர்தல் பிரசாரக் கூட்டமான நேற்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்

படங்கள்.........

http://thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=228:--4-------&catid=34:ceylonnews&Itemid=71

உங்களை அவமதித்தால் தமிழன் ஆத்திரமடைவான்.ஏனெனில்,நீங்கள் எங்கள் தேசிய தலைமையினால் அரசியல் செய்ய பணிக்கப்பட்டவர்கள்.நாதி அற்ற தமிழனுக்கு இப்போது கூட்டமைப்பு ஒரு விடிவெள்ளி.

இம்முறை பொன்சேகாவிற்கு புள்ளடி இடுவோமே.

பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

குறிப்பு:

எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில்,சாதாரண சிங்களவன் பேச்சிற்கு வக்கிரத்தை காட்ட குறிப்பிடும் இரண்டு ஊர்கள்.

1-மாத்தறை(மகிந்தவின் ஊர்)

2-அம்பலான்கொட(சரத்தின் ஊர்)

எனக்கு ஊர்,பிரதேச வாதம் பிடிக்காத ஒன்று.இருந்தும்,ஒரு சாதாரண சிங்கள நண்பன் இயல்பான கதையோட்டத்தில் கூறியதால்,இங்கு குறிப்பிட்டேன்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ­ கடந்த நான்கு வருடங்களில் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உரிமைகளையும் தரவில்லை. மாறாக அவருடைய காலத்திலேயே தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உ றுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கடந்த நான்கு வருடங்களில் மட்டும் அல்ல எபோதும் தமிழர்களுக்கு தீர்வு தரப்பட்டது இல்லை... அப்படி ஏதும் ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருந்தாலும் அவை சில வாரங்களிலேயே கிழித்து எறியப்பட்டன...

மகிந்த காலத்தில் வடக்கு கிழக்கு பிரிக்க பட்டது என்னவோ உண்மைதான்... ஆனால் அதுக்காக உயர் நீதிமண்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் JVP இப்போது சரத் அணியில் இருப்பவர்கள்... அதோடு வடக்கு கிழக்கை பிரிக்கும் உத்தரவை சட்ட பூர்வமாக வழங்கியவர் சரத் என் சில்வா... அவரும் சரத் அணியில் சம்பந்தனுடனேயே இருக்கிறார்...

வடக்கு கிழக்கு எனும் போது இன்னும் ஒண்றையும் சொல்ல வேண்டும்... சம்பந்தனின் அணியில் இருக்கும் சரத் என் சில்வா வடக்கு கிழக்கை ஒண்றாக்க வேண்டிய அவசியம் இல்லை எண்று தேர்தல் பிரச்சாரங்களின் போதே சொல்லி இருக்கிறார்...

ஆக மொத்தம் இந்தியர்களை போல தமிழர்களும் ஏமாளிகள் கடந்தகால நினைவுகள் அற்றவர்கள் எண்று பொய் சொல்லி ஏமாற்ற வெளிக்கிட்டு உள்ளார்கள்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.