Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவைவிட மோசமானவராக பொன்சேகா இருக்க முடியாது - பிரிட்டனின் த ரைம்ஸ் பத்திரிகை தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு சிங்கள கிராமப்புறங்களில் ஆதரவுகள் உள்ள போதும் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதில் அவர் தோல்வியடைந் துள்ளார். விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பொன்சேகா பெற்றுள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாகும். மகிந்தவைவிட மோசமானவராக பொன்சேகா இருக்க முடியாது என பலர் உறுதிபட தெரிவித்து வருகின்றனர் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரைம்ஸ் நாளேடு தனது நேற்றைய பத்தியில் பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு,

நேற்று முன்தினம் (22) அதிகாலை விடியும் போது கொழும்பில் உள்ள டிரான் அலஸ் (49) இன் இல்லத்தின் முன்பாக சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது.இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான தேர்த லின் அடையாளம் அதுவாகும். வீட்டின் பின்புறம் இருந்த படுக் கை அறையில் இருந்து அவர் வந்து கொண்டிருந்த சமயம் வீட்டின் பின் புறம் குண்டுவெடிப்பில் தீப்பற்றிக் கொண்டது.அவரின் ரெயாட்டா சலூன் காரும் அழிந்து போனது. இந்த சம்பவத்தால் தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அலஸ் எம்மிடம் தெரிவித்தார். அப்போது பொலிஸார் சேதமடைந்த பகுதிகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

தேர்தலுக்கு முன்னர் இதனை போல மேலும் பல வன்முறைச்சம்ப வங்கள் இடம்பெறலாம்.விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட முன்னர் சிங்கள தொழிலதிபர் மீது மேற் கொள் ளப்படும் இவ்வாறான தாக்குதலின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருப்பதாகவே பலர் சந்தேகப்படு வதுண்டு.ஆனால் தற்போது அவர் களின் கை அசைவுகள் வேறு பக்கம் திரும்பியுள்ளன. பொன்சேகாவின் தீவிர ஆதர வாளராக அலஸ் செயற்பட்டுவருகி றார்.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வழிநடத்திய ஜெனரல் பொன் சேகா தற்போது மகிந்தவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுகிறார்.

அலஸின் இல்லத்தின் மீது நடைபெற்ற குண்டுத் தாக்குதலுக்கு அரசே காரணம் என பொன்சேகா நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளார். அரசு அச்சமடைந்துள்ளதையே இது காட்டுவதாகவும்,நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் என்பதை இந்த சம்பவம் நியாயப்படுத்துவதா கவும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதலை மகிந்த தரப்பு மறுத் துள்ளது. குண்டுத் தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. தேர் தல் வன்முறை நாடு முழுவதும் தீவி ரமாக பரவலாம் என்ற அச்சத்தை இந்த குண்டுத் தாக்குதல் ஏற்படுத் தியுள்ளது.

இதுவரையில் 773தேர்தல் வன் முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ள தாக காவல்துறை தெரிவித்துள் ளது.அவற்றில் 4பேர் கொல்லப்பட் டுள்ளனர்.2005ஆம் ஆண்டு நடை பெற்ற அரச தலைவருக்கான தேர் தலின் போது 125தேர்தல் வன்மு றைச்சம்பவங்கள் இடம் பெற்றிருந் தன. தற்போதைய வன்முறைகள் மிக அதிகம் என சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் நடவ டிக்கைக்கான அமைப்பின் அதிகாரி கீர்த்தி தென்னக்கோன் தெரிவித் துள்ளார்.

1989ஆம் ஆண்டுக்கு பின்னர் நாம் இவ்வாறான தேர்தல் வன்முறை களை சந்திக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தேர்தல் வன்முறைகள் தொடர் பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ முன், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி விவகார கொள்கைகளுக்கான அதி காரி பரோனீஸ் அஸ்ரன் ஆகியோர் தமது கவலையை வெளியிட்டுள்ள னர். தனது கோரிக்கைகள் தொடர்ச்சி யாக மீறப்படுவதால் காவல்துறையி னருக்கும், அரசியல்வாதிகளுக்கும் தான் எச்சரிக்கைகளை விடுத்துள் ளதாக தேர்தல் ஆணையாளர் தயா னந்த திஸநாயக்கா தெரிவித்துள் ளார்.

கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளை அரசு தோற்கடித்தது மகிந் தவின் செல்வாக்கை தென்னிலங் கையில் அதிகரித்ததாகவும், அதனால் தான் தனது வெற்றியை உறுதிப்ப டுத்துவதற்காக மகிந்த விரைவான தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுத் ததாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் போரை வழிநடத்திய ஜெனரல் பொன்சேகாவை அவர் கெளரவிக்க மறந்துவிட்டார். அவரை அதிகாரமற்ற பதவிக்கு மாற்றியது பொன்சேகாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. தனது பதவியை துறந்த ஜென ரல் கடந்த மாதம் தேர்தல் வேட்பா ளராக தன்னை அறிவித்திருந்தார். அவரை எதிர்க்கட்சிகள் எல்லாம் ஆதரிக்கின்றன.மகிந்தாவிற்கு இணையான வேட்பாளர்கள் தம்மி டம் இல்லை என்பதை எதிர்க்கட்சி கள் உணர்ந்துள்ளன.

எனவே தான் மகிந்தாவிற்கு இணையான போர் வெற்றியை பெற்ற பொன்சேகாவை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பை சேர்ந்த பாக்கியசோதி சர வணமுத்து தெரிவித்துள்ளார். பொன்சேகாவுக்கும் சிங்கள மக்களிடம் செல்வாக்கு உண்டு. ஆனால் மகிந்த மற்றும் பொன்சேகா ஆகியோர் போர் குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வரு கின்றன. எனினும் பொன்சோவின் பிரவேசம் சிங்கள மக்களின் வாக்கு களை பிரிவடையச் செய்துள்ளது.

எனவே தான் தமிழ் மக்களின் வாக்குகள் அவர்களின் தலைவிதியை தீர்மானிப்பவையாக மாற்றமடைந் துள்ளன. சரணடைந்த விடுதலைப் புலி களை படுகொலை செய்யுமாறு அரசு உத்தரவிட்டதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.தடுப்பு முகாம்க ளில் அரசினால் தடுத்து வைக்கப் பட்டுள்ள 3இலட்சம் மக்களையும் விடுவிப்பதற்கு அரசுக்கு ஆர்வ மில்லை எனவும் அவர் தெரிவித் துள்ளார். தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தடுத்து வைக்கப்பட் டவர்களை விடுதலை செய்துள்ள மகிந்த, தமிழ் பிரதேசங்களுக்கும் அவசர விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்ய கட்சிபேதங்களை மறந்து அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என மகிந்த இந்த வாரம் நடை பெற்ற பிரசார கூட்டத்தில் அழைப்பு விடுத்துள்ளார். அவருக்கு சிங்கள கிராமப்புறங் களில் ஆதரவுகள் உள்ளபோதும் தமிழ் மக்களின் வாக்குகளை பெறு வதில் மகிந்த தோல்வியடைந்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் நெரு ங்கிய தொடர்புகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆத ரவை பொன்சேகா பெற்றுள்ளார். மகிந்தவை விட மோசமான வராக பொன்சேகா இருக்க முடி யாது என பலர் உறுதிபட தெரிவித்து வருகின்றனர் என த ரைம்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.valampurii.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.