Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி மாற்றத்தை ஆதரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

புதினப்பலகை

சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்தை நாமும் ஆதரிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிக்கையின் முழுவிபரமாவது:

உலகில் பல்வேறு இன, மத, மொழி, கலாசார விழுமியங்களையுடைய மக்களை ஒருங்கே கொண்ட பல நாடுகளில்,

அந்நாடுகளின் சனத்தொகையில் மிககுறைந்த விகிதாசாரத்தைக் கொண்ட இனத்தைச் சேர்ந்தவர்கள், அந்நாடுகளின் அதியுயர் பொறுப்புகளில் உள்ளனர்.

நடைமுறை உதாரணமாக இந்தியா, அமெரிக்காவைக் குறிப்பிடலாம்.

ஆனால் ஜனநாயக, சோஷலிசக் குடியரசு எனப்படும் நாட்டில், மக்கள் நலன் சார்ந்த சுதந்திரமான செயற்பாடுகளை ஒரு சராசரிக் குடிமகன் மட்டுமல்லாது,

மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோர் கூட மேற்கொள்ள முடியாதபடி முட்டுக்கட்டை போட்டு நிற்கின்றது நடைமுறையில் உள்ள சர்வவல்லமை பொருந்திய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை.

இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை சிறுபான்மை மக்களை மட்டுமல்லாது, பெரும்பான்மையினரையும் நடைமுறையில் மிகமோசமாகப் பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றது.

இனிவரும் காலங்களில், பேதம் பார்க்கும் குறுகிய சிந்தனைக்குள் நிற்காது, பரந்துபட்ட நோக்கில் அனைவரும் சிந்தித்து இணைந்து செயற்படவேண்டிய நேரமிது.

அப்படிப்பட்ட காலகட்டத்தில் எமது தமிழ்ப்பிரதிநிதிகள் ஒருமித்த குரலில் ஒண்றிணைந்து செயற்படாதது எமக்கு வேதனையளிக்கின்றது.

ஆனால் இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திலும் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக இருந்து விடக்கூடாது எனும் நோக்கில் செயற்படுகின்றது நடைமுறையில் உள்ள அரசு.

சிறுபான்மைக்கட்சிகளைக் உடைத்து உதிரிகளாக்கி எமது பேரம் பேசும் ஆற்றலை இல்லாதொழிக்கின்றது.

இதுவரை காலமும் கொடுத்துவந்த முக்கியத்தை இப்பொழுது கொடுக்காது சில சிறுபான்மைப் பிரதிநிதிகளை அவமதித்து அவர்களின் அடையாளத்தை இல்லாமல் செய்ய முயல்கிறது.

இவ்வாறாகப் பாதக விளைவுகளைப் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற எல்லையைத் தாண்டி அனைவருக்கும் தந்துள்ளது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள அரசு.

எது எவ்வறிருப்பினும் எமக்குத் தெளிவான விளக்கங்கள் உண்டு.

இரு பிரதான வேட்பாளர்கள் மீதும் எமக்குத் தனிப்பட்ட அபிப்பிராயமோ, நம்பிக்கையோ கிடையாது.

கடந்த காலப் படிப்பினைகளயும் நாம் பறிகொடுத்த உயிர்களின் மேன்மையும் நாம் மறந்துவிடவில்லை.

இருப்பினும் காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் நாம் சேர்ந்து ஓடவேண்டும். விழுந்துவிட்டோம் என்று தேங்கி நின்றால் நாம் சாக்கடையாகி விடுவோம்.

விழுந்த பின்புதான் அருவி பாய்கின்றது என்பதைபோல நாமும் செயற்பட வேண்டும்.

'தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும்' எனும் கூர்ப்புக் கொள்கையின் பிரகாரம், நாம் சூழ்நிலையின் மாற்றத்தை உணர்ந்து தனிப்பட்ட நபர் மீதான நம்பிக்கை என்பதைத் தாண்டி,

நாடாளுமன்றத்தில் தமிழ்ப்பிரதிநிதிகளின் ஒவ்வொரு ஆசனத்திற்கும் தக்க பலத்தையும் கெளரவத்தையும் பெற்றெடுத்துத் தரும் எனப் பல புத்திஜீவிகளால் கருதப்படும்,

ஆட்சி மாற்றத்தை நாமும் ஆதரிக்க வேன்டிய காலத்தின் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றோம்.

சமுதாயத்தின் பொறுப்பு மிக்க பிரஜைகளை உருவாக்கும், சமுதாயத்தை உற்பத்தி செய்யும் ஒரு சமூக நிறுவனமாகவும்,

நாமும் எம்மைச் சேர்ந்த சமூகத்தின் உள்ளக்கிடக்கைகளைப் பிரதிபலிப்பவர்கள் எனும் வகையிலும்,

எமது புத்திக்கும் சிந்தனைக்கும் உட்பட்டே இக்கருத்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

எமக்கு எந்தவிதமான தனிநபர் சார்போ, கட்சி சார்போ கிடையாது.

உலகின் ஜனநாயகத்தின் எல்லைகளிற்கு உட்பட்ட வகையில் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் சுதந்திரமான சூழ்நிலையையே ஏக்கத்துடன் எதிர்பார்க்கின்றோம்.

மக்களால் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் மக்களட்சியான ஜனநாயகத்தின் வரைவிலக்கணத்தையே நாமும் தழுவி நிற்கின்றோம்.

அந்த வகையில் அனைவரும் சுபீட்சத்தையும், ஜனநாயகத்தையும் , பன்மைத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சாந்தி சமாதானத்தையும் நோக்கி காலடி எடுத்து வைப்போம்.

மக்களும் தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமையைத் தவறாது பயன்படுத்தி வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.