Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் திருத்தும் சூழுச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் திருத்தும் சூழுச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள்?

(வெள்ளிக்கிழமை, 29 ஜனவரி 2010 13:59)

இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் திருத்தும் சூழுச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக கொழும்பு ஊடகம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் பசில் ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் லங்கா இன்டர்நெட் நிறுவனத்தின் உதவி பெறப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேக்கா பொது வேட்பாளராக போட்டியிடப் போகிறார் என தகவல் கிடைத்தை அடுத்து இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் லங்கா ... நெட் நிறுவனத்தின் பணிப்பாளருடன் இதுதொடர்பாக சிங்கப்பூரில் கலந்துரையாடப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுளளார்.

இந்தத் திட்டத்திற்கு அமைய தகவல்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் சம்பந்தமான விடயங்களை ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க கையாண்டுள்ளார்.

அத்துடன் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் தம்மிக்க ஹேவாபத்திரவின் ஆலோசனையின்படி அந்த நிறுவனத்தின் கணனி முகாமையாளர் இதற்கான உதவிகளை வழங்கியுள்ளார்.

பலவாரங்களுக்கு முன்னர் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் தறுவாயிலேயே அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமான அலுவலகம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இயங்கியுள்ளது.

ஜனாதிபதி இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய பின்னர் இதுவரை தேசிய தேர்தலுக்காக கணனி தொழில்நுட்ப உதவி வழங்கிவந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் உதவியைப் பெறுவதில்லையெனத் தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக கணனி தொழில்நுட்பப் பணிகளுக்காக பசில் ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேற்கூறிய அலுவலகம் பயன்படுத்தப்பட்டது.

இந்தத் தேர்தல் கொள்ளையில் கணனி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டமை குறித்து பல தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது. இதுதொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக மேலதிகத் தகவல்களை வெளியிட முடியாது எனவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். இதுகுறித்த தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை களனிப் பல்கலைக் கழகம் ஏற்கனவே விடுத்த தேர்தல் ஆய்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 60 வீதத்தால் வெல்வார் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே அமைச்சர்கள் பவித்திரா வன்னியாராட்சி மற்றும் அனுரபிரியதர்ஸண யாப்பா ஆகியோர் இனாதிபதி 18 லட்சம் வாக்குகளால் வெல்வார் எனத் தெரிவித்திருந்ததாக அவர்களுக்கு நெருக்கமானவர்கள் ற்கு தெரிவித்திருந்தனர்.

மூலம்: அழுத்துக

Edited by நிழலி
மூலத்தை சரியாக குறிப்பிடுவதற்காக

அப்படி ஏதாவது நடந்திருந்தால் - அதில் நிச்சயமாக உலகில் மிக கீழ்த்தரமான, நாகரீகமற்ற இந்திய பயங்கரவாதிகளின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமாகியிருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.