Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணம் அல்ல... 'யாப்பா பட்டுவ'!

Featured Replies

ரவிக்குமார் எம்.எல்.ஏ.

யாழ்ப்பாணம் அல்ல... 'யாப்பா பட்டுவ'!

இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. அந்நாட்டின் தலைவிதியை இனவாதம்தான் தீர்மானிக்கிறது என்பது மீண்டும் தேர்தல் முடிவு களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜபக்ஷே மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் ஃபொன்சேகாவைவிட பதினேழு சதவிகிதம் கூடுதலான வாக்குகளை அவர் வாங்கியிருக்கிறார். இது சிங்கள மக்கள் பெருமளவில் ராஜபக்ஷேவைத்தான் ஆதரிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.

ராஜபக்ஷே முறைகேடான வழிகளைக் கையாண்டு தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறப் பட்டாலும், அதை முழுமையாக நாம் ஏற்க முடியவில்லை. ஏனென்றால், அங்கு சிங்களப் பேரினவாதம் கொடிகட்டிப் பறக்கிறது. அதன் வெளிப்பாடாகவே சிங்கள மக்களின் ஆதரவு ராஜபக்ஷேவுக்கு கிடைத்துள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவுக்கு தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மையின மக்களின் ஆதரவு இருந்தபோதிலும் சிங்கள மக்களுடைய ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை. ஈழத்தில் நடந்து முடிந்த

இனப்படுகொலையை தலைமையேற்று நடத்தியவர்தான் ஃபொன்சேகா என்றபோதிலும், அவர் தம்மை நடுநிலை யாளனாக காட்டிக்கொள்ள முயற்சித்ததன் காரணமாக சிங்கள மக்களின் ஆதரவை இழந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். சிங்களவர்கள் மிதவாதத் தலை மையை விரும்பவில்லை. தீவிரமான சிங்கள இனவெறித் தலைமையையே அவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் இவ்வளவு பெரிய வெற்றியை ராஜபக்ஷேவுக்கு அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

சிங்கள இனவாதம் இந்த அளவுக்கு தலைவிரித்தாட தமிழ்ப் போராளிகளும் ஒரு விதத்தில் காரணமாக அமைந்து விட்டார்கள் என்பதை மறுக்க முடியாது. கடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவும், ரணில் விக்ரம சிங்கேவும் போட்டியிட்டனர். அப்போது மிதவாதியான ரணிலுக்குத்தான் தமிழ் மக்கள் வாக்களிப்பதாக இருந்த னர். ஆனால், அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களுக்குக் கூறிய தன் காரணமாக ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக விழ வேண்டிய தமிழர்களின் வாக்குகள் விழாமல் போய்விட்டன. அதனால்தான், ஒற்றை ஆட்சி என்ற முழக்கத்தை வெளிப்படையாகவே முன்வைத்து இனவாத அரசியலை தூக்கிப் பிடித்திருந்த ராஜபக்ஷே வெற்றி பெறும் நிலை உருவானது. தமிழ்ப் போராளிகள் தமக்கு பாதகமான சூழலைத் தாங்களே ஏற்படுத்திக் கொண் டார்கள் என்பது மறுக்க முடியாத துயர நிகழ்வாகும். அப்போது எழுச்சி பெற்ற சிங்கள இனவெறி தொடர்ந்து ஆதிக்க நிலையிலேயே இருந்து வருகிறது.

ராஜபக்ஷேவும், ஃபொன்சேகாவும் களத்தில் நின்றபோது இந்தியா யாரை ஆதரிக்கப் போகிறது, அமெரிக்கா யாரை ஆதரிக்கப் போகிறது? என்றெல்லாம் அரசியல் களத்தில் கேல்விகள் எழுந்தன. ராஜபக்ஷே எப்போதும் இந்தியாவின் அன்புக்குரியவராகவே இருந்து வருகிறார். அவ்வப்போது அவர் சீனாவோடு நெருக்க மாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதெல்லாம் இந்தியாவிடமிருந்து கூடுதலாக அனுகூலங்களைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான். ராஜபக்ஷே வெற்றி பெற்றதும் உடனடியாக இந்தியா அவருக்கு வாழ்த்து தெரிவித்ததில் இருந்தே ராஜபக்ஷேவை இந்திய ஆட்சியாளர்கள் எப்படி நெருக்கமாக உணர்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ராஜபக்ஷே மீது அமெரிக்க அரசு கோபமாக இருக்கிறது என்று ஒரு செய்தி முன்பு பரப்பப்பட்டது. அது ஓரளவு உண்மைதான். போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த ஆலோசனைகள் எதையும் ராஜபக்ஷே அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, இலங்கையில் நடைபெற்ற இன அழித்தொழிப்புக்கு தமது அரசு உடந்தையாக இருந்தது என்ற அவப்பெயரை வாங்கிக்கொள்ள அமெரிக்க ஆட்சியாளர்கள் விரும்பவுமில்லை. இத்தகைய காரணங்கள் இருந்தபோதிலும், தொடர்ந்து ராஜபக்ஷேவை ஆதரிக்க வேண்டிய நிலை அமெரிக் காவுக்கு உள்ளது. இலங்கையில் ராஜபக்ஷே பெற்றுள்ள செல்வாக்கு நிரூபணமாகி இருப்பது முதல் காரணம். இலங்கை தொடர்பான எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்பும் இந்தியா என்ன நினைக்கிறது என்பதை அமெரிக்கா கவனத்தில் கொண்டிருக்கிறது. இது இரண்டாவது காரணம். இந்த காரணங்களால் இப்போது ராஜபக்ஷேவை அமெரிக்கா ஆதரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வாக்குகள் பதிவாகி இருக்கும் விதத்தை ஆய்வு செய்து பார்க்கும் போது, இலங்கையின் அரசியல் சூழல் எப்படி இருக்கிறது என்பதை நாம் யூகிக்க முடிகிறது. சரத் ஃபொன்சேகாவுக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்த ஆறு மாவட்டங்களில் ஐந்து மாவட்டங்கள் தமிழர்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களாகும். யாழ்ப்பாணம், வன்னி, திரிகோணமலை, மட்டக் களப்பு உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியப் பகுதிகளாகக் கருதப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில்தான் ஃபொன்சேகா அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கின்றார். பாரம்பரியத் தமிழர் கள் வாழும் பகுதிகளில் மட்டுமின்றி மலையகத் தமிழர்கள் பெருமளவில் வாழும் பகுதிகளிலும்கூட ஃபொன் சேகாவுக்குத்தான் அதிக வாக்கு கிடைத்திருக்கிறது. இது தமிழர்களின் ஆதரவு ஃபொன்சேகாவுக்கு இருந்தது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. சரத் ஃபொன்சேகா தலைமையில்தான் இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றியது. என்றபோதிலும், தமிழ் மக்கள் ஏன் அவரை ஏற்றுக்கொண்டார்கள் என்பது முக்கியமான கேள்வியாகும். ஃபொன்சேகாவுக்கும், ராஜபக்ஷேவுக்கும் இடையில் கருத்து ரீதியான வேறுபாடுகள் எதுவும் கிடையாது. தான் தலைமை தாங்கி நடத்திய யுத்தத்தின் அரசியல் பலனை தானே அனுபவிக்க வேண்டும் என்று ஃபொன்சேகா விரும்பினார். ஆனால், அதற்கு ராஜபக்ஷே உடன்படவில்லை. அதுவே அவர்களுக்கிடையிலான முரண்பாடாக வெளிப்பட்டது.

இனப்படுகொலையின் ரத்தக்கறை படிந்த இரண்டு நபர்களுக்கு இடையிலான போட்டியாகத்தான் இலங்கை அதிபர் தேர்தல் இருந்தது. இந்தத் தேர்தலில் தமிழர்கள் என்ன முடிவெடுப்பது என்ற இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டார்கள். இந்த இரண்டு பேருக்கும் வாக்களிக்காதீர்கள் என்று சில நபர்கள் அங்கே பிரசாரம் செய்தது உண்மை. அவர்களும் அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாக நின்றார்கள். தமிழர் தரப்பிலிருந்து தமிழ் தேசிய முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இந்த முழக்கத்தை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டார். அதுபோலவே இடதுசாரி கட்சி ஒன்றைச் சேர்ந்த சிங்களவரான விக்ரமபாகு கருணரத்னே என்பவரும் தேர்தலில் போட்டியிட்டார். அவர்கள் இருவருமே ராஜபக்ஷே மற்றும் சரத்ஃபொன்சேகாவுக்கு எதிராகத்தான் பிரசாரம் செய்தார்கள். ஆனால், அவர்களால் தேர்தலில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. தமிழர் பகுதிகளில் சிவாஜிலிங்கத்தை முற்றாக நிராகரித்து விட்டார்கள். அதுபோலவே சிங்கள மக்கள் கருணரத்னேவை கண்டுகொள்ளவே இல்லை. சரத் ஃபொன்சேகாவுக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் தேசிய முன்னணி பிரசாரத்தில் ஈடுபட்டது. அதைத்தான் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறவேண்டும்.

தமிழ் தேசிய முன்னணியின் சார்பில் இரா.சம்பந்தர், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட் டோர் செய்த பிரசாரம் தமிழர்களின் வாக்குகளை ஃபொன்சேகாவின் பக்கம் திருப்பி விடுவதற்கு காரணமாக இருந்தது. சரத் ஃபொன்சேகாவை ராணுவத் தளபதியாகப் பார்த்ததை விடவும் தமிழர்களுக்கு சற்றே ஏற்புடைய ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகவே தமிழ் மக்கள் பார்த்தார்கள். அவர் வெற்றி பெற்றால், ராஜபக்ஷே சகோதரர்கள் மீது போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தமிழர்கள் நம்பினார்கள். அதுமட்டுமின்றி இரண்டு எதிரிகளில் ஒருவரைக்கொண்டு மற்றவரை வீழ்த்தி விட்டு பிறகு அவரைப் பார்த்துக் கொள்ளலாம் என்பது போன்ற ஒரு திட்டமும் தமிழர்களிடையே இருந்தது. ஆனால், இவை எல்லாமே சரத் ஃபொன்சேகாவுக்கு எதிராக சிங்கள இனவெறி எழுச்சி கொள்ளவும் காரணமாகி விட்டது.

சரத் ஃபொன்சேகாவுக்கு பல்வேறு கட்சிகளின் ஆதரவு இருந்தது. தீவிர சிங்கள இனவாத அமைப்பாகக் கருதப்படும் ஜே.வி.பி. முதல், தமிழ் தேசிய முன்னணி வரை பல கட்சிகள் அவரை ஆதரித்தன. ராஜபக்ஷேவின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் சந்திரிகாகூட சரத் ஃபொன்சேகாவை ஆதரித்தார். எனினும் ஃபொன்சேகாவை ஆதரித்த கட்சிகளிடையே பொதுப்படையான அரசியல் திட்டம் எதுவும் இல்லை. ராஜபக்ஷேவை எதிர்ப்பது என்பதில் மட்டுமே அவர்களுக்கு இடையே ஒற்றுமை காணப்பட்டது. தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எத்தகைய தீர்வை முன்வைப்பேன் என்பதை ஃபொன்சேகாவும் தெளிவுபடக் கூறமுடியவில்லை. இது அவரது மிகப்பெரிய பலவீனமாக அமைந்து விட்டது.

இந்தத் தேர்தல் முடிவுகள் வேறு ஒரு செய்தியையும் தெளிவுபடுத்தியிருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் சரத் ஃபொன்சேகாவுக்கு கிடைத்துள்ள அதிகப்படியான வாக்கு அப்பகுதியில் கருணாவின் செல்வாக்கு குறைந்து விட்டது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சரத் ஃபொன்சேகா 69 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அப்பகுதி யில் ஆட்சி நடத்தி வரும் கருணாவின் ஆதரவு ராஜபக்ஷேவுக்குத்தான் இருந்தது என்றபோதிலும், மக்கள் கருணா சொன்னதைக் கேட்கவில்லை. தமிழ் தேசிய கூட்டணியின் யோசனையைத்தான் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இதனால் இனி ராஜபக்ஷேவிடம் கருணா முன்பு போல செல்வாக்கோடு இருக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

போரில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ள ராஜபக்ஷே தமிழர்களுக்கு சம உரிமை அளித்து இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பார் என்று நாம் நம்ப முடியாது. சிங்களப் பேரினவாதத்தை மேலும் எண்ணெய் ஊற்றி உக்கிரமாக எரிய வைப்பதன் மூலமே தன்னை பலமாக வைத்துக்கொள்ள முடியும் என்பது ராஜபக்ஷேவுக்குத் தெரியும். எனவே, அத்தகைய அணுகுமுறையைத்தான் அவர் மேற்கொள்வார். அதன் அடையாளங்கள் இன்று அங்கே வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்து விட்டன. புதினப்பலகை என்ற இணையதளத்தில் புகைப்படங்களோடு வெளியாகியுள்ள கட்டுரை இதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. 'ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரைக்கும் வீதியின் இரண்டு புறமும் இருந்த மரங்கள் எல்லாம் இன்று முற்றாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. அங்கெல்லாம் இருநூறு மீட்டர் தூரத்துக்கு ஒன்றாக காவல் அரண்கள் அமைக்கப் பட்டுள்ளன. அந்த காவல் அரண்களுக்கு அருகில்தான் மீளக்குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்களின் குடியிருப்புகள் உள்ளன. சிறுசிறு இந்துக் கோயில்களுக்கு உள்ளேகூட புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு தமிழ் மக்களின் தனித்துவமான சமய அடையாளம் சிதைக்கப்படுகிறது. வழிகாட்டுப் பலகைகள் எல்லாவற்றிலும் இப்போது ஊர்ப் பெயர்கள் சிங்களத்தில் இரண்டு முறை எழுதப் பட்டுள்ளன. யாழ்ப்பாணம் என்ற ஊரின் பெயர் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு, அதற்கு மேல் யாழ்ப்பாணம் என்று உச்சரிக்கும்படியாக சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது. அதற்குக் கீழே அந்த ஊருக்கு சிங்களவர்கள் தற்போது சூட்டியுள்ள சிங்களப் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு 'யாப்பா பட்டுவ' என்று சிங்களவர்கள் பெயர் சூட்டியுள்ளனர். வணிகத் தலங்கள் யாவும் சிங்களவர்களின் ஆதிக்க மையங்களாக மாறியுள்ளன. சிறுசிறு நடைபாதைக் கடை களைக்கூட அவர்களே நடத்துகிறார்கள். தமிழர்களின் கோட்டையாகக் கருதப்பட்ட கிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இப்போது சிங்கள வியாபாரிகளே நிறைந்திருக்கிறார்கள். கிளிநொச்சி நகரில் மிகப்பெரிய புத்த வழிபாட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் போர் வெற்றியை அறிவிக்கும் விதமான பல நினைவுச் சின்னங்கள் தமிழர் பகுதிகள் எங்கும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகள் யாவும் சிங்களமயப்படுத்தப்பட்டு வருகின்றன...' என அக்கட்டுரை கூறுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது அங்கு தமிழர்கள் சமத்துவத்தோடு நடத்தப்படுவதற்கான எந்தவித உத்தரவாதமும் இனி இல்லை என்பதே வெளிப்படையாகத் தெரிகிறது.

பேரினவாதத் திமிரில் திளைத்துக்கொண்டிருக்கும் ராஜபக்ஷேவிடம் இந்திய அரசு வெளிப்படையாகச் சில விஷயங்களை இப்போதாவது எடுத்துச்சொல்லவேண்டும். அங்கு வாழும் தமிழர்களுக்கு நியாயமான தீர்வை முன்வைக்குமாறு வலியுறுத்தவேண்டும். இந்திய அரசின் இலங்கைக் கொள்கையை தீர்மானித்துவந்த எம்.கே.நாராயணன் போன்றவர்கள் செல்வாக்கிழந்துள்ள நிலையில் தமிழக கட்சிகள் பொறுப்போடு செயல் பட்டால் ஈழத் தமிழர்களுக்கு இப்போதாவது ஒரு நல்ல வழி பிறக்கும்.

Source-vikatan

அட அறிவுக்களஞ்சியங்களே! அத்தனை தமிழரின் பெயர்களையும் மாற்றிவிட்டால் நாட்டின் பிரச்சினை தீர்ந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக்கு 'யாப்பா பட்டுவ' என்று சிங்களவர்கள் பெயர் சூட்டியுள்ளனர். வணிகத் தலங்கள் யாவும் சிங்களவர்களின் ஆதிக்க மையங்களாக மாறியுள்ளன. சிறுசிறு நடைபாதைக் கடை களைக்கூட அவர்களே நடத்துகிறார்கள். தமிழர்களின் கோட்டையாகக் கருதப்பட்ட கிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இப்போது சிங்கள வியாபாரிகளே நிறைந்திருக்கிறார்கள். கிளிநொச்சி நகரில் மிகப்பெரிய புத்த வழிபாட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் போர் வெற்றியை அறிவிக்கும் விதமான பல நினைவுச் சின்னங்கள் தமிழர் பகுதிகள் எங்கும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகள் யாவும் சிங்களமயப்படுத்தப்பட்டு வருகின்றன...' என அக்கட்டுரை கூறுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது அங்கு தமிழர்கள் சமத்துவத்தோடு நடத்தப்படுவதற்கான எந்தவித உத்தரவாதமும் இனி இல்லை என்பதே வெளிப்படையாகத் தெரிகிறது.

ஈழத்தமிழனை செல்லாக்காசாக்க வேண்டும் என்று தானே......

இந்தியா, சிங்களவனுக்கு ஆயுதம் கொடுத்து எமது நியாயமான போராட்டத்தை நசுக்கியவர்கள்.

இப்போ..... இந்தியாவுக்கு திருப்தி தானே. :huh:

-

செய்திகளை ஊற்றில போய் எல்லோ... குடிக்கவேண்டும் ... !!

அதிலும், தமிழ் கொல்லும் விகடன் கூறியதாக நம்பவைப்பது குற்றத்திலும் குற்றமே ... :huh:

Prem_Mankulam_Junction_name_board.jpg

பெருமாங்குளம் சந்தி - புதினப்பலகை

ஒமந்தைக்கு அப்பால்.... இரு பயணங்கள்; ஒரே உணர்வு

செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 00:17 GMT

புதினப்பலகை-யின் பங்காளர்
தேவன் பசுபதி
ஒரு பயணம் போனார். ஒளி ஓவியர்
செல்லையா ஞானசிங்கமும்
ஒரு பயணம் போனார்.

இரு பயணங்கள் - ஒருவர் கணிணியின் எழுதுபொறியால் நோக்கினார்; அடுத்தவர் ஒளிப்படக் கருவியின் வில்லையால் நோக்கினார்.

எழுத்தையும் படங்களையும் ஒருங்கிணைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றது
.

குண்டுச் சட்டியிலே குதிரை விடுவதை விட்டு ட்டு...

copy ... copys ... watch ... !

-

Edited by ஜெகுமார்

  • தொடங்கியவர்

ஒரு படைத்தலைவன் நுண்ணிய பகுப்பாய்வோடு செயல்பட வேண்டும். மந்த புத்தியுடைய படை வெற்றியடைய முடியாது. ஒரு படைத்தலைவனுக்குரிய ஆளுமை, ஆண்மை, அச்சமற்ற தன்மை, நெஞ்சுறுதி இவற்றையெல்லாம் தாண்டி முடிவெடுக்கும் திறனென்பது அடிப்படை பண்பாகும். எந்த நிலையிலும் தோல்வியென்பது படைத்தலைவனுக்கு தயக்கத்தை தரக்கூடாது.

அதேபோன்று வெற்றியென்பது மயக்கத்தையும் தரக்கூடாது. தோல்வியை பகுத்தாய்ந்து அதன் குறைகளை புரிந்துகொள்ளும் திறனும் வெற்றியை உள்வாங்கி அடுத்த நகர்வுக்கு அதை மாற்றியமைக்கும் அறிவும், படைத்தலைவர்களின் உளவியல் தன்மையாகும். வீழ்ந்தோம் என்பதை விட, நாம் வீழ்ந்தே கிடக்கவில்லை மீண்டும் எழுந்தோம் என்கிற உள்மனச் செய்தி படைத் தலைவனுக்கு உள்ளிருந்து இயக்கும் ஆற்றலாயிருக்கும். அப்போதுதான் அவன் தன்னுடைய எதிர் நலனையும், கடந்த நிகழ்வுகளையும் சமன் செய்து தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். அதைப்போன்றே ஒரு படைத்தலைவனின் மனநிலையானது ஏற்றுக் கொள்ளும் தகுதி வாய்ந்ததாக அமைந்திருக்க வேண்டும். ஒரு இழப்பை ஏற்றுக் கொள்ளும்போதுதான் புலம்பலிலிருந்து வெளிவர முடியும். இல்லையெனில் இழந்தோம் இழந்தோமென வருந்திக் கொண்டிருக்கிற மனநிலையால் தமது படையை தோல்வி நிலைக்கு அழைத்துச் செல்வதாய் அமைந்துவிடும்.

கடந்த 30 ஆண்டுகால தமிழீழ போராட்ட வரலற்றை நாம் திரும்பிப் பார்க்கும்போது மேற்கூறிய அனைத்து பண்புகளும், நமது தேசிய தலைவரிடம் குவிந்து கிடப்பதை காணமுடியும். தமிழீழ போராட்டத்திற்கு முதல் களபலியான சங்கர் தொடங்கி தொடர்ந்து 30,000 மாவீரர்களை பலியாக்கிய பின்னும், தமிழீழ கனவிலிருந்து அவர் ஒரு துளியளவு கூட தமது எண்ணங்களை மாற்றிக் கொள்ளவில்லை. அதன் பிறகுதான் ஒரு வல்லாதிக்க நாட்டிடம் இருப்பதைவிட மிகுந்த ஆற்றலும், லட்சியமும் நிறைந்த படையணிகளைக் கட்டியமைத்தார். லெப் சார்லஸ் அந்தோணி சிறப்புப் படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, கடற்புலிகள் மேஜர் சோதியா படையணி, இரண்டாம் லெப் மாலதி படையணி, லெப் கேனல் குட்டிசிறி படையணி, கேப்டன் ஜெயந்தன் படையணி, பொதுப்போராளிகள் தமிழ்தேசிய துணைப்படை லெப் கேனல் விக்ரம் படையணி, கரும்புலிகள் அணி, இப்படி நீண்டு கொண்டே போகிறது அவர் கட்டியமைத்த படையணிகள். இப்படைப் பிரிவில் பங்காற்றிய புலிகள் நமது தேசிய தலைவரின் மனங்களுக்கு ஒத்திருந்தார்.

இதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றிக்கு பக்கபலமாய் இருந்தார். கரும்புலிகளில் உயிர்கொடையாளர்கள் தமக்கான ஒரு நாடுகிடைக்க தமது உயிரை இன்முகத்தோடு அர்ப்பணித்தார்கள். உயிரிழப்பிற்கான தயக்கவுணர்வோ, உயிர் வாழ்வதற்கான விருப்பமோ, அவர்களுக்கு இருந்தது கிடையாது. இட்லரின் அடக்குமுறையில் சிக்கி சிறையிலே சித்ரவதைப்பட்டு தூக்குமேடையேறிய ஜூலியஸ் பூஸிக் சிறையிலிருந்து எழுதிய குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

""அடக்குமுறை இல்லாத விடுதலையுடன் கூடிய ஒரு நாட்டை நாங்கள் காணமாட்டோம் என்பது எமக்குத் தெரியும். ஆனாலும் கூட எங்கள் இன்னுயிரை நாங்கள் தருவதற்கு தயாராய் இருப்பதற்கு காரணம் எங்கள் எதிர்கால சந்ததியர் மகிழ்வோடு வாழ்வார்கள் என்பதற்காகத்தான்.'' ஆக இந்தக் குறியீட்டின்படியே தமது உயிரை பணயமாக தருவதற்கு காரணம் எதிர்காலத்தில் எமது இனத்திற்கான ஒரு நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கை அதைவிட மேலாக அப்படிப்பட்ட ஒரு நாடு தேவையென அந்த உயிர் கொடையாளர்கள் உணர்ந்திருந்தார்கள். இந்த உணர்விற்கு உரமிட்டவர் நமது தேசிய தலைவர். தமது எதிர்காலம் குறித்த தன்னலம் சாராத இனநலனுக்கான அர்ப்பணிப்பு என்பது அவசியத்தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தால் இப்படிப்பட்ட தீரம் நிறைந்த உயிர் கொடையாளர் படையைக் கட்டியமைத்தார்.

தமிழீழ மண்ணெங்கும் மாவீரர் துயிலும் இடத்தை மிக நேர்த்தியாகக் கட்டியமைத்தார். அந்த வீர வித்துக்களுக்கு அவர் செலுத்திய மரியாதை என்பதைவிட அந்த வித்துக்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பை இது வெளிக்காட்டுகிறது. அந்த மாவீரர்களின் கல்லறைக்கருகே மெதுவாக உங்கள் பாதங்களை வையுங்கள். இங்கே மாவீரர்கள் துயில்கிறார்கள் என்ற வார்த்தையின் மூலம் தமிழீழத்தைக் கட்டியமைக்கும் மூலைக்கல்லாய் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள் எமது போராளிகள் என அவர் அறிவித்ததின் ஆழத்தை நாம் கூர்ந்துப் பார்த்தால் அந்த மண்ணையும் மக்களையும் எந்த அளவிற்கு தேசிய தலைவர் நேசித்தாம் என்பதை புரிந்து கொள்ள முடியும். இதில்தான் ஒரு தலைவன் தமது படையணியை நடத்திய நிலை தெளிவாக்கப்படுகிறது. மார்க்சிய ஆசான் தோழர் மா.ஓ.சொல்வதைப் போல மந்தயுத்தியுடைய படை வெற்றி பெறாது என்பதை எமது தலைவர் உணர்ந்திருந்த காரணத்தினால் தான் வெறும் போராளிகளாக மட்டும் புலிகளைப் படைத்தளிக்காமல் அவர்களை அறிவாளிகளாக வடிவமைத்தார். ஆகையால்தான் உலகெங்கும் வாழும் தமிழீழ மக்கள் தமது அறிவாயுதங்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் எதிர்கால திட்டம் குறித்து அவர் மிக கவனமாக சீர்தூக்கிப் பார்த்தார். இப்போது இலங்கையிலே நடைபெற்று முடிந்த தேர்தல் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என பல அரசியல் ஆய்வார்களும், ஊடகவியல் வல்லுனர்களும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். நமது தேசியத் தலைவர் இதை பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்தியம்பினார். அவர் சொல்கிறார், ""எமது பிரச்சனைக்குத் தீர்வு காண ஆளுங்கட்சி தீர்மானிப்பதும், எதிர்கட்சி எதிர்ப்பதும், பின்பு எதிர்கட்சி ஆளுங்கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும், அதே எதிர்ப்புமாக இந்த சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக அதே பணியில் கடந்த 50 வருடங்களாக மேடையேறி வருகிறது.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிப் பீடமேறும் இரு பெறும் சிங்கள அரசியல் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குனர்கள். இந்த இவைதான் நாடகத்தின் கதாநாயகர்கள். காலத்திற்கு காலம் மாறியபோதும், கதையில் கரு மாறவேயில்லை. தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான்.'' சிந்தித்துப்பாருங்கள். இன்று ஊடகங்களில் வரும் செய்திகள் நம்மை எல்லையில்லா வியப்பிற்கே அழைத்துச் செல்கிறது. சரத் பொன்சேகா ஒரு காலத்தில் ராஜபக்சேவின் கைத்தடியாக செயல்பட்டவர். இன்று வரும் செய்திகளில் சரத்பொன்சேகா ராஜபக்சேவை கொலை செய்ய முயற்சித்ததாகவும், குடும்பத்தோடு அழிக்க முற்பட்டதாகவும் புதுப்புது குற்றச்சாட்டுகள் ராஜபக்சேவின் கூடாரத்திலிருந்து வெளிவருகிறது.

சரத்பொன்சேகாவோ, தம்மை கைது செய்வதற்கு ராஜபக்சே திட்டமிடுவதாகவும், 1000 ராணுவ வீரர்களை வைத்து தம்மை முடக்குவதாகவும், தமிழர்களைக் கருவறுத்த அந்த பாரிய சமரில் நடந்த உண்மைகளை சொல்லப் போவதாகவும், தமது ஆதரவாளர்களை மிரட்டி கைது செய்வதாகவும் உலறலோடு கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். கரங்கோர்த்து தமிழர்களை கருவறுத்த இந்த சண்டாளர்கள் இன்று எதிரெதிர் முகாம்களில் நீங்கள் மீண்டும் நமது தேசிய தலைவர் கூறியதை ஒருமுறை வாசித்துப்பாருங்கள். இலங்கையின் கேவலமான அரசியலை எத்துணை தீர்க்கத்தரிசனமாய் எடுத்துக் கூறியிருக்கிறார் என்பது நமக்கு விளங்கும்.

அப்படிப்பட்ட தலைவர் கிளிநொச்சியை இலங்கை ராணுவம் தமது பன்னாட்டுக் கூட்டாளிகளோடு இணைந்து நெருங்குகிறது என்று தெரிந்தவுடன் ஒரே நாளில் கிளிநொச்சி நகரத்தையே துடைத்தெடுத்துச் சென்ற அவருக்கு முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்படுவோமென்பது தெரியாதா? இந்த அப்பாவி மக்களைக் கொன்ற வெற்றியை இயக்கத்திற்கெதிரான வெற்றியாக கொண்டாடிக் கொண்டிருக்கும் ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே போன்றோருக்கு விளக்கிச் சொல்லும் தருணம் இப்போது வந்திருக்கிறது. எமது தலைமையின் தீர்க்கத் தரிசனத்தை சிங்கள இனவெறி கூட்டத்திற்கு புரிய வைக்கும் கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. இது செயலாற்றும் நேரம்.

முன்னைக் காட்டிலும் வேகமாக, விவேகமாக, நமது நகர்வு அமைய வேண்டும் முதற்கட்டமாய் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழீழ தனியரசுதான் என்கிற தமது நிலைப்பாட்டை உறுதி செய்திருக்கிறார்கள். இது வெற்றிக்கான நகர்வின் முதல்கட்டம் நமது தலைவரின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தது எனவும், கிடைக்கவில்லை எனவும் சிதம்பரம் கூட்டம் மாறி மாறிச் சொல்கிறதே, இது அடுத்த வெற்றி. தமிழீழ அரசு அமைவதற்கான அனைத்து அடிப்படைக்கும், தெளிவாகிவிட்டது. இதை நமது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தீர்க்கதரிசனமாய் உணர்ந்திருந்தார்.

Source-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.