Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி தமது இரண்டாவது பதவிக் காலத்தை ஆரம்பிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் அவருக்கு ஆலோசனை கூறிவிட்டது.

தற்போதைய பிரதம நீதியரசர் அசோகா என்.சில்வா தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட ஆயம் இந்த விவகாரத்தை விசாரித்து இத்தகைய ஆலோசனையை வழங்கியிருக்கின்றது.

ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர், தமது முதலாவது பதவிக் காலத்தின் நான்கு ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் ஆறு ஆண்டுகள் முடிவடைவதற்குள் முற்கூட்டியே அடுத்த பதவிக் காலத்துக்கான தேர்தலை நடத்தி, வெற்றியீட்டிய நிகழ்வுகள் கடந்த 31 ஆண்டு காலத்துக்குள் மூன்று தடவைகள் நடந்தேறிவிட்டன.

1978ஆம் ஆண்டின் அரசமைப்புக்குக் கீழ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறைக்கு வந்த பின்னர் இவ்வாறு தமது இரண்டாவது பதவிக் காலத்துக்கான தேர்தலை முற்கூட்டியேநடத்தி, அதில் மூன்று ஜனாதிபதிகள் வெற்றியீட்டியிருக்கின்றார்கள். ஜனா திபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரே அம் மூவருமாவர்.

இப்படி அவர்கள் இரண்டாவது தேர்தல்களில் வென்றபோதும், அவர்களுடைய இரண்டாவது பதவிக்காலம் எப்போது ஆரம்பிப்பது என்பது தொடர்பில் அந்தந்த வேளைகளில் சர்ச்சை ஏற்பட்டமை மறுக்கவோ, மறைக்கவோ கூடியதல்ல.ஆனால் அத்தகைய சமயங் களில் இலங்கையின் நீதித்துறை எப்படி முரண்பட்டுச் செயற்பட் டிருக்கின்றது என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

இப்படித் தமது இரண்டாவது பதவிக் காலத்துக்காகத் தேர்தலை முற்கூட்டியே நடத்தி வெற்றிபெறும் ஜனாதிபதி ஒருவரின் இரண்டாவது பதவிக் காலம் எப்போது ஆரம்பமாகின்றது என்பதை அரசமைப்பின் 3 ஆவது திருத்தம் தெளிவாக வரையறுத்துக் கூறுகின்றது.

அதன்படி, அந்த ஜனாதிபதியின் முதலாவது பதவிக் காலம் எப் போது தொடங்கியதோ, அதற்கு நேரொத்த திகதி (இணிணூணூஞுண்ணீணிணஞீண் tணி tடஞு ஞீச்tஞு), புதிய (இரண்டாவது) தேர்தலின் பின்னர் எப்போது வரு கின்றதோ அதனையே அடுத்த பதவிக் காலத்துக்கான ஆரம்பமாகக் கருத வேண்டும். அப்படித்தான் அந்த அரசமைப்புத் திருத்தம் வெளிப் படையாகத் தெரிவிக்கின்றது; தெளிவுபடுத்துகின்றது.

அதுதான் ஜனாதிபதி ஜெயவர்த்தனா விடயத்தில் கைக்கொள்ளப்பட்டது. அதுவே, இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உயர்நீதிமன்றின் ஆலோசனையாகவும் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடயத்தில் மட்டும் இந்த நடைமுறை மதிக்கப்படவில்லை. அவரது ஓராண்டு ஆட்சிக் காலம் அநீதியான முறையில் பறிக்கப்பட்டிருப்பது போல விடயங்கள் நடந் தேறியிருக்கின்றன. அதுதான் இங்கு கவனிக்கத்தக்கது. அதை சற்று விலாவாரியாகப் பார்ப்போம்.

ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் முதலாவது பதவிக்காலம் 04.02.1978இல் ஆரம்பமானது. அதன்படி 04.02.1984 வரை அவர் முதலாவது பதவிக் காலத்தைத் தொடர்ந்திருக்க முடியும். ஆனால் 1982 ஓகஸ்டில் அரச மைப்பை மாற்றி, மூன்றாவது திருத்தத்தைக் கொண்டு வந்த அவர், 1982 ஒக்டோபரில் அடுத்த தேர்தலை நடத்தி வென்றார். ஆனால் அடுத்த (அதாவது இரண்டாவது) பதவிக் காலத்தை ஆரம்பிப்பதற் குத் தமது முதலாவது பதவிக் காலத்தின் நேரொத்த திகதி வரும்வரை அவர் காத்திருந்தார். அதன் பிரகாரம் 04.02.1983 இல் அவரது இரண்டாவது பதவிக் காலத்தை அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து ஆரம்பித்து வைத்தார் அப்போதைய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன்.

இப்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது பதவிக் காலம் 19.11.2005 இல் தொடங்கியது. அதனை 19.11.2011 வரை அவர் தொடர்ந்திருக்க முடியும். எனினும் முற்கூட் டியே தேர்தலை 26.01.2010 இல் அவர் நடத்தி வெற்றி பெற்றார். அவர் தமது இரண்டாவது பதவிக் காலத்தைத் தமது முதலாவது பத விக்காலம் ஆரம்பித்த தினத்துக்கு நேரொத்த திகதியில் தொடங்கலாம் என உயர் நீதிமன்றம் தற்போது ஆலோசனை கூறிவிட்டது. எனவே முதலாவது பதவிக் காலத்தை ஆரம்பித்த நவம்பர் 19 வரை தற்போதைய பதவிக் காலத்தை அவர் தொடரமுடியும். 19.11.2010இல் அவர் தமது அடுத்த பதவிக் காலத்தை ஆரம்பிப்பார் உயர்நீதிமன்ற ஆலோசனைப்படி.

இதே விடயத்தை ஜனாதிபதி குமாரதுங்க விடயத்தில் பொருத்திப் பார்ப்போம். 1994 நவம்பர் 12 ஆம் திகதி அவரது முதலாவது பதவிக் காலம் ஆரம்பமானது. அதனை அவர் 2000 நவம்பர் 12 ஆம் திகதி வரை தொடர்ந்திருக்க முடியும். ஆனால் 1999 டிசம்பர் 18ஆம் திகதி முற் கூட்டியே நடத்தப்பட்ட அடுத்த தேர்தலில் அவர் வென்றார். ஜனாதிபதி ஜெயவர்த்தனா விடயத்திலும், தற்போது ஜனாதிபதி ராஜபக்ஷ விட யத்திலும் பின்பற்றும் நடைமுறை சந்திரிகா விடயத்தில் கைக்கொள்ளப்படு மானால் அவரது இரண்டாவது பதவிக்காலம் 2000 நவம்பர் 12 ஆம் திகதிதான் ஆரம்பித்திருக்கும். அப்படி ஆரம்பித்திருந்தால் 2006 நவம்பர் 12 வரை அவர் ஆட்சியிலிருந்திருக்க முடியும்.

ஆனால் அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தலைமையிலான உயர்நீதிமன்ற ஆயம் இரண்டாவது தேர்தல் நடத்தி அதில் வென்றவுடனேயே ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் இரண்டாவது பதவிக் காலம் ஆரம்பித்து விட்டதாக அரசமைப்பு வாசகங்களுக்கு அர்த்தம் கற்பித்து அவரது ஒருவருட கால ஆட்சியை முறையற்ற விதத்தில் பறித்துவிட்டது.

இரண்டாவது தேர்தல் முடிந்த கையோடு அதற்கான பதவி ஏற்பை சந்திரிகா மேற்கொண்டதால் அந்த வேளையில் இருந்தே அவரது பத விக்காலம் ஆரம்பித்து விட்டது என்ற வாதத்தை பிரதம நீதியரசராக இருந்த சரத் என்.சில்வா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

இரண்டாவது பதவிக்கான தேர்தல் சமயத்தில் (1999 டிசம்பரில்) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் படுகாயமுற்ற சந்திரிகா, தாம் நாட்டை ஆளக்கூடிய தேகாரோக்கியத்துடன் உள்ளார் என்பதைக் காட்டவே அச்சமயத்தில் திரும்பவும் ஒருதடவை பதவி ஏற்று மக்களுக்குக் காட்டினார் என்றும், எனினும் அதன் பின்னர் 2000 டிசம்பரில் மீண்டும் தமக்கு முன்னால் இரண்டாவது பதவிக் காலத்தை ஏற்பதற்கான சத்தியப்பிரமாணத்தை அவர் செய்துகொண்டார் என் றும் குறிப்பிட்டிருந்த அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, பின்னர் சில வருடங்கள் கழித்து, அரசியல் நிலைமை மாறியதும், சந்திரிகாவின் இரண்டாவது பதவிக்காலம் அவர் இரண்டாவது தேர்தலில் 1999 டிசம்பரில் வென்றபோதே ஆரம்பித்து விட்டது எனத் தீர்ப்பளித்து பெரும் குளறுபடியைச் செய்துள்ளார்.

ஜெயவர்த்தனா விடயத்தில் பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன் செயற்பட்டமை போல, இப்போது மஹிந்த ராஜபக்ஷ விடயத்தில் பிரதம நீதியரசர் அசோக என்.சில்வா தலைமையிலான உயர் நீதிமன்ற ஆயம் செயற்பட்டுள்ளது. ஆனால் சந்திரிகா விடயத்தில் மட்டும் அப் போதைய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தலைமையிலான உயர்நீதி மன்ற ஆயம் குளறுபடி பண்ணிவிட்டது. நீதியின் பெயரால் அரங் கேறும் இத்தகைய பித்தலாட்டங்களுக்கு எங்கு நியாயம் தேடுவது?

நன்றி - உதயன் இணையம்

இலங்கை நீதிச்சேவை அல்ல - ஸ்ரீலங்கா அநீதிச்சேவை என்றுதான் கூறவேண்டும்.

ஸ்ரீலங்கா அநீதிச்சேவை எப்பவும் பௌத்த - சிங்கள இனவாதிகளுக்கு சார்பாகவே தீர்ப்பு வழங்கி வந்ததை கடந்த 50 ஆண்டுகளில் காணலாம். கடந்த 30 ஆண்டுகளாக அது மேலும் மோசமடைந்து வருகிறது. சில அண்மைய உதாரணங்கள்:

(1) சட்ட விரோத உயர் பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களை, அவர்கள் பாரம்பரியமாக இருந்துவந்த, சொந்த முயற்சியால் வாங்கிக்கொண்ட வீடுகளை, காணிகளில் குடியிருக்க, பயிர் செய்ய அனுமதி கேட்டு தாக்கல் செய்த வழக்கு உயர் நீதி (அநீதி) மன்றத்தால் பலவருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

(2) இருநாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் மூலம் செய்யப்பட்ட வட-கிழக்கு இணைப்பை, சிங்கள இனவாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, ஒரு சில மாதங்களுக்குள் பிரித்துவைத்தது சிங்கள நாட்டு உயர் நீதி (அநீதி) மன்றம்.

(3) தமிழர் வகை தொகை இல்லாமல் கைதுசெய்யப்பட்டு, நிமிர்ந்து முகத்தைக் கூட பார்க்காது, ஒரு கேள்வியும் கேட்காது சிறைகளில் அடைக்க உத்தரவிடும் சிங்கள (அ)நீதி மன்றங்கள், சிங்களவன் கைது செய்யப்பட்டால் காரணங்களை கேட்டு போலீசை எச்சரிக்கும்.

(4) .....

....

...

(1000) .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.