Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவுடன் நட்புறவுகளை ஏற்படுத்தி தாருங்கள்: மாட்டினிடம் மகிந்தா மன்றாட்டம்

Featured Replies

அமெரிக்காவுடன் எமது உறவுகளை சீர் செய்ய உதவுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மாட்டின் லூதர் கிங் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் மேலும்

தெரியவருவதாவது:

அமெரிக்காவுடன் எமது உறவுகளை சீர் செய்ய உதவுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மாட்டின் லூதர் கிங் -111 இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் நட்பை பெறுவதற்கு நாம் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அதனை மேற்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என மகிந்த மாட்டினிடம் தெரிவித்துள்ளார்.நாம் அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்களத்துடன் தொடர்பில் உள்ளோம் எனவே அதற்கு தேவையான உதவிகளை செய்ய முயற்சிகளை மேற்கொள்வோம் என மாட்டின் மகிந்தாவிடம் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு அமெரிக்கா உணவையும் ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.எனினும் சிறீலங்காவுக்கான எல்லா உதவிகளையும் அமெரிக்கா வழங்குமான என

கேட்கப்பட்டபோது அதனை நாம் எதிர்பார்க்க முடியாது, எனினும் அதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுஅமைப்புக்கள் மற்றும் அரச திணைக்களங்களின் அதிகாரிகளை மாட்டின் சந்தித்திருந்தார்.

அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளதாவது போர் அடிமட்ட மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பெருமளவான மக்கள் பதிப்படைந்துள்ளனர். நான் வடக்கிற்கு சென்றிருந்தேன், எனது குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கும் சென்றிருந்தனர்.

நான் மல்லாவிக்கும், கிளிநொச்சிக்கும் சென்றிருந்தேன் அங்குள்ள மக்கள் பேசுவதற்கு அஞ்சுகின்றனர். அவர்களிடம் போரின் அச்சம் அகலவில்லை. எனினும் போர் நிறைவுபெற்றது அவர்களுக்கு மகிழ்ச்சியானதே தமது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதனை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது தொடர்பாக அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.thinamurasam.com/

ஐயா. அவனும் நடிக்கிறான் இவனும் நடிக்கிறான். பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாமல் இலங்கையில் நடைபெற்ற சுதந்திரதினம் என்று ஒபாமா வாழ்த்தியிருக்கிறாரே. சிறிலங்கா எதற்கும் வாலையும் தலையையும் காட்டக் கூடியது. சுதந்திரம் பெற்றபோது சேர் பொன் ராமநாதனுக்கு தலைசாய்த்தது போல் சாய்த்தது. புலிகளை வெல்வதற்கு இந்தியாவிற்கு தலைசாய்த்தது போல் சாய்த்தது. அமெரிக்காவை இணைத்துக் கொள்வதெல்லாம் அவர்களுக்குச் சின்ன விடயம்.

தேவையானவர்களின் கால்களில் விழுவார்கள். தேவையற்றபோது காலைவாருவார்கள். சிங்களவர்கள் இராஜதந்திரம் உயர்வானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் வல்ல இறைவனே, உங்களது சிங்களவன் யாரை கண்டாலும் வாலை (வாளை அல்ல) ஆட்டும் இனம் என்பது சரியான கணிப்பு.

ஆனால், ஸ்ரீ லங்கா கடந்த ஏழு மாதங்களாக உலக அரசியலில் தடக்கி கொண்டிருக்கிறது. இப்போது மேற்குலகில் தமிழரின்

அரசியல் பிரச்சாரத்தால் சிங்கள இன அழிப்பு முகம் கிழிந்திருக்கிறது.

மற்றும், ஸ்ரீ லங்கா ஐ. நா. சபையில் தமக்கெதிராக ஏதாவது சாட்சி வந்தாலும் என்று ரசியவையும், சீனாவையும் ஆயுதம் வாங்கி லஞ்சம் கொடுத்து மேற்கை அதிருப்தி படுத்தி இருக்கிறார்.

இவர்களுக்கு அமெரிக்காவிடம் திரும்பி செல்ல சீனா, ரசியாவிடம் வாங்கிய ஐந்து பில்லியன் டாலர் ஆயுதத்தை அமெரிக்காவிடம் வாங்க வேண்டும். ஆனால் அவர்களிடம் ஏது பணம்?

இன்னும் இவர்கள் அமெரிக்காவின் ஐ. எம். எப். இற்கு கொடுத்த வாக்குறுதியின் படி இன்னும் அரசாங்க உத்தியோகங்களை 40 % குறைக்கவில்லை. அதானால், அடுத்த கட்ட கடனுக்கும் வழி இல்லாமல் நன்றாக திணறுகிறார்கள். புலி வெற்றியும் இந்த தேர்தலுடன் சூடு குறைந்துவிட்ட விடயமாகிவிட்டது.

நம்மை அழிக்கிறோம் என்று, சிங்களவன் தனக்கே ஒரு பெரிய ஆப்பை அடித்திருக்கிறான். இப்போது தான் தான் தமிழருக்கு சிங்கள/பார்சி காலுக்கு தடி போடா உவந்த நேரம்.

உலகிற்கு ஸ்ரீ லங்கா = பார்சி கொங்கிரஸ் = ஜெனோசைட் என்ற உண்மையை பரப்புவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.