Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் போர் முடிந்தும் சித்திரவதை ஓயவில்லை ...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் போர் முடிந்தும் சித்திரவதை ஓயவில்லை வாக்களித்தபடி முகாம்களிலிருந்து தமிழர்களின் மீள் குடியமர்த்தமும் நடைபெறவில்லை

தமிழர்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் பிப்.16 இல் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! ஒத்த கருத்துள்ள தமிழர்களே பங்கேற்பீர்!

தமிழர் தலைவர் அறிக்கை

போராளிகளை ஒடுக்குவதுதான் எங்கள் நோக்கம்; ஈழத் தமிழர்களுக்கு வாழ்வளிப்போம் என்று கூறிய இலங்கை அரசு போர் முடிந்த பிறகும்கூட, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான செயல்களில் இறங்காமல், முள்வேலி முகாமுக்குள் பல்லாயிரக் கணக்கான தமிழர்களை சிறைபடுத்தி வைத்திருக்கும் நிலையில், அவர்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கைத் தீவில் அதிபர் தேர்தலும் முடிந்து-விட்டது. கடந்த காலங்-களில் எவ்வளவோ கசப்-பான அனுபவங்கள் இருந்-தாலும், அடுத்தடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வில் எந்த வகையிலாவது ஒரு முன்னேற்றம், வாழ்-வுரிமை ஏற்படவேண்டும் என்று உலகில் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல; மனிதநேயம் உள்ள, மனித உரிமையில் நாட்-டம் உள்ள ஒவ்வொரு-வரும் எதிர்பார்த்து நிற்-கின்றனர்.

வாக்குறுதி மீறப்படுகிறது

ஜனவரி 31 ஆம் தேதிக்-குள் மீள்குடிய-மர்த்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வாக்குறுதி காப்-பாற்றப்படவில்லை என்-பதோடு, அத்தகைய வாக்-குறுதியை அரசு தரப்பில் யாரும் கொடுக்கவில்லை-யென்று அனைத்து நிவா-ரண மற்றும் மீள் குடி-யேற்ற அமைச்சின் செய-லாளர் ஹால்தீன் தெரி-வித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது! இதுகுறித்து மத்திய அர-சின் நிலைப்பாடு என்ன?

அன்று பசில் ராஜபக்சே சொன்னார்

முன்பொருமுறை ராஜ-பக்கேசயின் சகோதரரும், பாதுகாப்புத் துறை ஆலோசகருமான பசில் ராஜபக்சே கூறினார்.

பாலஸ்தீனத்தில் அகதி-களை மறு குடியமர்த்த 70 ஆண்டுகளும், வங்காள-தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அகதி-களை மீள்குடியமர்த்த பத்து ஆண்டுகளும் ஆகி-யுள்ளன என்று கூறினார். அதைத்தான் இந்த நேரத்-தில் நினைத்துப் பார்க்க-வேண்டியிருந்தது.

போராளிகளை ஒழிப்-பது மட்டும்தான் தமது அரசின் நோக்கம் என்று கூறி வந்தது உண்மை-யென்றால், போருக்குப் பிறகு அரசு என்ன செய்-திருக்கவேண்டும்?

அரசின் கடமை என்ன?

போரினால் பாதிக்கப்-பட்ட மக்களுக்கான பாது-காப்பையும், வாழ்வுக்கான வசதிகளையும் செய்து கொடுப்பதுதானே ஒரு அரசின் கடமையாக இருக்க முடியும்?

மாறாக, முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களில் விடுதலைப்புலிகள் இருக்-கிறார்கள் என்று கூறி, 12,500 இளைஞர்களைத் தனிமைப்படுத்தி சித்திர-வதை செய்வது நியாயம்-தானா?

பிரிட்டனின் வெளி-யுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபண்ட் கூறி-யுள்ள கருத்து முக்கிய-மா-னது.

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்டு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 12,500 பேர்களையும் விடுதலைப்-புலிகள் என்று கூறுகிறது இலங்கை அரசு.

இலங்கை இராணுவத்-தின் விசாரணை முறை வெளிப்படையாகவும் இல்லை. உண்மையில் அவர்கள் விடுதலைப்-புலிகள்தானா? என்ற அய்-யத்தை இது ஏற்படுத்து-கிறது. அவர்களைச் சந்-திக்க அய்.நா. அமைப்-புக்கோ அல்லது பன்-னாட்டு செஞ்சிலுவை சங்க அமைப்புக்கோ அனுமதி-யளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

போர் முடிந்தும் சித்திரவதையா?

போர் முடிந்தாலும் தமி-ழர்கள் மீதான சித்திர-வதை-யும், அவர்களின் முள்-வேலி சிறையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தமிழர்களுக்கு அரசி-யல் தீர்வு காணப்பட-வேண்டும் என்று இந்திய அரசு தரப்பில் சொல்லப்-பட்டாலும், அதற்கு உரிய அளவு செவி சாய்ப்பு என்பது அதிபர் ராஜபக்சே தரப்பிலிருந்து வரவில்லை என்பதை இந்திய அரசு எண்ணிப் பார்க்கவேண்-டியது மிகவும் அவசிய-மாகும்.

சிங்களவர் விருப்பமாம்

அங்கே தமிழர்களுக்கு எது நடைபெறுவதாக இருந்தாலும், சிங்கள-வர்-களின் ஆதரவைப் பொறுத்தே அமையும் என்று அதிபர் ராஜபக்சே கூறியிருப்பதைப் பார்த்-தால், தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்-கைக்கு இடமில்லாமல் இருக்கிறது.

போருக்கு முன்பு உலகத் தமிழர்கள் குரல் கொடுத்ததைவிட, போருக்-குப் பிறகு அவ்வாறு கொடுக்கும் குரல் மேலும் வலிமையாக இருக்க-வேண்-டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழின மீனவர்கள் சித்திரவதை தொடர்கிறது

தமிழின மீனவர்கள் சிங்களவர்களாலும், இலங்கைக் கடற்படை-யா-லும் தாக்கப்படும் கொடு-மையும் தொடர்ந்து நாளும் நடந்துகொண்டு-தானிருக்கிறது.

மத்திய அரசு வெறும் கவலை தெரிவித்துப் பயன் இல்லை. உருப்படியான வகையில் நிரந்தரமான பாதுகாப்புக்கு உத்தரவாதம் செய்யவேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இல்லையென்றால், தமிழக மீனவர்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.

இலங்கையில் இப்-பொழுது நிலவும் அமைதி மயான அமைதி போன்றது-தான்; மேலும் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவார்-களேயானால், அதன் விளைவு என்ன?

அன்று பிரதமர் இந்திரா காந்தி என்ன கூறினார்?

பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் 1984 செப்டம்-பரில் வெளிநாட்டுச் சுற்றுப்-பயணத்தில் இருந்தபோது ஒரு கருத்தினைக் கூறி-னார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அங்-குள்ள தமிழர்களில் மித-வாதிகள்கூட தீவிரவாதி-கள் ஆகும் விபரீதம் ஏற்படும் என்று கூறினார்.

மனித உரிமைகளின் வர-லாறு உணர்ந்தவர்-களுக்கு இந்த உண்மை தெரியாமல் போகாது.

பிப்ரவரி 16 இல் ஆர்ப்பாட்டம்!

இலங்கை அரசு சிந் திக்கவேண்டும் -இந்திய அரசும் ஈழத் தமிழர் களின் வாழ்வுரிமைக்காக உள்ளார்ந்த முறையில் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று வலி யுறுத்துகிறோம்.

இதன் அடிப்படையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்-தும் வகையிலும், ஈழத் தமி-ழர்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் தேவை என்று வலியுறுத்தும் வகை-யிலும் வரும் 16 ஆம் தேதி சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்-பில் ஆர்ப்பாட்டம் நடை-பெறும்.

ஆதரவு தாரீர்!

இது ஒரு கட்சிப் போராட்டம் அல்ல _ ஒரு இனத்திற்கான வாழ்வுரி-மைக்கான போராட்டம் _ மனிதநேயத்துக்கான போராட்டம். கட்சிகளைக் கடந்து தமிழர்களே, இப்போராட்டத்திற்கு ஆதரவு தாரீர் என்றும் ஒத்த கருத்துள்ளவர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்றும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்,

திராவிடர்கழகம்.

சென்னை

10.2.2010

http://viduthalai.periyar.org.in/

நன்றி - விடுதலை இணையம்

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.