Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டநிலையில் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டநிலையில் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு

kachchathivu-091.jpg

கச்சத்தீவில் நடக்கும் புனித அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்க தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த உள்நாட்டு போரினால், 1978ல் நிறுத்தப்பட்ட, கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா, 22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், 2001ல் நடந்தது. தொடர்ந்து இலங்கை அரசின் ஒத்துழைப்புடன், 2005 வரை நடந்த, அந்தோணியார் திருவிழாவில் இலங்கை மன்னார், நெடுந்தீவு பகுதியிலிருந்தும் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர். 2006ல் இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே, சண்டை உச்சத்துக்கு போனதால் பாதுகாப்பு கருதி, கச்சத்தீவு திருவிழா இலங்கை அரசால் நிறுத்தப்பட்டது.

தற்போது இலங்கையில் அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்தஆண்டு கச்சத்தீவு திருவிழாவை நடத்த இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர், கச்சத்தீவு திருவிழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கச்சத்தீவில் எதிர்வரும் 27ந் திகதி காலை 8மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி, மாலையில் திருப்பலி பூஜை, இரவு கலைநிகழ்ச்சிகள், 28ம் திகதி காலை திருப்பலி, தேர்பவனி என இரண்டுநாட்கள் திருவிழா நடக்கிறது.

இதில் தமிழகத்திலிருந்தும், பக்தர்கள் பங்கேற்க ஆயர் தோமஸ் சவுந்திரநாயகம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு ஞானபிரகாசம், சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் , ராமேஸ்வரம் வேர்கோட்டு புனித ஜோசப் சர்ச் பாதிரியார் மைக்கேல்ராஜ் ஆகியோருக்கு இது குறித்து அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளார். பாதிரியார் மைக்கேல்ராஜ் கூறியதாவது: இலங்கையில் போர் இருந்ததால் கடந்த காலத்தில் பங்கேற்றமுடியவில்லை. அமைதி திரும்பியுள்ளதால் மீண்டும் கச்சத்தீவு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பலரும் அங்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர், என்றார். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு, மன்னார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெப்ருவரி ,22ல் கச்சத்தீவு விழா குறித்த கூட்டம் நடக்க உள்ளது.

mahaveli.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

75 ஆயிரம் இருக்குதாம் அதில கொஞ்சமெண்டாலும் திரும்பி வர ஒரு சந்தப்பம் குடுபட்டிருக்கு. பண்டமாற்று வியாபாரத்தைவிட நல்லதுகளும் நடக்க வாய்ப்பிருக்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உபகண்மும் அதன் ஆளும் வர்க்கங்களும்.. இராமருக்குள்ளும் அந்தோனியாருக்குள்ளும் அல்லாவுக்குள்ளும் மக்களை அடிமைகளாக்கி வைத்திருக்கும் வரை.. அந்த மந்தைகளுக்கு சுதந்திரம்.. சுயநிர்ணயம் போன்றவற்றின் தார்மீக உரிமைகள் பற்றிய எண்ணம் இருக்கப் போவதே இல்லை.

மக்களை மதுவுக்குள்ளும் அடம்பர வாழ்க்கைக்குள்ளும் கட்டி வைத்து சிந்தனை.. புரட்சி என்று எல்லாவற்றையும் அடக்கி தனக்கு சாதகமாக நடத்திக் கொண்டிருக்கும் மேற்குலக சன நாய் அக ஆளும் வர்க்கத்திற்கு இணையாக இந்திய உபகண்டத்தின் சன நாய் அகம்.. கோவில் மசூதி தேவாலயத்துக்குள் அடங்கிக் கிடக்கிறது. மக்களின் உணர்வுகள்.. வெறும் அர்த்தமற்ற சொரூபங்களைச் சுற்றி பின்னப்படுவதே சன நாய் அகம்.

வந்திட்டாங்கையா கொஞ்சப் பேர்.. இதோ பார்.. சனம்.. கோவிலுக்கு போகுது.. எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கினம் என்று சொல்லிக் கொண்டிருக்க. இதைவிட மகிழ்ச்சியா இருந்து கொண்டுதான்.. சுதந்திரம்.. சுயநிர்ணயம்.. விடுதலை போன்ற எண்ணங்களையும் தலைவர்கள் எழுப்பினர் என்பதை வெகு லாவகமாக மறைத்துவிட்டார்கள்.

மக்களை துன்பத்துள் தள்ளி இன்று அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை வழங்குவதாகக் காட்டி அவர்களின் உணர்வோடு கலந்துவிட்டிருந்த தாயக விடுதலையை எதிரிமட்டுமல்ல.. தமிழர்களுள்ளும் எதிரிக்கு வால்பிடிக்கும் கூட்டங்களும் அழிக்கக் கங்கணம் கட்டி நிற்பதன் வெளிப்பாடே இந்த பகிரங்க அழைப்புக்களும் பிரச்சாரங்களும்.

ஆனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இடத்தில் 100,000 சிங்களப்படைகள் ஏனாம் காவல் நிற்கின்றன.. அதைக் கேட்க எவனுக்கும் திராணியில்லை. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இடத்தில் 300 கோடிக்கு ஏன் ரஷ்சியாவில் இருந்து ஆயுதம். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் ஏன் ராஜபக்சவிற்கு இந்திய கறுப்புப் பூனைகள் பயிற்சி அளிக்கப்பட்ட குழுக் கொண்டு பாதுகாப்பு..???! பயங்கரவாதம் அழிக்கப்பட்ட நிலையில் ஏன் இன்னும் 100,000 மக்கள் தடுத்து வைப்பு..?? பயங்கரவாதம் அழிக்கப்பட்ட நிலையில் ஏன் இன்னும் உயர்பாதுகாப்பு வலயங்கள்..??! இவற்றைக் கேட்க நாதியில்லை.. அந்தோனியாருக்கு சொரூபம் சுமக்கிறதிலையும் நல்லூர் முருகனுக்கு காவடி எடுக்கிறதிலும் மடு மாதாவிற்கு கூடு சுத்திறதிலும் தான் விடுதலை இருப்பதாக ஊடகங்கள் சிலவும் செய்தி காவித்திரிகின்றன. அதுதான் வேதனை..! :D:):lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.