Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எச்சரிக்கை: தமிழ் பேசும் சிறுபான்மை இனங்களின் நாடாளுமன்ற பிரதி நிதித்துவத்தை சிதைத்து அவர்களை அரசியல் அநாதைகளாக்க பேரினவாத சக்திகள் முயற்சி – முக்கியஸ்த்தர்கள் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் சிறுபான்மை இனங்களின் நாடாளுமன்ற பிரதி நிதித்துவத்தை சிதைத்து அவர்களை அரசியல் அநாதைகளாக்க அனைத்து வியூகங்களையும் பேரினவாத சக்திகள் செய்து வருவதாகவும் இதற்கு துணைபோகும் வகையில் தமிழ் பேசும் சிறுபான்மையினக் கட்சிகள் இருக்கக் கூடாது எனவும் கல்விமான்கள் தொழில்சார் நிபுணர்கள் வர்த்தக துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் ஒருமித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் பேசும் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கும் வகையில் சிறுபான்மையின மக்களின் சார்பில் பல குழுக்களை களமிறக்குவதற்கும் கட்சிகளுக்கிடையே பிளவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஒரு நிலையில் பேசும் சமூகத்தின் இருப்பையும் எதிர்காலத்தையும் அதன் தலைவிதியையும் தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக இந்த பொதுத் தேர்தல் இருப்பதால் சிறுபான்மையினக்கட்சிகள் தூர நோக்குடன் செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ள இவர்கள் தமிழ் பேசும் சமூகம் ஐக்கியப்பட்டு துணிச்சலுடன் எடுக்கும் முடிவின் தீர்மானத்திலேயே தமிழ் பேசும் சமூகத்தின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது எனவும் கூறியுள்ளனர்.

இலங்கையில் தமிழ்ப்பேசும் சமூகத்தின் இருப்பையும் எதிர்காலத்தையும், தலைவிதியையும் தீர்மானிக்கும் முக்கிய பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வது தொடங்கியுள்ளது. இத் தேர்தலில் தமிழ்ப் பேசும் சமூகம் ஐக்கியப்பட்டு துணிச்சலாக எடுக்கும் தீர்மானத்திலேயே அதன் எதிர்காலமே தங்கியிருக்கின்றது.

மூன்று தசாப்த உள்நாட்டு யுத்தத்தின் பேரழிவுகளிலிருந்தும், மீளடியாமல் தவிக்கும் தடுமாறும் தமிழ்ப்பேசும் சமூகத்தின் மீது கடந்த மாதத்திய ஜனாதிபதித் தேர்தலையடுத்து இப்போது பொதுத்தேர்தல் ஒன்றும் பல வந்த மாகத் திணிக்கப்பட்டிருக்கின்றது.

கட்டுறுதியான அரசியல் கட்டமைப்பு ஒன்றையோ வலுவான அரசியல் தலைமைத்துவத்தையோ கொண்டிராத தமிழினத்தின் எதிர்காலம், இத் தேர்தல்களில் அவர்கள் வெளிப்படுத்தும் பிரதிபலிப்பை அணுகுமுறையை பொறுத்தே அமையப் போகின்றது என்பதை தமிழினத்தில் அக்கறை கொண்ட சமூகத் தலைவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

தமிழினத்துக்கும் பெரும் சவால் போரின் முடிவுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர்கள் தமது நீதி, நியாயமான அரசியல் அபிலாஷைகளை உறுதிப்பாட்டுடன் முன்னெடுக்கத்தக்க வலிமை மிகுந்த அரசியல் தலை மைத்துவம் அற்றவர்களாக இருக்கின்றார்கள் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. இந்நிலைமை ஒட்டுமொத்தமான தமிழினத்துக்கும் பெரும் சவாலாகும். இத் தேர்தலை சரியாகத் தமிழர்கள் எதிர்கொள்வதன் மூலமாக மட்டுமே இச்சவாலை வெற்றி கொள்ள முடியும்.

போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை. அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகள் எட்டப்படுவதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை.

அரசைப் பொறுத்தவரை தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்பைத் திருப்தி செய்யும் தீர்வை வழங்கும் எண்ணமே அதற்கு இல்லை என்பதும் வெளிப்படையானது. அதேசமயம், தனக்கு உகந்த உப்புச்சப்பற்ற ஒரு திட்டத்தைத் தீர்வு என்ற பெயல் தமிழர்கள் மீது கட்டி விடும் நோக்குடனேயே அது செயற்படத் தொடங்கியுள்ளது என்பதும் வெளியானது.

அரசியல் துணிச்சலுடன் குரல் எழுப்பும் தலைமை வேண்டும் இச்சூழலில் இன்றைய சூழலுக்குத் தேவையான அரசியல் துணிச்சலுடன் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பும் அரசியல் தலைமை ஒன்று இந்தத் தேர்தல் மூலம் வெளிப்பட்டால் மட்டுமே தமிழர்களுக்கு ஏதேனும் கொஞ்ச நஞ்ச மீட்சி கிடைக்கும் என்பது தெளிவு.

அரசியல் தீர்வொன்றின் அவசியத்தை அரசு புரிந்து கொள்வதற்கு வலியுறுத்தக்கூடிய வலுவான அரசியல் சக்திகள் இன்று தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.

அதன் காரணத்தினால்தான் சகல விடயங்களிலுமே அரசுடன் இணைந்து செயற்பட வேண்டுமென்று கூறுபவர்கள், புதிதாகத் தோன்றியிருக்கும் அரசியல் சூழ்நிலைக்கேற்றவாறு அரசியல் விசுவாசத்துடன் செயற்பட முயற்சிப்பவர்களாகத் தங்களைத் தாங்களே வர்ணித்துக் கொள்கிறார்கள். தமிழ் மக்களின் நலன்களை நீண்டகால அடிப்படையில் நோக்குகையில் அவர்களின் இந்த நிலைப்பாடு விவேகமானதாக இல்லை. எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று தீர்மானிப்பதற்கு முன்னதாக இன்று இருக்கக் கூடிய சகல தமிழ் அரசியல் கட்சிகளும் பழைய குரோதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டுமென்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளும் பயனற்றுப் போய்விட்டன.

வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டியவர்கள் தங்களுக்கான கட்டுறுதியான அரசியல் சமுதாயமொன்றை மீண்டும் உருவாக்குவதற்கான வாய்ப்பாக எதிர்வரும் பொதுத்தேர்தலைத் தமிழ் மக்கள் பயன்படுத்தியேயாக வேண்டும். அரசியல் ரீதியாகத் தமிழ் மக்கள் தங்களை முனைப்புறுத்துவதற்கு உறுதியான நாடாளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதைத் தவிர, தமிழ் மக்களுக்குத் தற்போது வேறு மார்க்கமில்லை.

ஏனைய சகல மார்க்கங்களும் அடைபட்டுப் போயிருக்கும் நிலையில் இதுவே ஒரே வழி.

அதனால் அடுத்த நாடாளுமன்றத்தில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்படக்கூடிய பிரதிநிதிகள் வரலாற்றுக் கடமையொன்றை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கப் போகிறார்கள்.

அந்தப் பொறுப்பை நிறைவேற்றக் கூடிய அரசியல் துணிச்சலும், நேர்மையும், கொள்கை உறுதிப்பாடும் விலை போகாத குணாதிசயம் கொண்ட கற்றறிந்த வேட்பாளர்களைக் களத்தில் நிறுத்தும் அணியினரைத் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்கால இருப்பை உறுதி செய்வதற்கான புதிய அரசியல் பாதையை வகுப்பதற்கான முதற்படியாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதென்பதே தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிச் சவாலாகும்.

இவ்வாறு புத்திஜீவிகள் அடங்கிய தமிழர் நலன்காக்கும் சமூகப் பிரதிநிதிகள் தமிழ் ஊடகங்கள் வாயிலாகத் தமிழ் மக்களுக்குச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்கள்.

தமிழ் பேசும் சமூகத்தின் இருப்பையும் எதிர்காலத்தையும் அதன் தலைவிதியையும் தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக இந்த பொதுத் தேர்தல் இருப்பதால் சிறுபான்மையினக் கட்சிகள் தூர நோக்குடன் செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ள இவர்கள் தமிழ் பேசும் சமூகம் ஐக்கியப்பட்டு துணிச்சலுடன் எடுக்கும் முடிவின் தீர்மானத்திலேயே தமிழ் பேசும் சமூகத்தின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது எனவும் கூறியுள்ளனர்.

globaltamilnews

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ லனகாவில் இருக்கும் ஆயுதக்குழு அரசியல்கட்சிகலையோ, இந்தியாவின் லஞ்ச ஊழல் கத்திக்குத்து கட்சிகளையோ தமிழர் இங்கு நம்பி இருக்கவில்லை.

மினக்கெட்டு தமிழ் ஈழத்தை எடுத்து விட்டு, இவர்களின் கையில் கொடுப்பதை தமிழ் முதுமொழியில் "குரங்கு கையில் பூமாலை" என்று கூறுவார்கள்.

இந்த அரசியல் என்று கூறி தம் குடும்பத்திற்கு சொத்து செர்போரை விட்டு, நாம் இப்போது உலகிற்கு ஸ்ரீ லங்காவின் தமிழ் ஜெனோசைட் பற்றி பரப்புரை நடத்துவதே மிக முக்கியம்.

பௌத்த சிங்களவன், அவன் வால்கள் = பொய்யன், தமிழன் சொத்துக்களை, நிலங்களை, ....... பறித்து வாழும் கேவலமானவன், பயங்கரவாதி, .....

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள் ...

சம்பந்தன் எந்த வால் என்பது விரைவில் தெரியும்

Edited by Aasaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.