Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுத் தேர்தல் காலத்தில் கட்டவிழும் போக்குகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தல் காலத்தில் கட்டவிழும் போக்குகள்

நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை ஒட்டி, தமிழர் கள் சம்பந்தமாகக் கட்டவிழும் இரண்டு விடயங்கள் இங்கு நோக்கற்பாலவையாக உள்ளன.

முதலாவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் கொள்கைப் போக்கையும் பெயரையும் சுவீகரித்துச் செயற்படும் சில தமிழர் தரப்புகளின் போக்குப் பற்றியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலமாகவும், வலு வாகவும் இருந்த காலத்தில் ஒரு விடயம் பல தரப்பினா லும் கவனிக்கப்பட்டு வந்தது. அது விடுதலைப் புலிகள் இயக்கம், அதனுடன் தொடர்புபடுபவர்கள் யாராக இருந் தாலும் அவர் அரசுத் தரப்பாக இருந்தாலும், சர்வதேசத் தரப்பாக இருந்தாலும் தமிழர் தரப்பாக இருந்தாலும் அந்த நபர்களையும் தரப்புகளையும் புலிகள் இயக்கம் வசமாகவும், வாய்ப்பாகவும், சந்தர்ப்பத்துக்கு ஏற்பவும் தனக்குப் பொருத்தமான விதத்திலும் பயன்படுத்திக் கொள்ளும். ஆனால் மறுவளமாக, அத்தரப்பு யாராக இருந்தாலும் அத் தரப்பினால் புலிகள் இயக்கத்தை அவற்றுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியாது. அதற்குப் புலிகள் இயக்கம் அனுமதியளித்தது கிடையாது; இடம் அளித்தது கிடையாது. இதுதான் கடந்த மே மாதம் வரை நிலைமை யாக இருந்து வந்தது.

ஆனால் கடந்த மே மாதத்தில் புலிகள் இயக்கத்தின் சிதைவோடு சகலவையும் மாறிவிட்டன.

விடுதலைப் புலிகளின் பெயரை நேரடியாகப் பயன் படுத்தாவிட்டாலும், புலிகளின் கொள்கைகள், கோட்பாடுகள், இலட்சியங்கள் போன்றவற்றைத் தொடர்ந்தும் தாங்கிப் பிடித்து அரசியல் நடத்துபவர்கள் தாங்கள் எனத் தங் களை அடையாளப்படுத்தி, அதன் மூலம் அரசியல் பண்ணவும், லாபம் தேடவும் முயற்சிக்கும் பல பிரகிருதிகளை இந்தத் தேர்தல் காலப் பிரசாரத்தின் போது நாங்கள் பரவலாகக் காண முடிந்துள்ளது.

விடுதலைப் புலிகள் இருந்தவரை புலிகளின் பெயரைப் பயன்படுத்தி எவரும் காரியமாற்ற முடியவில்லை. ஆனால் புலிகளின் சிதைவோடு, அவர்களின் பெயரையும், கீர்த்தியையும் தமக்கு வசமாகப் பயன்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்தும் பலர் தோன்றியிருக்கின்றமை தமி ழர்களுக்கு நேர்ந்த பெரும் துரதிஷ்டமின்றி வேறில்லை.

"தமிழர் தேசம்', "தேசியம்', "சுயநிர்ணய உரிமை' என்று பல்வேறு அரசியல் சொற்பிரயோகங்களை இலாவகமாகப் பயன்படுத்திக்கொண்டு, "புலி' முகமூடிகளை அணிந்தபடி, பலரும் தமிழர் பிரதேசங்களில் அரசியல் செய்யப் புறப் பட்டிருக்கின்றமை தமிழர்களுக்கு நேர்ந்த பெரும் பின்ன டைவின்றி வேறென்ன?

யதார்த்தக் கள நிலைவரங்களைப் புரிந்து, உள்வாங்கிக்கொண்டு, அவற்றுக்கேற்ப அரசியல் காய் நகர்த்தல்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழினம் இன்று உள்ளது.

ஆனால், யதார்த்தப் புறநிலை உண்மைகளை ஏற்றுக்கொள்ளாமல் அல்லது புரிந்து, உணர்ந்து கொள்ள முன் வராமல் இன்னும் கனவுலகக் கற்பனைகளில் சஞ்சரித்த படி சாத்தியப்பாடற்ற கோட்பாடுகளை முன்வைத்து, அவற்றின் அடிப்படையில் தமிழர்தம் ஒற்றுமையைக் குலைக்கவும், சீர்கெடுக்கவும் முற்பட்டுள்ள தரப்புகள் குறித்து தமிழர்கள் மிகுந்த எச்சரிக்கையாகவும், கவனத் தோடும் செயற்படவேண்டிய காலகட்டம் இது. இத்தகைய குளறுபடிகள், குசும்புத்தனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி தாங்கள் எழுதப் போகும் தீர்ப்பு மூலம் தகுந்த பதிலடி கொடுத்து, உரிய பாடத்தைச் சம்பந்தப்பட்டோ ருக்குத் தமிழ் மக்கள் போதிக்கத் தவறாது முன்வரவேண் டும்.

இதேசமயம், இலங்கைத் தமிழர் விடயத்தை ஒட்டி இலங்கை அரசுக்கு எதிரான கடும் போக்குக் கருத்து நிலைப்பாட்டை பிரிட்டன் உட்பட்ட சில மேற்கு நாடுகள் அண்மைக்காலத்தில் பரவலாகப் பிரதிபலித்து வருகின்ற மையையும் நாம் காணமுடிகின்றது.

இது, இலங்கை விடயத்தில் ஈழத் தமிழர்களுக்கு நியா யம் செய்யும் மேற்குலகின் நீதியான எத்தனம் போல வெளிப் பட்டாலும், இத்தகைய கடும் போக்கை இந்தச் சமயத்தில் மேற்குலகு வெளிப்படையாக மேற்கொள்வது, மறுபக்கத் தில் தென்னிலங்கை பௌத்த சிங்கள சக்திகளை அதன் ஆட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பின்னால் இன்னும் வலுவாகத் திரண்டு நிற்பதற்கு ஊக்குவிக்கும் என்பதையும், அப்படி நேர்வது ஈழத் தமிழருக்குப் பாதகமான அம்சமாகிவிடும் என்பதையும் மேற்குலகும் கவனிக்க வேண்டும்.

ஈழத் தமிழருக்கு நியாயம் செய்ய மறுக்கும் அநியாயம் இழைக்க முயன்று நிற்கும் கொழும்பு அரசுத் தலைமை யைத் தேவைப்பட்டால் மேற்குலகு கடுமையாகக் கையாள் வதில் தப்பில்லை. அப்படிச் செய்வது தவிர்க்க முடியாத தாகவும் இருக்கும். ஆனால் அதைக் கால, நேர, சமய, சந் தர்ப்பம் பார்த்தும் செய்வதும் முக்கியமாகும்.

"தமிழரின் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளை இரும்புக்கரம் கொண்டு அழித்து, நாட்டைக் காப்பாற்றிய எனது நற்செய லைப் பிடிக்காமல், மேற்குலகு எனக்கு எதிராகத் தீவிரப் போக்குக் காட்டுகின்றது. அந்த மேற்குலகின் முயற்சியை நாம் முறியடிப்பதாயின் இலங்கை மக்கள் எனக்குப் பின் னால் அணிதிரள வேண்டும்' என்ற கருத்தையே தனது தேர்தல் பிரசாரத்தின் மையப் பொருளாக்கி, இத்தேர்தலில் பெருவெற்றியீட்டி விடுவார் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ. ஆகவே மேற்குலகு காலம் பார்த்துத் தனது நட வடிக்கையை முன்னெடுப்பதே சிறந்ததும், பொருத்த மானதுமாகும்.

நன்றி - உதயன் இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.