Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசங்களின் பிராந்திய ஆதிக்கப்போட்டியை தன்னுடைய நலன்களுக்குச் சார்பாக திசை திருப்பியுள்ள ராஜபக்ஷ.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேசங்களின் பிராந்திய ஆதிக்கப்போட்டியை தன்னுடைய நலன்களுக்குச் சார்பாக திசை திருப்பியுள்ள ராஜபக்ஷ.

இலங்கையில் சீனாவின் கால்பதிப்பை உலக வல்லரசுகளுடன் இந்தியாவும் விரும்பவில்லை. அனால் புலிகள் ஒரு அங்கீகரிக்கப்படாத அமைப்பு என்பதாலும் அவர்களது போர் தந்திரோபாயச் செயற்பாடுகளும், அத்துடன் யாருடைய உதவியுமின்றித்தனித்து ஒரு சமுதாயத்தால் பலமாகக்கட்டி எழுப்பப்பட்ட ஒரு அமைப்பு என்பதாலும், சர்வதேசம் அவர்களை விரும்பவில்லை. புலிகளின் போர்ச்செயற்பாடுகளுக்கு ஈடுகொடுக்கமுடியாத உலகம் இவர்களை அழிப்பதென ஒருமனதாக முடிவெடுத்துத்தான் நோhர்வேயை மத்தியஸ்தமாக வைத்து அவர்களுக்குள் நுழைந்து வேவுபார்த்து உலகிலேயே தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்கி கொடூரமான முறையில் உலகப்போர் விதிகளையும் மீறி போர்தொடுத்து இராணுவரீதியாக ஒடுக்கப்பட்டது.

இப்படியான சர்வதேசத்தின் போக்கை ராஜபக்ஷ நன்றாக விளங்கிக்கொண்டிருந்தார். இருந்தாலும் சர்வதேசம் போரின்பின் போக்கை மாற்றலாம் என்ற எண்ணக்கருவும் இவருக்குத் தெளிவாகத்தெரிந்திருந்தது. இதனால் போர்க்காலத்திலேயே போரின் பின் சர்வதேச நிலைப்பாடுகளுக்கெதிரான கட்டமைப்பையும் சமாந்திராமாகச் செயல்படுத்தினார்.

அதாவது இந்தியா இணைத்தலைமையில் இல்லாவிட்டாலும், இந்தியாவை அந்நியப்படுத்தி புலிகளைத் தோற்கடிக்க முடியாது. மற்றைய நாடுகளின் ஆதரவும் ஒன்றாக ஒரு இரகசியமான அலைட் வோசஸ் என்ற ரீதியில் தான் புலிகளுடனான ஒரு தலைப்பட்சமான போர் தொடுக்கப்பட்டது.

போர் முடிந்ததும் மேற்குலகமும், இந்தியாவும் சிங்கள அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் கொண்டுவரும் என்பதையும் தெளிவாகப்புரிந்து கொண்ட சிங்களம் கூடவே சீனாவை அங்கு இருத்திவிட்டது. இதனால் சிங்களத்தின் மீதான மேற்குலகத்தினதும், இந்தியாவினதும் பாய்ச்சல்கள் முடியாது போய்விட்டன. சீனா ஒரு வல்லரசு. வல்லரசுடன் வல்லசுகள் நேரடி மோதல்கள் விரைவாக இடம்பெறாது. இதனால் ராஜபக்ஷ ஒன்றுக்கொன்று எதிரான நாடுகள் எல்லாத்திற்கும் இடம் கொடுத்து தாளம் போட்டுக்கொண்டிருக்கின்றார்.

சீனாவிற்குத் தேவையான எல்லாவணங்களையும் இரகசியமாக வழங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு ராஜபக்ஷ ப+ச்சுற்றிக்கொண்டிருக்கின்றார். தமிழர்களைக் காலம் காலமாக ஏமாற்றிய விளையாட்டைச் சர்வதேசத்துடன் ஆரம்பி;த்து இருக்கின்றது. சிங்களம். சிஙகளவனின் ஏமாற்றுவித்தைக்கு இப்போது உலகமே பலியாகிவிட்டது.

தொட்டிலையும் ஆட்டிப்பிள்ளையையும் கிள்ளிவிட்ட இந்தியா, இப்போ கிள்ளவும் முடியாமால் ஆட்டவும் முடியாமல் தவிக்கின்றது. என்னதான் சந்திப்புக்களை மேங்கொண்டாலும் சிங்களம் அசைவது போல அலைந்து அசையாமல் இருக்கின்றது. இதனால் குற்றப்பத்திரிகை, மனிதஉரிமைமீறல்களைத்தூக்கிக்காட்டி விரட்டுகின்றது. ஆனால் இவர்கள் எதைத்தரமாட்டோம் என்று சொன்னாலும் சீனா அதைவிட பலமடங்கு இரகசியமாக இலங்கைக்குத் தள்ளுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் சரத்தை நிறுத்தி தன்னுடைய பொம்மையாக்கத் துணிந்த மேற்குலத்திற்கு, சரத்தின் கைது மேற்குலகத்திற்கு ஓங்கி அடிக்கப்பட்ட ஒரு அடியாகும். ஆனால் மேற்குலகம் அதை வெளிப்படையாகப் பேசமுடியாதல்லவா?

70,000க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதை ஊடகங்களின் வாயைமூடி மக்களுக்குச் செய்திகள் செல்லாது மறைத்த சர்வதேசம். சரத்தின் கைதைப் பெரிதாகப் பறைசாற்றியது. இன்றும் புலி ஆதரவாளர்களை கைது செய்யும் கைங்கரியம் மேற்குலகில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது.

இன்றைய பிராந்திய வல்லாதிக்கப்போட்டி நீறுபுத்த நெருப்புப்போல் இலங்கையில் இருக்கின்றது. தமிழர் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது போல் இருந்தாலும் அது உண்மையானது அல்ல. பிராந்திய வல்லாதிக்போட்டியின் கபடத்தனம் என்றே சொல்லவேண்டும்.

இன்று இவர்களின் வல்லாதிக்கப்போட்டியை தனக்குச் சாதகமாக்கி தமிழர்களை இரகசியமாக அழித்தும், தமிழர் நிலங்களை அபகரித்தும் சிங்களமயமாக்கிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷவின் கனவு எவ்வளவு காலம் நீடிக்கும்?

ஆனாலும் இங்கு சாதாமைப்போல் ராஜபக்ஷவில் கைவைக்க முடியாத நிலைமையை ராஜபக்ஷ உருவாக்கி வைத்துள்ளார். இங்கே இந்தியாவின் திட்டங்கள் தான் தோல்வி நிலையில் கலைந்து போயுள்ளது.

மேற்குலகங்களைச் சேர்த்துக் கொண்டு சிங்களம் மீது இந்தியா படையெடுக்குமா? அல்லது இலங்கையிடம் மண்டியிடுமா? இப்போது இலங்கையின் அமைதியைக் குலைத்த இந்தியாவை முக்கோணமாக நட்புறவுப் பகைமை நாடுகள் சூழ்ந்துள்ளது இந்தியாவின் பாதுகாப்பில் என்றுமில்லாத அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலை இல்ங்கையில் அமைதியைக் குலைத்த இந்தியாவிற்கு கிடைத்த நல்லதொரு பரிசு.

ஆயிரம் கேள்விக்குறிகள். எந்தக்கேள்விக்கு விடை கிடைக்குமென்பது எதிர்கால நகர்வுகளைப்பொறுத்தே இருக்கின்றது. இந்த நகர்வுகளை தமிழர்கள் தங்களுக்குச் சாதகமாக நகர்த்த புத்திக்கூர்மையுடன் செயல்படவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.