Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா, சீனாவின் அழுத்தம் காரணமாகவே சிறீலங்கா விவகாரம் தொடர்பில் பான் கீ மூன் அமைதியாக இருக்கிறார்:- பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜெராட் அரோட்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா, சீனாவின் அழுத்தம் காரணமாகவே சிறீலங்கா விவகாரம் தொடர்பில் பான் கீ மூன் அமைதியாக இருக்கிறார்:- பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜெராட் அரோட்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அழுத்தங்களே ஐ.நாவின்; செயல்திறனற்ற தன்மைக்கு காரணம் என பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜெராட் அரோட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஏன் செயல்திறனற்று உள்ளார் என ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்ன சிற்றி பிரஸ் ஐ.நாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜெராட் அரோட் இடம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அழுத்தங்களே பானின் செயல்திறனற்ற தன்மைக்கு காரணம் என பிரான்ஸ் நாட்டு தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த பெப்ரவரி மாதம் ஐ.நாவின் அரசியல் பிரதிநிதி லியான் பெஸ்கோ சிறீலங்கா செல்வார் என ஐ.நா தெரிவித்தபோதும் அவர் தனது விஜயத்தை கைவிட்டுள்ளதும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. பெஸ்கோ எதிர்வரும் வாரம் இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு செல்லும் போதும் அவர் சிறிலங்காவக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா தொடர்பான விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அதன் உறுப்பு நாடுகளிடம் இருந்து அதிக அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக ஜெராட் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் அவர் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நாவின் செயலாளர் நாயகம் அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும், இடம்பெயாந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் சில கோரிக்கைகளை விடுத்திருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள துணியவில்லை.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என ஐ.நவின் நீதிக்குப் புறம்பான படுகொலைகளுக்கு எதிரான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்ரன் கோரிக்கை ஒன்றை அண்மையில் பான் கீ மூனிடம் விடுத்திருந்தார். வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்களை வெள்ளைக்கொடிகளுடன் சரணடையுமாறு தெரிவித்ததில் ஐ.நாவின் இந்திய தரப்பு பிரதிநிதி விஜய் நம்பியாருக்கும் பங்களிப்புக்கள் உண்டு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.lankatimes.com/fullstory.php?id=25382

http://www.seithy.com/breifSpeach.php?newsID=24926&category=Speach

http://www.innercitypress.com/framb1sriran030410.html

------------

Share Your Comments

H.E. Mr. Gerard Araud

Permanent Representative of France to the UN

1 Dag Hammarskjold Plaza, 245 East 47th Street, 44th Floor

New York, NY 10017

Tel: +1 (212) 702-4900

Fax: +1 (212) 421-6889

E-mail: france@franceonu.org

Website: http://www.franceonu.org/

------------

Muthamizh

Chennai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.