Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனி, மார்ச் 13, 2010 21:11 | விட்டுக்கொடுப்பற்ற பேரும்பேசும் அரசியலையே இப்பொழுது மேற்கொள்ள வேண்டும் – ஆய்வாளர் அரூஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விட்டுக்கொடுப்பற்ற பேரும்பேசும் அரசியலையே இப்பொழுது மேற்கொள்ள வேண்டும் – ஆய்வாளர் அரூஸ்

ஈழத்தமிழ் மக்கள் அடிபடிந்து போகும், அல்லது சொல்வதைக்கேட்டுச் செய்யும் அடிபணியும் அரசியலைத் தவிர்த்து, தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் பேரம்பேசும் அரசியலை மேற்கொள்ள வேண்டும் என, படைத்துறை, அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்பாகவும், அதன் ஏதேச்சாதிகாரப்போக்கு பற்றியும் பல்வேறு கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பின்புலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக சிறீலங்கா அரசு கூறிய அன்றே, அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் தமது செயற்பாடுகளை மெளனித்திருந்த அன்றே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டிருக்க வேண்டும் என, படைத்துறை, அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

லண்டனைத் தளமாகக்கொண்ட ஐ.பி.சி வானொலிக்கு நேற்றிரவு கருத்துரைத்த அவர், யாழ்ப்பாணம், திருகோணமலை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்திய அதேவேளை, அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் விட்டுக்கொடுப்பு அரசியலில் இறங்கியிருப்பதால் அவர்கள் மீண்டும் பதவிக்கு வருவது உகந்தது அல்ல என்பதையும் மறைமுகமாகக் கூறினார்.

http://www.pathivu.com/news/5950/68//d,view.aspx

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுவாகக் காலூன்றியுள்ள இந்தக் காலப்பகுதியில், மேற்குலகும், இந்தியாவும் தமிழ் மக்களைப் பாவித்து சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க முனையும் இந்தக் காலப் பகுதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முற்படுவது போன்று விட்டுக்கொடுப்பு அரசியலை நடத்தாது, தமிழ் மக்கள் பேரம்பேசும் அரசியலை நடத்த வேண்டும் எனவும் அரூஸ் சுட்டிக்காட்டினார்.

மேற்குலகும், இந்தியாவும் ஈழத்தமிழ் மக்கள் விரும்பியது அனைத்தையும் உடனே பெற்றுத்தருவார்கள் என எதிர்பார்க்க முடியாது என்பதையும் குறிப்பிட்ட அவர், இருப்பினும் அவர்களது பகடைக்காயாக தமிழ் மக்கள் இருக்காது, தமது பலம் இழக்காது, ஒருங்கிணைந்து நின்று அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவிற்கு வழங்கிவந்த ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு வெளியான சில வாரங்களுக்குள் சீனாவும், இந்தியாவும், யப்பானும் இணைந்து சிறீலங்காவிற்கு 600 மில்லியன் வரையிலான அமெரிக்க டொலரை உதவித்தொகையாக அறிவித்துள்ளதையும் அவர் தனது அரசியல் ஆய்வில் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இங்கே அரூஸ் என்பவாரால் கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் முக்கியமானவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.