Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பான் கி மூனின் தீர்மானங்கள் பேச்சளவில் முடிந்துவிடுமா-சித்திக்

Featured Replies

இலங்கையின் வடபகுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உமை மீறல்கள்தொடர்பில் விசாரணைகளை மேற் கொள்வதற்கு வசதியாக ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் தாம் நிபுணர்கள் குழுவொன்றினை நியமிக்கப் போவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ ன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொலை பேசியில் தொடர்புகொண்டு தெவித்திருந்தார். அத்துடன் இவ்வாறானதொரு குழுவினை நியமிப்பதற்கான பூரண தத்துவார்த்த உரிமையும் தமக்கு இருப்பதாகவும் அவர் ஆணித்தரமாகத் தெவித்திருந்தார்.

ஐ.நா. செயலாளர் இப்படித் தெவித்திருப்பது இன்று இலங்கை அரசியலிலும் சர்வதேசத்திலும் ஒரு முக்கியத்துவமிக்க விடயமாகவே பேசப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து நீண்டகால மௌனத்தின் பின் திடீரென ஐ.நா. செயலாளர் இவ்வாறு தெவித்திருப்பது இலங்கை அரசாங்கத்தைச் சினங் கொள்ள வைத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஆளுந்தரப்பினர் இந்த விவகாரம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டியுள் ளனர்.

இலங்கையின் மனித உமைகள் குறித்து ஆராய்வதற்கு இவ்வாறானதொரு குழு அமைக்கப்படுவதற்கான அவசியமில்லையெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தக் குழு நியமிக்கப்பட்டால் அது இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால நகர்வுகளுக்கு தடையாக அமையுமென பான் கீ மூனிடம் தொலைபேசியிலேயே தெவித்திருந்தார்.

மேலும், இவ்வாறான நடவடிக்கைகள் போர் இடம்பெற்ற ஏனைய நாடுகள் தொடர்பில் எடுக்கப்படவில்லையென்றும் இலங்கை மீதான மனித உரிமை குற்றச்சாட்டுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலும் சில அரச சார்பற்ற நிறுவனங்களினாலுமே முன்வைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக் களத்தினால் இலங்கை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கையில் ஏற்கெனவே குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வடபுலத்தில் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம் பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட தாகவும் மனித உமைகள் அங்கு மதிக்கப் படவில்லையென்றும் இது தொடர்பில் நீதியான விசாரணை ஒன்று இடம் பெற வேண் டும், இதில் சம்பந்தப்பட்டோரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றெல்லாம் சில நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் அடிக்கடி தெவித்து வருகின்றன.

ஆனால், இலங்கை அரசாங்கமோ அவ்வாறான எந்த மனித உமை மீறல்களும் இலங்கையில் இடம்பெறவில்லையென்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினையே தாம் இராணுவ நடவடிக்கைகள் மூலம் முற்றாக அழித்ததாகவும் இலங்கை அரசு தெவித்து வருகிறது.

அமெக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமது கூடிய கவனத்தைச் செலுத்தி வருகின்றன. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நியாயமான விசாரணையொன்று நடத்தப்படுவதன் அவசியம் தொடர்பில் வலியுறுத்திய பிரதான நாடுகளில் ஒன்றாக அமெரிக்காவே உள்ளது.

இவ்வாறு சில நாடுகளும் பல சர்வதேச அமைப்புகளும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள், யுத்த கால குற்றச் செயல்கள் தொடர்பில் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன் விசாரணை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வந்த நிலையில், அடுப்பங் கரைப் பூனையாக தூங்கிக் கிடந்த ஐ.நா. இன்று தன்னைச் சுதாகரித்துக் கொண்டு யுத்தக் குற்றங்கள் தொடர்பாகவும் நிபுணர் குழு குறித்தும் வாய் திறந்துள்ளது.

இலங்கையின் வட பகுதியில் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மிடையில் யுத்தம் உச்ச கட்டத்தையடைந்திருந்தபோது இருதரப்பினராலும் புரியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் இந்த பான் கீ ன் கடந்த காலங்களில் மென்மையான இராஜதந்திரப் போக்கைக் கடைப் பிடித்தவரென்று விமர்சிக்கப்பட்டதனையும் இங்கு நாம் நினைவு கொள்வது அவசியம்.

அதுமட்டுமல்ல, இலங்கை அரச படைகள் நிராயுதபாணிகளானோரைச் சுட்டுக் கொல்வதாகக் கூறப்பட்டு வீடியோ காட்சிகள் வெளியானபோது இது குறித்துப் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் செயலாளன் விசேட பிரதிநிதிகளில் ஒருவரான பிலிப் அல்ஸ்டன் விடுத்த கோக்கையைக் கூட பான் கீ மூன், அது அல் ஸ்டனின் சுதந்திரமான செயற்பா டும் கருத்து மாகும் எனத் தெவித்திருந்தார் வடக்கில் யுத்தம் இறுதிக் கட்டத்தையடைந் திருந்தபோது அங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக சர்வதேசத்திடமிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தபோது உரிய நேரத்தில் உரிய நட வடிக்கைகளை எடுக்கத் தவறிய இந்த ஐ.நா., இன்று விசாரணை தொடர்பில் குழு அமைக்கும் உரிமை இருப்பதாகக் கூறிக்கொள்வது ஒரு வகையில் கேலிக் கூத்தõனதே.

தமக்கு உள்ளதாக ஐ.நா. இன்று கூறிக்கொள்ளும் உரிமைகளையும் அதிகாரங்களையும் அன்று பாவித்திருந்தால் ஐ.நா. குறிப்பிடும் மனித உரிமை மீறல்களும் யுத்தக் குற்றங்களும் இடம்பெறாமல் அன்றே சிலவேளைகளில் தடுத்திருக்கவும் முடியும்.

கடந்த வருடம் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பான் கீ மூன் வவுனியா அகதி காம்களுக்கு மட்டும் சென்று பார்வையிட்டார். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தார். அத்தோடு அவர் தனது பணியை முடித்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் இலங்கை விவகாரம் தொடர்பில் உண்மையான அக்கறையுடன் செயற்பட்டாரா என்பதும் கேள்விக்குறியே.

இலங்கைத் தமிழர்களுக்காக சர்வதேசமே குரல் எழுப்பியபோது இடையிடையே தானும் சாட்டுக்காக ஏதாவதொன்றைச் சொல்லிச் சமாளித்தவர்தான் இந்த பான் கீ மூன். இந்த நிலையில் இன்று அவர் இலங்கைத் தமிழ் மக்கள்பால் திடீர் அன்பு கொண்டவராகவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி யைத் தட்டிக் கேட்பவராகவும் மாறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் என்ற வகையில் இலங்கையில் தலையிடுவதற்கான அதிகாரம் உரிமையும் இப்போதுதான் இவருக்குக் கிடைத்துள்ளதா?

யுத்தம் டிவடைந்து ஒரு வருடத்தை அண்மிக்கும் நிலையில் யுத்தகால மனித உரிமைகள் தொடர்பில் இன்று ஒரு விசாரணைக் குழு நியமிப்பதால் என்ன பயன்தான் கிடைக் கப்போகிறது? ரணகளமாகக் காணப்பட்டதாகக் கூறப்படும் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் வெற்றித் தூபிகள் நிறுவும் முயற்சிகள் இன்று இடம்பெற்று வருவதாகத் தெவிக் கப்படுகிறது. அதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த இறுதிக் காலகட்டத்தில் அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், யுத்தமுனையில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலி களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் உட்பட ஏனைய புலி உறுப்பினர் களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு அவர்களின் அஸ்தி கடலில் தூவப்படவில்லை. வீசப்பட்டு விட்டதென்று குறிப்பிட்டிருந்தார்.

யுத்த கால குற்ற விசாரணை என்று ஒன்று வரும்போது தடயங்கள், இடம்பெற்ற இடங்கள் போன்றனவும் கவனத்தில் கொள்ளப்படுவது வழமையே. ஆனால், அவை அனைத்தும் இன்று இல்லாத நிலையில். விசாரணைகளும் நிபுணர் குழுக்களின் ஆலோசனைகளும் குறித்த விடயத்துக்கான சரியான முடிவை வழங்குமா என்ற விடயம் கூட ஐ.நா. செயலாளருக்குத் தெரியாமல் போய்விட்டது போல் உள்ளது.

கடந்த வருடம் மே மாதம் இலங்கை வந்திருந்தபோது இலங்கை ஜனாதிபதிக்கும் தமக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டு அறிக்கையை ஒட்டியதாகவே இந்த உத்தேச நிபுணர் குழு அமைக்கப்படுவதாக பான் கீ ன் இப்போது தெவித்துள்ளார். அவ்வாறெனில் இவ்வளவு காலதாமதமாகவா இந்தக் குழுவை அமைக்க வேண்டும்?

இதேவேளை, மே மாதம் இலங்கை வந்திருந்த போது இலங்கை ஜனாதிபதிக்கும் தமக்குமிடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டு அறிக்கையை ஒட்டியதாகவே இந்த உத்தேச நிபுணர் குழு அமைக்கப்படுவதாக பான் கீ ன் இன்று கூறியுள்ள நிலையில், இவ்வாறான நடவடிக்கையானது, அழைக்கப்படாததும் பொருத்தமற்றதுமான விடயமென இலங்கை ஜனாதிபதி தெவித்துள்ளார். இதில் யார் கூறுவது உண்மை?

இது இவ்வாறிருக்க, இலங்கையின் ஸ்திரத் தன்மையைச் சீர்குலைக்க ஐக்கிய நாடுகள் சபை ஊடாக பயங்கரவாத ஊக்குவிப்பு நாடுகள் யற்சிப்பதாக அமைச்சர் தி..ஜயரத்ன குற்றம் சாட்டியுள்ளார். முரண்பாடுகளை ஏற்படுத்தி, இன ஒற்றுமையைச் சீர்குலைத்து நாட்டில் மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த சிலர் யற்சிப்பதாகவும் இலங்கை சுயாதீனமிக்க நாடென்ற வகையில் அவ்வாறான நிபுணர்கள் குழுக்களை அமைக்கத் தேவையில்லை யென்றும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் அல்ல, அவரை விட பெரிய மனிதர்களின் அழுத்தங்களுக்குக் கூட இலங்கை ஜனாதிபதி நிச்சயம் அடிபணிய மாட்டாரென்றும் அமைச்சர் ஜயரத்ன உறுதிபடக் கூறியுள்ளார். இவற்றினையெல்லாம் பார்க்கும்போது பான் கீ னின் மே மாத விஜயத்தின்போது இவ்வாறான நிபுணர் குழு அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதா என்ற கேள்வி கூட எழத்தான் செய்கிறது.

இதேவேளை, இது தொடர்பில் அணிசேரா நாடுகள் அமைப்பும் இன்று வாய் திறந்துள்ளது. அதன் கருத்துகள் இலங்கைக்குத் தாலாட்டாகவே உள்ளன.

தனிப்பட்ட நாடுகளை இலக்கு வைத்து ஐக்கிய நாடுகள் சபை செயற்படுவதனை அணிசேரா நாடுகள் அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகவும் இவ்வாறானதொரு நடவடிக்கை அணிசேரா மற்றும் ஐ.நா.

சாசனங்களுக்கு முரணானது எனவும் இந்த அமைப்பின் ஒத்துழைப்புப் பிவின் தலைவரும் ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதியுமான அப்துல் அஸீஸ் ஐ.நா. செயலாளருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெவித்திருந்த பான் கீ ன், சர்வதேச மனிதாபிமான மனித உரிமைகள் சட்ட மீறல்கள் தொடர்பாக பகாரம் காண்பதற்காக பதிலளிக்கும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவது தொடர்பான விடயங்களை கூட்டறிக்கை உள்ளடக்கியுள்ளதெனக் கூறியுள்ளார்.

இலங்கையில் மனித உமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை தனக்கு நேரடியாககச் சமர்ப்பிப்பதற்காக மட்டுமே இந்தக் குழு நியமிக்கப்படுமென பான் கீ மூன் கூறியுள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் தன்னால் அமைக்கப்படவுள்ள நிபுணர் குழு தொடர்பில் இன்று எழுந்துள்ள விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதில் பான் கீ ன், தற்போது காட்டி வரும் அக்கறையென்பதும் கூட இப்போது காலம் கடந்த ஒரு செயற்பாடாகவே கருதமுடியும்.

எது எப்படியிருப்பினும், யுத்தம் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தபோது அல்லது அதன் பின்னரான குறுகிய காலத்துக்குள் இது தொடர்பான நடவடிக்கைகளில் பான் கீ ன் ஈடுபட்டிருப்பின் நிச்சயம் அது பெரும்பாலும் நன்மையளித்திருக்கலாம். அவரது நோக்கங்களும் நிறைவேறியிருக்கவும் முடியும். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது.

இலங்கை அரசானது தனது புத்திமிக்க ராஜதந்திர செயற்பாடுகளினால் ஒரு சில நாடுகள் தவிர்த்து சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்று வருகிறது. உள்ளூரில் சில விட்டுக் கொடுப்புகளையும் தளங்களை அமைப்பதற்கான வசதிகளையும் வழங்கியுள்ளதனால் இலங்கைக்கு எதிரான எந்தக் குற்றச்சாட்டுகளும் சர்வதேசத்தில் எடுபடப் போவதில்லை. பெரும்பாலான நாடுகள் இன்று இலங்கை அரசின் குரலாகவே உள்ளன. தமது நலன்களைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றப் புறப்பட்டுள்ளன.

இதனை அடிப்படையாகக் கொண்டே, ஐக்கிய நாடுகள் செயலாளர் அல்ல, அவரை விட பெரிய மனிதர்களின் அழுத்தங்களுக்குக்கூட இலங்கை ஜனாதிபதி நிச்சயம் அடிபணியமாட்டாரென்று அமைச்சர் தி.. ஜயரத்ன உறுதிபடக் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி, அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் ஒரு கருத்தினை அண்மையில் தெவித்திருந்தார், அதாவது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிலோ அல்லது வேறெந்தப் பிரிவிலோ இலங்கைக்கு எதிராக எந்த யோசனை கொண்டு வரப்பட்டாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அவை தோற் கடிக்கப்படுமெனவும் சீனா, ரஷ்யா, இந்தியா, தென்னாபிக்கா போன்ற நாடுகள் எமது பக்கம் உள்ளனவென்றும் அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிரான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அவை இரத்து உரிமை அதிகாரத்தின் (வீட்டோ) மூலமாக இரத்துச் செய்யப்படுமென்பதனையும் அவர் சூசகமாகத் தெவிக்கத் தவறவில்லை.

இவற்றினையெல்லாம் கருத்திற்கொண்டு பார்க்கும்போது ஐக்கிய நாடுகள் செயலாளன் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் என்பது அவரது பேச்சளவிலேயே தொடர்ந்தும் இருக்கலாம். அவ்வாறு நடைறைப்படுத்த அவர் முயற்சித்தாலும் அது வெற்றியளிக்குமா என்பதும் கேள்விக்குறியே.

http://www.tamilarkal.com/index.php?option=com_content&view=article&id=164:2010-03-21-02-17-42&catid=66:2010-03-12-15-06-55&Itemid=147

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.