Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் நடக்கும் போதும் நாம் மக்களுடன் இருந்தோம் த.தே.கூ. தலைவர் எங்கே நின்றார்? த.தே.ம.மு வேட்பாளர் கண்மணி

Featured Replies

போர் நடக்கும் போதும் நாம் மக்களுடன் இருந்தோம் த.தே.கூ. தலைவர் எங்கே நின்றார்? த.தே.ம.மு வேட்பாளர் கண்மணி

திருமலை நிருபர்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 23, 2010

kanmani

வன்னியில் போர் நடைபெறும் போதும், போர் நடக்கும் போது ஆயிரக்கணக்கான மக்கள் திருமலைக்கு கப்பலில் கொண்டுவரப்பட்டபோதும் கூட்டமைப்பின் தலைவர் எங்கு நின்றார்.ஒரு முறை வந்து பார்த்தாரா? நாங்கள் மக்களுடன் நின்றோம். என்று கூறியுள்ளார் த.தே ம.மு வேட்பாளர் கண்மணி அம்மா.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த அகதி முகாம்களில் தங்கியுள்ள எமது உடன்பிறப்புக்களை சந்திக்க முடியாதவர்கள் தமிழ் மக்களுக்காக தேசியம் பேசி வருகின்றார்கள். திருக்கோணமலை பொது வைத்தியசாலைக்கு காயமடைந்தவர்கள் அழைத்து வரப்படும்போது அதனை கண்டு கொள்ளாதவர்கள் இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

மக்கள் பிரச்சனைகளை சந்திக்கும்போது திருமலைக்கு வராத கூட்டமைப்பு தலைவர் தேர்தல் காலத்தில் இங்கு வந்து மக்களிடம் தீர்வு பற்றிப் பேசுகின்றார். இவர்களை நீங்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் என கண்மணி அம்மா தனதுரையில் கூறினார்.

கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும் - திருமலை முதன்மை வேட்பாளா; கெளரிமுகுந்தன்

கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும். கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு கோட்பாடுகளை கைவிட்டுவிட்டு உரிமை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். இரா.சம்பந்தனுக்கும் எமக்கும் எவ்வித தனிப்பட்ட விரோதங்கள் கிடையாது. இவ்வாறு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் திருக்கோணமலை முதன்மை வேட்பாளர் ச.கௌரிமுகுந்தன் தெரிவித்தார்.

திருக்கோணமலை வடக்கு மூன்றாவது மைல்கல்லில் ஆனந்தபுரி என்னும் இடத்தில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தேர;தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர; வரதராஜா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தலைவரும், வேட்பாளருமான த.காந்தரூபன், திருக்கோணமலை நகர சபை உறுப்பினரும் வேட்பாளருமான திருமதி கண்மணி அம்மா இரத்தினவடிவேல் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார;கள்.

கௌரிமுகுந்தன் அங்கு தொடர;ந்து உரையாற்றுகையில், சுதந்திர போராட்டம் வீழ்த்தப்பட்ட பின்னர; தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர; இரா. சம்பந்தனின் சுயரூபம் தெரிகின்றது. இவரைப்பற்றி நீங்கள் விரைவில் நன்கு அறிவீர;கள். உப்பில்லா பண்டம் குப்பையிலே இது பழமொழி. அதுபோன்று கொள்கையில்லா கட்சியும் குப்பையிலே. இவ்வாறாக கொள்கை இல்லாத தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமைத்துவமும் விரைவில் தூக்கி எறியப்படும்.

தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவர;ளைப் பார;த்து சம்பந்தன் நேரடியாகவே கேட்டுள்ளார;, நீங்கள் எல்லாம் விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டவர;கள் என்று, புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர; இத்தலைவர;கள் தங்களது சுயரூபத்தை வெளிக்காட்டத் தொடங்கி விட்டார;கள். போராட்டத்தில் மரணித்த வீரா;;களின் தியாகங்களை மறந்து பிரதிநிதித்துவம் கேட்கின்றார;கள். கொள்கையை விட்டுவிட்டு பிரதிநிதித்துவம் எமக்குத் தேவையில்லை. இதனால் நாம் எதனை சாதிக்கப்போகின்றோம்.இதன் காரணமாகவே தமிழ் தேசியக் கொள்கைளை முன்நிறுத்தி நாம் தனித்து தேர;தலில் போட்டியிடத் தீர;மானித்தோம்.

அரசாங்கத்துடன் இணைந்து நான் செயற்படுவதாகவும். அவர;களிடம் இருந்து பெருந்தொகையான பணத்தை நான் வாங்கியுள்ளேன் என்று இவர;கள் பிரசாரம் செய்து வருகின்றனர;. அப்படி நான் அரசாங்கத்திடம் இருந்து பணம் வாங்கியிருந்தால், தமிழ் மக்களை நான் நன்றாக வைத்திருப்பேன். இதனை அவர;கள் நிரூபிக்கட்டும். அப்படி நிரூபிக்கும் பட்சத்தில் எதிர;காலத்தில் நான் தேர;தல்களில் பங்கெடுப்பதை விடுகின்றேன். அத்துடன் அரசியல் வாழ்வில் இருந்தும் ஒதுங்கிக் கொள்கின்றேன்.

கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே எதிர;வரும் பொதுத்தேர;தலில் கொள்கையில் பிடிப்புள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும எங்களுக்கு உங்கள் வாக்குகளை அளித்து தமிழ் தேசியத்தின் கொள்கையினை எடுத்துகாட்டுஙகள் என்று கெளாpமுகுந்தன் தெரிவித்தார;.

உரையின் ஒலிவடிவம் இணைக்கப்பட்டுள்ளது

பிரதேசசபை உறுப்பினா; காந்தரூபன்

பிரதேச சபையின் தலைவர; த.காந்தரூபன் அங்கு உரையாற்றுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் திருக்கோணமலை மாவட்டதில் தமக்கென்று ஒரு அலுவலகத்தை வைத்துக் கொள்வதற்கு தவறி விட்டனர;. ஆனால் அயல்நாடான இந்தியாவின் தலைநகரில் அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர;. இந்தியாவின் கொள்கைப்படி இவர;கள் செயற்படுகின்றார;கள்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்வதைக் காட்டிலும் இந்தியாவின் நலனில் அக்கறை கொள்பவர;களாக செயற்படுகின்றார;கள். எமது மக்கள் அல்லபடும்போது வந்து கவனியாதவர;கள், இப்போது தேர;தல் காலத்தில் முகாமிட்டு மக்கள் முன் வந்து செல்கின்றனர;. நாம் அல்லல் படும்போது பாதுகாப்பு இல்லை என்று சொன்னவர;களுக்கு இப்போது மட்டும் எப்படி பாதுகாப்பு கிடைத்துள்ளது.

எமது முதன்மை வேட்பாளர; அரசின் பக்கம் சார;ந்துள்ளார; என்று தெரிவித்து வருகின்றார;கள். ஈழமக்ள் புரட்சிகர விடுதலை முன்னணியிள் தலைவர; சுரேஷ் பிரேமசந்தரன் மீன்பிடி அமைச்சின் ஆலோசகராக அரசுடன் இணைந்து செயற்படுகின்றார;. திருக்கோணமலை அபிவிருத்தி பற்றி ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்து கொண்ட எமது தலைமை வேட்பாளரை அரசின் பக்கம் சார;ந்து போய்விட்டார; என்று சொல்வது எவ்வளவு பொருத்தமானது ஏன்று அவா; கேள்வி எழுப்பினாh;.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%82-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ர வோட்டு கனகரத்தினத்தாருக்குத்தான்......அவர் இருந்தது எனக்கு வடிவா தெரியும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.