Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்பு

Featured Replies

மட்டக்களப்பில் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்பு

மட்டக்களப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் தேர்தல் பரப்புரை நிகழ்வும் பேர் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்ற நிகழ்வில் தமிழ் தேசிய ஆதரவாளர் பேர்எழுச்சியுடன் ஆர்வங்காட்டி பங்கெடுத்து வருகின்றனர். அங்கு உரையாற்றிய இரா. சம்பந்தன் இலட்சக்கணக்கான உயிர்களின் விலைகொடுப்பினை அடுத்து இன்றைய காலகட்டத்தின் தமிழ் தேசிய இனம் தமது விடுதலைக்கான மற்றொரு கட்டத்தில் கால் வைத்துள்ளது என தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற நிகழ்வு தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் ராசமாணிக்கம் நினைவு மண்டபத்தில் இடம்பெற்றது. முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன், மாவை சேனாதிராசா, மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அதன் பின்ர் ராசமாணிக்கம் அவர்களின் நினைவுருவச் சிலைக்கு வேட்பாளர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

அங்கு நடைபெற்ற நிகழ்விற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் செல்வராசா தலைமை தாங்கினார்.

நிகழ்வில் சிறப்புரை நிகழத்திய இரா. சம்பந்தன் தெரிவிக்கையில் ,

இலட்சக்கணக்கான உயிர்களின் விலைகொடுப்பினை அடுத்து இன்றைய காலகட்டத்தின் தமிழ் தேசிய இனம் தமது விடுதலைக்கான மற்றொரு கட்டத்தில் கால் வைத்துள்ளது. எமது மக்களுக்கான தீர்வு தொடர்பிலும் இலங்கையில் நடைபெற்றுவருகின்ற அடக்குமுறைகள் தொடர்பிலும் சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

சிறீலங்கா அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியைக் கொடுத்துவந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறீலங்கா அரசாங்கத்தாலேயே அறிவிக்கப்பட்ட நிலையிலே இந்தத் தேர்தலை அரசாங்கம் உதாசீனம் செய்யமுடியாது.

இதேபோன்று தற்போது தமிழ் மக்கள் என்ன நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பதை சர்வதேசமும் அறிந்துகொள்வதற்கு கூடுதல் அக்கறை கொண்டுள்ளது. எமது மக்கள் கொள்கையில் எந்தளவிற்கு தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள் என்பதை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்துவார்கள் என்றும் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

நிகழ்விற்கு தலைமை தாங்கிய செல்வராசா கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கையும் கிழக்கையும் சட்ட ரீதியாக பிரித்துள்ள அராசங்கம் எமது தமிழ் மக்களின் உணர்வுகளையும் அவர்களின் ஒரே கொள்கைகளையும் பிரிக்கமுடியாது. மீண்டும் எமது மக்கள் ஒன்று திரண்டு தமது ஒற்றுமையான பலத்தினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவார்கள்.

இனிவரும் காலங்களிலும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவோம் என்ற வாக்குறுதிகளை மட்டும் வழங்கி தமிழ்மக்களை ஏமாற்ற முடியாது என்றும் செல்வராசா தெரிவித்தார்.

அரியநேத்திரன் உரைநிகழ்தும் போது,

எத்தனை ஆயிரம் உயிர்கள் எங்களுக்காக தங்களை இழந்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சிதைப்பதற்கு அதனைப் பயன்படுத்தி தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சில நகர்வுகளை சில காரணங்களை முன்வைத்தே செயற்படுவதாகவும், வெளியேறிய சிலர் சில குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றார்கள்.

அவ்வாறாயின் அவர்கள் குற்றச்சாட்டுவது உண்மையாயின் நானும் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும்.

எமது மக்கள் இழந்த அனைத்திற்குமான தீர்வு எமக்கு கிடைத்தே ஆகவேண்டும். அவர்கள் சிந்திய இரத்தங்கள், இழந்த உயிர்கள், தொலைத்த சொத்துக்கள் எல்லாவற்றுக்கும் அநீதி இழைத்தவர்கள் ஏதோ ஒரு வகையில் பதில் சொல்லுவதற்கான காலம் வரும் என்றும் அரியநேத்திரன் மேலும் தெரிவித்தார்.

http://www.aathavanonline.com/

கூட்டமைப்பு வென்றால் மகிழ்ச்சிதான்..ஆனால் வெற்றிலை போடாதார் வெற்று இலையை மென்றுவிட்டால், த.கூ விற்கு (1/5) ஒன்று கிடைக்கலாம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.