Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேரகாலத்துடன் வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள்

Featured Replies

ஏழாவது பாராளுமன்றத்துக்கான 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறும். தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று மாலை தெரிவித்தார்.

சகல மாவட்டங்களிலும் நேற்றுமுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த பாதுகாப்புக் கடமைகளுக்காக பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப் படையினர் 80 ஆயிரம் பேர் கடமையிலீடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.பொலிஸார் நேற்று மாலையாகும் போது நாடு முழுவதும் கட்சிகளின் பிரசார விளம்பரங்கள் அனைத்தையும் அகற்றியுள்ளதாக தேர்தலுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

நேற்று மாலைநேரம் வரை 16,325 கட்அவுட்களும் 6356 பதாகைகளும் 21102 கொடிகளும் 28735 சுவரொட்டிகளும் அகற்றப்பட்டிருப்பதாக தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அதன் பின்னர் சுவரொட்டிகள், கட்அவுட்கள், பதாகைகள் ஒட்டப்படுவதை தவிர்க்கும் பொருட்டு சகல மாவட்டங்களிலும் விசேட பொலிஸ் ரோந்து சேவை இடம்பெற்றுவருவதாகக் கூறினார்.

வாக்களிப்பு அமைதியாகவும் சுமுகமாகவும் இடம்பெறுவதை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும்போது வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படும் வாகனத்துக்குப் பின்னால் ஒவ்வொரு வேட்பாளரதும் ஒரு பிரதிநிதி செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை, இன்றைய தேர்தலின்போது வாக்களிப்பு நிலையங்களுக்கோ, வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கோ வாக்காளர்கள், கட்சிகள், வேட்பாளர்களின் பிரதிநிதிகளோ, கையடக்கத் தொலைபேசி, கைப்பைகள் போன்றவற்றைக் கொண்டுசெல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.இன்றைய தேர்தலின் வாக்குகள் 22 நிலையங்களில் எண்ணப்படும். வாக்குகள் எண்ணும் நிலையப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தேர்தலைக் கண்காணிப்பதற்காக இலங்கை வந்திருக்கும் சர்வதேச தேர்தல் அவதானிகள் குழு யாழ். மாவட்டம் உட்பட 8 மாவட்டங்களில் அவதானிப்புகளை மேற்கொள்ளவுள்ளனர்.

வாக்களிப்பின்போது மோசடிகள், முறைகேடுகளில் ஈடுபடுவோர், குழப்பம் விளைவிப்போர் கைதுசெய்யப்படுவர் எனவும் வாக்குகள் எண்ணும் நிலையங்களில் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டால் அந்த வாக்களிப்பு நிலையத்தில் எண்ணும் நடவடிக்கை இரத்துச் செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்களிக்க முடியுமாக இருப்பினும் நேரகாலத்துடன் மக்கள் வாக்களித்துவிட்டு அமைதியாக வீடுகளுக்குத் திரும்புமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்ததும் வாக்குப்பெட்டிகள் மூடப்பட்டு "சீல்%27 வைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு கடும் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்படும். மாலை 7 மணியாகும்போது சகல வாக்குப்பெட்டிகளும் வந்தடையலாம் எனத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் கடைசிப் பெட்டி வந்தடைந்ததும் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகும். முதலில் தபால்மூல வாக்குகளே எண்ணப்படும்.

முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் வெளிவரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் 196 உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய 7620 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு கோடி 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த 45692 பேர் விசேடமாக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தேர்தலின்போது மாவட்ட அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை வருமாறு; கொழும்பு மாவட்டம் 19 பேர், கம்பஹா 18, களுத்துறை 10, கண்டி 12, மாத்தளை 05, நுவரெலியா 07, காலி 10, மாத்தறை 08, அம்பாந்தோட்டை 07, யாழ்ப்பாணம் 09, வன்னி 06, மட்டக்களப்பு 05, திகாமடுல்ல 07, திருகோணமலை 04, குருநாகல் 15, புத்தளம் 08, அநுராதபுரம் 09, பொலநறுவை 05, பதுளை 08, மொனராகலை 05, இரத்தினபுரி 10, கேகாலை 09.

வாக்களிப்புத் தினமான இன்று வேட்பாளர்கள் எவரும் தற்காப்புக்காக வழங்கப்பட்டிருக்கும் துப்பாக்கிகளைக் கொண்டுசெல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.கட்சிகள், குழுக்கள் பெற்ற வாக்குகளின் முடிவுகளே முதலில் வெளியிடப்பட்டு கட்சிகள் அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படும். தொகுதி அடிப்படையிலான முடிவுகள் முதற் கட்டமாகவும் அடுத்து மாவட்ட மட்ட முடிவுகளும் இறுதியாக மொத்த முடிவுகளும் அறிவிக்கப்படும்.

அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டதன் பின்னரே விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும். அந்த முடிவுகள் பெரும்பாலும் சனிக்கிழமை மாலையே அறிவிக்கப்படக்கூடியதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.

http://www.tamilarkal.com/index.php?option=com_content&view=article&id=238:2010-04-08-02-06-49&catid=60:2010-03-07-04-00-34&Itemid=111

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.