Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஞ்சக்கடலை...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காஞ்சக்கடலை.....

வகை : அனுபவம்... | author: பிரபாகர்

சில நிகழ்வுகள் நம்மை கடைசிவரை பல்லில் மாட்டிய பாக்கென நிரடிக்கொண்டே இருக்கும். அந்த விதத்தில் என்னை மிகவும் பாதித்த ஒன்று இந்த இடுகையில்.

இரண்டு வருடத்திற்கு முன் ஊருக்கு சென்றபோது தம்பி 'அண்ணா வரும்போது ஒரு நல்ல வாட்ச் வாங்கி வா' என்றான். ’யாருக்கு’ என கேட்டதற்கு ’காஞ்சக்கடலைக்கு’ என்றான். சட்டென சிரிப்பாய்தான் வந்தது.

'அதென்ன காஞ்சக்கடலை?' எனக் கேட்டதற்கு அவரின் பட்டப்பெயர் எனவும், அவர் அவனுக்காக செய்த உதவிகளையும் சொல்ல ஆரம்பிக்க, ஏற்கனவே சொன்னது நினைவிற்கு வர, சரி ஏற்கனவே சொல்லியிருக்கிறாய் என மட்டறுத்து, மறக்காமல் வாங்கிச் சென்று கொடுத்தேன். ஆனால் குறுகிய பயணமாதலால் அவரை சந்திக்க முடியவில்லை.

அடுத்தமுறை ஊருக்கு சென்றவுடன் குழந்தைகள், அப்பா, அம்மா என எல்லோரையும் பார்த்து அளவலாவிய பின் வீட்டிற்குள் என்னையே பார்த்துக்கொண்டு ஒருவர், நான் பார்ப்பேனா என. என் தம்பியினைக் கேட்டபோது அவர்தான் காஞ்சக்கடலை என சொன்னான். அருகில் சென்று கையை கொடுத்தேன்.

'நல்லாருக்கியா கண்ணு, விடியற்காலத்துல இருந்தே உனக்காகத்தான் காத்துகிட்டிருக்கேன்' என சொன்னார். 'நல்லாயிருக்கேன், ரொம்ப சந்தோசம், குளிச்சிட்டு வந்து உங்களைப் பார்க்கிறேன்' என சொல்லி அதற்கு ஆயத்தமாக, அவர் சரியென வெளியே சென்றார்.

அத்தை மெதுவாய் என்னிடம் வந்து, 'பிரபு, காஞ்சக்கடல கூப்பிடுறாப்ல' என சொல்ல, வாசலுக்கு சென்றேன். 'ம்... சொல்லுங்கண்ணா' என கேட்க, 'கள்ளு குடிக்க காசு கொடு' எனக் கேட்டார். (டாஸ்மார்க் இருந்தாலும் கிராமங்களில் கள் இருக்கத்தான் செய்கிறது, தரவேண்டிய மாமூலினைத் தந்து).

'அண்ணா, பணம் ஏதும் மாற்றாமல் வந்துட்டேன், குளித்துவிட்டு வந்து தம்பிகிட்ட வாங்கித் தருகிறேன்' என சொல்லி, சென்று பல் துலக்கி, மறந்துவிட்டுப்போன ஷாம்புவை எடுக்க வருபோது, வீட்டினுள் ஒரே பரபரப்பாக இருந்தது.

காஞ்சக்கடலை தூக்கு போட்டு இறந்துவிட்டாராம்... சரியாய் பத்து நிமிடங்களுக்கு முன்னால் பேசிக்கொண்டிருந்தவர் இப்போது முன்னாள். சட்டென தலையில் கைவைத்து உட்கார்ந்தேன். என்னிடம் காசுகேட்டுவிட்டு நேரே அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார். கூரை வீடு, தாழ்வான விட்டத்தில் தனது வேஷ்டியை விட்டத்தில் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு நின்றவாக்கிலே கழுத்தை பட்டென சொடுக்கி இறந்திருக்கிறார். (சென்று இறக்கிய அப்பா சொன்ன தகவல்)

இங்கு ஒரு தகவலை சொல்லியே ஆகவேண்டும், கிராமங்களில் இதுபோல் குடித்து தற்கொலை செய்துகொள்பவர்கள் மிகவும் அதிகம். ஏமாற்றங்கள், கோபம், குடும்பப்பிரச்சினை என பல காரணங்கள்.

அப்போது என் தம்பியிடம், 'திவா பணத்தை கொடுத்திருக்கலாமடா, கையில் இருந்தால் கொடுத்திருப்பேன், மனசுக்கு ஒரே உறுத்தலாய் இருக்கு' என சொன்னேன்.

'இல்லன்னா, பணம் திரும்ப வாங்கனும்னாவது உயிரோட இருந்திருக்கலாமே? அவர் ஒரு வாரமாவே சாகிறதா மிரட்டிகிட்டிருந்தாரு. எல்லாம் விளையாட்டுக்குன்னு நினைச்சிட்டோம்... எனக்கு இந்த வீடு கட்ட அவருதான் எல்லா உதவியும் செஞ்சாரு...' எனச் சொல்லி அவரைப்பற்றி இன்னுமொரு தகவலை சொன்னான்.

உங்களுக்கெல்லாம் தெரியும், கிராமங்களில் ஆண் குழந்தைகளுக்குத்தான் சரியான கவனிப்பு இருக்கும். அவர்களுக்குத்தான் காலை மாலை இரு வேளையும் தம்ளர் நிறைய பால் கொடுப்பார்கள், செய்யும் பதார்த்தங்களிலும் அவர்களுக்குத்தான் அதிகம் கிடைக்கும். இதனை பல வீடுகளில் கண்கூடாக கண்டிருக்கிறேன், அப்படி வளர்த்த பையன்கள் போட்டு பெற்றவரை உதைப்பதைப் பார்த்தும் துணுக்குற்றிருக்கிறேன்.

அவருக்கு ஒரு மகன், மகள். சரியாய் பத்து வருடங்களுக்கு முன் அவரது மகன் ஏதோ திருடிவிட்டதாய் அந்த தெருவிலுள்ளோர் எல்லோருமாய் சேர்ந்து குற்றம் சாட்ட, நேரே அவனை உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறார். பருத்திக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தினை நான்கு கிளாஸ்களில் உற்றிவைத்து மகனிடம் 'நீ குடித்துவிட்டு சாவு, இல்லை நாங்க மூணு பெரும் குடிச்சிட்டு சாகிறோம்' என சொல்லியிருக்கிறார்.

அந்த பையன் எவ்வளவோ போராடியும், மனைவி, மகள் என எல்லோரும் கதறியும் கேட்காமல்... கடைசியாய் அந்த பையன் எடுத்து குடித்துவிட்டானாம். உயிருக்கு போராடும் அந்த தருணத்தில் அக்கம் பக்கத்தார் காப்பாற்ற முயல, 'திருடன்னு சொல்லி அவனை அவமானப்படுத்துனீங்கல்ல, இப்ப என்னா மயித்துக்கு காப்பாத்த வர்றீங்க? அவனை காப்பாத்தினா நான் உசிரோட இருக்க மாட்டேன்' என ஆணித்தரமாக சொல்லிவிட கடைசியாய் அந்த பையன் துடித்து உயிரிழந்தானாம்.

அவர் இறந்த ஓரிரு நாளில் அவரின் மனைவியை வீட்டிற்கு சென்று பார்த்தேன். தலையில் நிறைய மல்லிகைப்பூ, நெற்றியில் பெரிய பொட்டு, மஞ்சள் தாலி... காரியம் வரை இருக்கும். அந்த அக்காள் என்னை பார்த்தவுடன் கதறி அழுதார்கள். 'உன்னைப் பத்தியும், தம்பி திவாவப் பத்தியும் தான் அதிகமா பேசிக்கிட்டு இருக்கும் கண்ணு, பொசுக்குன்னு இப்படி பண்ணிக்கிச்சி... என்ன பண்றது.... விதி'. பேச முடியாமல் கலங்கி அமர்ந்திருந்தேன்...

மறுபடியும் ஒரு நாள் பார்க்கும்போது அந்த அக்காவிடம் கேட்டேன், 'அக்கா உங்க பையனை மருந்து கொடுத்து சாவடிக்கும்போது, நீங்க கூட காப்பாத்த முயற்சிக்கலையா?' எனக்கேட்டேன்.

'அந்தாளு குணம் எனக்குத் தெரியும். சொன்னா கேக்காது, ரெண்டாவது அவன் பண்ணினது ரொம்ப தப்பு, எனக்கும் அவன் மேல அப்போ வெறுப்பாத்தான் இருந்துச்சி' என சொன்னார்கள்.

thx To

”வாழ்க்கை வாழ்வதற்கே”

http://abiprabhu.blogspot.com/2010/04/blog-post_20.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.