Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3.1 நாடு கடந்த தேசியமும் புலம் பெயர் தமிழ் மக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3. நாடு கடந்த அரசியல் கோட்பாடு

ஈழத் தமிழரின் புலப்பெயர்வும் புலம்பெயர்வும் அவர்களுக்கு நாடு கடந்த வாழ்க்கையை

உருவாக்கியிருக்கிறது. மரபார்ந்த நாடு-தேசியம் போன்ற எல்லைகளைக் கடந்து ‘நாடு

கடந்த தேசியம்’ என்ற புதிய நிலையை அவர்கள் எட்டியுள்ளனர். நாடு கடந்த தேசியம்

என்பது தமிழ் மக்களையும் அவர்களது பல்வேறு சமூக, பொருளியல், அரசியல்

நிறுவனங்களையும் அவர்கள் வாழுகின்ற நாடுகளின் புவியியல் எல்லைகளைத்

தாண்டி இணைக்கும் வழிமுறையாகும்.

உலகமயமாக்கல் நடைமுறையின் ஒரு விளைவான நாடு கடந்த தேசியம் என்பது

உலகமயமாக்கலின் சந்தைகளினை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டுக்கும் அப்பாற்

சென்று அரசியல் மற்றும் சமூக இயக்கங்களினை உலகந் தழுவிய நிலையில்

ஒருங்கிணைக்கும் செயன்முறையாக உருவாக்கம் பெற்றுள்ளது. சுற்றுச்சூழற்

பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றினை ஒத்த விடயங்களுக்கான

இயக்கங்களினை உலகம் பரந்ததாக முன்னெடுக்கும் அரசசார்பற்ற அமைப்புக்கள்

தங்களது செயற்பாடுகளினூடாக சர்வதேச அரசியற்தளத்தில் குறிப்படத்தக்களவு

செல்வாக்கினை நிலைநிறுத்தியுள்ளன. இச் செயன்முறையானது, அடக்குமுறைகளின்

காரணமாக தாயகங்களினை விட்டு ஏதிலிகளாக இடம்பெயர்க்கப்பட்டு சிதறிவாழும்

இனங்கள் தம்மை ஒருங்கிணைக்கவும், நாடுகள் கடந்த நிலையில் உருவாக்கப்படும்

இயக்கங்களினூடாக பொருத்தமான அழுத்தங்களினை உருவாக்கி தங்களது தாயகம்

நோக்கிய அரசியல் மற்றும் ஏனைய குறிக்கோள்களினை அடைந்து கொள்ளவும்

சிறப்பாக வழிசெய்கின்றது.

இந்த நூற்றாண்டின் அரசியலில் நாடு கடந்த தேசியமும் நாடுகளின் எல்லைகள்

கடந்த நிலையில் தொழிற்பட்டு வருகிற அரசியல் பொருளாதார உறவுகளும் முக்கிய

பங்கினை வகிக்கின்றன. நாடு கடந்த அரசியலும் நாடு கடந்த தேசியமும் ஈழத்

பக்கம் 7

தமிழர்களுக்கும் அவர்களது தாயகத்தின் விடுதலைக்கான வேட்கைக்கும்

பன்முகப்பட்ட புதிய வாய்ப்புக்களை வழங்குகின்றன. நமது நாடு கடந்த வாழ்க்கையின்

தர்க்கரீதியான தொடர்ச்சியே நாடு கடந்த அரசியலாகும்.

3.1 நாடு கடந்த்த தேசியமும் புலம ; பெயர் தமிழ் மக்க்களும்

புலம்பெயர்ந்த – புலம்பெயர்க்கப்பட்ட தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளிலுள்ள தமிழ்

மக்களோடும் தமது தாயகத்திலுள்ள மக்களோடும் நெருக்கமான உறவுகளைப் பேணி

வருகிறார்கள். அவர்களுடைய வாழ்வு அவர்கள் வாழும் நாடுகளின் தேசிய மற்றும்

புவியியல் எல்லைகளுக்குள் மட்டுமே குறுகி விடுவதில்லை. இவர்கள் நாடு கடந்த

சமூகமாக, பல்வேறு நாடுகளிலும் ஒரே நேரத்தில் வாழ்க்கை, உறவுமுறைகள்,

பொருளியல் தொடர்புகள், அரசியல் இணைப்புக்கள் என்பவற்றைப் பேணுபவர்களாக

மாறி விட்டனர். தாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் அரசியல், சட்ட

திட்டங்களுக்கு அமைவாக வாழ்ந்தாலும் நாடு கடந்த நிலை அவர்களுக்கு புதிய

அரசியல் சமூக வெளியை உருவாக்கியுள்ளது. ஈழத்தமிழர்களின் அரசியல் சமூக

நலன்களுக்கு உயிரூட்டம் தருவது இந்த நாடு கடந்த அரசியல் வெளியாகும்.

அதேவேளை, ஈழத்தில் வாழும் மக்களும் இந்த நாடு கடந்த வெளியுடன் பின்னிப்

பிணைந்துள்ளனர். புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் களத்தில் உள்ள தமிழ் மக்களும்

ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே உள்ளனர். இக் காலகட்டத்தின் தமிழ்த்

தேசியம் எனப் து பனமு; கபப் hட்டையும ; பனமு; க அடையாளங்களையும் வரவேறப் து.

ஜனநாயகப் பண்பு வாய்ந்தது.

புலம் பெயர் ஈழத் தமிழர்களிடையேயான ஒருங்கிணைவு என்பது அறியப்பட்டவிடயமே.

இலங்கைத் தீவினுள் தொடர்ச்சியாக தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும்

அடக்குமுறையினை எதிர்கொள்வதற்கும், தனது அடக்குமுறைச் செயற்பாடுகளினை

நியாயப்படுத்துவதற்காக சிறீலங்கா அரசு அனைத்துலக மட்டத்தில் முன்னெடுக்கும்

பரப்புரைப்போரினை முறியடிப்பதற்கும் புலம் பெயர் தமிழர்கள் தமக்குள்

ஒன்றிணைவதும் சமூகமட்ட ஒன்றிணைவுகளுக்கும் அப்பால் சென்று பலதளங்களிலும்

பல்வேறு புலம்பெயர் சமூகங்களுடன் அரசியல்ரீதியான ஒருங்கிணைப்பினைக்

கட்டியெழுப்புவதும் மிக அவசியமாகவுள்ளது.

3.2 நாடு கடந்த்த அரசியல்

நாடு கடந்த அரசியல் எனப் பொதுவாகப் பேசப்படும் போது அது உலகமயமாக்கலுக்கு

எதிரான போராட்டங்கள், பெண்ணியம் - பெண்விடுதலை இயக்கப் போராட்டங்கள்,

மனித உரிமைகளுக்கான போராட்டங்கள், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான

போராட்டங்கள் போன்றவற்றையே இதுவரை காலமும் குறித்து நின்றது. இத்தகைய

போராட்டங்கள் நாடு கடந்த நிலையிலும் தாக்கமானதாக இடம் பெற்று வருகின்றன.

ஒரு சில தேசிய விடுதலைப்போராட்டங்களுக்கு ஆதரவாக நாடு கடந்த இயக்கங்களும்

பணி புரிந்து வந்துள்ளன. இத்தகைய நாடு கடந்த அரசியலும் அவை சார்ந்த

போராட்டங்களும் வழமையான ஒரு தேசம் - ஒரு அரசு அல்லது ‘சர்வதேச உறவுகள்’

என்கிற நெறிமுறைக்குள் அடங்காதவை. அடக்கப்பட முடியாதவை. அங்கீகரிக்கப்பட்ட

பக்கம் 8

நாடுகள் அல்லது தேசிய அரசுகள் (யேவழைn – ளுவயவநள) சர்வதேச உறவுகளுக்கும்

சர்வதேச நிறுவன ஒழுங்கு முறைகளுக்கும் அடிப்படையாக உள்ளன. எனினும் நாடு

கடந்த அரசியல் இவற்றிற்கு அப்பால் தொழிற்படுவதால் இது புதிய ஒழுங்கு

முறைகளையும் புதிய நிறுவன அமைப்புக்களையும் வேண்டி நிற்கின்றது.

21 ஆம் நூற்றாண்டின் அரசியல் நாடு கடந்த அரசியலாகும். கடந்த காலங்களில்

தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு புலம் பெயர்ந்த – புலம் பெயர்க்கப்பட்ட மக்கள்

பெரும் பங்களிப்பை நல்கியுள்ளனர். ஐரிஸ் மக்கள், ய+தமக்கள் ஆகியோர் இவற்றிற்கு

நல்ல எடுத்துக்காட்டுக்களாகும். புலம் பெயர்ந்த ய+த மக்கள் இன்றுவரை இஸ்ரேலுக்கு

மிகுந்த உறுதுணையாக உள்ளனர். இத்தாலி, கெயிட்டி, குரோஷியா, எரித்திரியா,

எல்சல்வடோர் போன்ற நாடுகளின் அரசியலில் புலம் பெயர்ந்த மக்கள் பிரிக்க முடியாத

அங்கமாக உள்ளனர். புலம் பெயர்ந்த கெயிட்டி மக்களுக்கெனத் தனியான தேர்தல்

தொகுதியொன்று உண்டு. இஸ்ரேலிய தேர்தல்களில் வாக்களிக்க புலம் பெயர்ந்த

மக்கள் ஆயிரக்கணக்கில் திருப்பிப் போவது என்பது வழமையான ஒன்று. 1990 இல்

குரோஷியாவில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பேன்ஜோ துஜ்மான் புலம்

பெயர்ந்த குரோஷிய மக்களின் நிதி உதவியுடன் வெற்றி பெற்ற பிற்பாடு புலம்

பெயர்ந்த மக்களுக்காக 12 ஆசனங்கள் ஒதுக்கியிருந்தார். இந்தியாவின் பொருளாதார

மேம்பாட்டில் புலம் பெயர்ந்த இந்தியர்கள் பெருமளவு பங்களித்து வருவதும் இங்கு

குறிப்பிடத்தக்கது.

கடந்த 30 ஆண்டுகளாக புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் விடுதலைப்போராட்டத்திற்குப்

பேராதரவு வழங்கியது மட்டுமன்றி போரால் அவதியுற்று வந்த இலட்சக்கணக்கான

மக்களின் வாழ்க்கைக்கும் உறுதுணையாக இருந்து வந்துள்ளனர். இந்த நூற்றாண்டில்

நாடு கடந்த அரசியல் பெறுகிற முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கு இவை ஒரு

சில எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே. இந்தப் பின்னணியில்தான் நாடு கடந்த தமிழீழ

அரசாங்கம் ஒரு திருப்பு முனையாக அமையப் போகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.